கருத்தரங்கு 3அ - www.drdino.com - டாக்டர் கென்ட் ஹோவிந் - தமிழ் (Tamil) பல ஆண்டுகளாக, டைனோஸரஸினுடைய பழங்காலப் படிகப்பொருட்கள் வேதாகமத்திற்கு ஒரு பிரச்சனையாக எண்ணப்பட்டது. ஹய், என்னுடைய பெயர் எரிக். நீங்கள் பார்க்க இருக்கிற இந்தக் கருத்தரங்கமானது மிகவும் வலிமையுள்ளது........ டாக்டர் கென்ட் ஹோவிந் அவர்களால் கடந்த 30 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவைகள் இந்தக் கருத்தரங்கத்தில் இணைந்துள்ளன. இது புலனாகாத-விலங்கியல் என்கிற Crypto-Zoology துறையில் உள்ளது. மறைக்கப்பட்ட விலங்குகளின் ஆராய்ச்சியாக அது இருக்கிறது. இந்தக் கருத்தரங்கத்தின் தலைப்பு: "டைனோஸரசும் வேதாகமும்" -www.drdino.com கருத்தரங்கு 3அ - டாக்டர் கென்ட் ஹோவிந் - தமிழ் (Tamil) - மொழிபெயர்ப்பு: D.மந்திரி குமார், M.Sc. நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பதற்கு உங்களுக்கு நன்றி. இங்கே இண்டியானாவில் இருப்பது எனக்கு மேன்மையாக இருக்கிறது. எந்தனைபேர்கள் என்னுடைய கருத்தரங்குகளில் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறீர்கள்? அல்லது எனது வீடியோக்களில் ஒன்றைப் பார்த்திருக்கிறீர்கள்? சரி, எத்தனைபேர்கள் ஒன்றில்கூட கலந்துகொள்ளவில்லை? மேலும் எத்தனைபேர்கள் அந்தக் கேள்வியை விளங்கிக்கொள்ளவேயில்லை? நேற்றையதினம் போலவே மூன்றுபேர்கள். சரி. என்னுடைய பெயர் கென்ட் ஹோவிந். நான் 15 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளியில் அறிவியலைக் கற்றுக்கொடுத்தேன். தற்பொழுது, கடந்த 16 ஆண்டுகளாக ஒரு நற்செய்தியாளராக இருந்துவருகிறேன். படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸரஸ் பற்றிய பாடத்தைத் தற்பொழுது ஒரு ஆண்டிற்கு சுமார் 900 தடவைகள் நான் பேசுகிறேன். வேதாகமமானது வார்த்தையின்படி உண்மை என்றும், அறிவியலின்படி சரியாகவும் இருக்கிறது என்ற நிலையை நான் கற்றுக்கொடுக்கிறேன். நமது பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகிற பரிணாமக் கொள்கையானது, அமெரிக்க அரசியல் சட்டத்தை மீறின செயலாகும், பூமி கோளின் வரலாற்றில் அது ஊமையான மற்றும் ஆபத்தான மதமாக இருக்கிறது. நான் புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் வசிக்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது வளர்ந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து சற்றுத்தள்ளி இருக்கிறார்கள். தேவனைத் துதியுங்கள், நாங்கள் வெற்றியடைந்து வீட்டில் சுதந்திரமாக இருக்கிறோம். இதுவரை, எங்களுக்கு 4 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். தேவன் பெற்றோர்களுக்குக் கொடுக்கும் வெகுமதியாக அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் சோர்ந்துபோய் இருந்த நேரத்தில் உங்கள் சொந்தப் பிள்ளைகள் நம்பிக்கையை விட்டுவிடாமல் இருப்பதற்காக தேவன் கொடுக்கிறார். எனவே, பெற்றோர்கள் பொறுமையாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அவைகள் அனைத்திற்கும் மதிப்பு இருக்கும். எங்களது வீட்டின் அருகே என் குடும்பத்தினர்கள் வசிக்கிறார்கள். மேலும் அவர்கள் அனைவரும் ஊழியத்தில் பணிசெய்கிறார்கள். எனவே, கர்த்தரை நேசிக்கிற பிள்ளைகள் இருப்பது மிகவும் பெரிய காரியமாகும். என்னுடைய பிள்ளைகளில் இருவர் அங்கே மேஜையின் பின்புறம் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேமராவை இயக்கிக்கொண்டிருக்கிறார். புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் எங்களின் வீட்டின் பின்புற இடத்தில் டைனோஸரஸ் துணிகர நிலம் உள்ளது. நான் டைனோஸரஸை விரும்புகிறேன். எங்களுடைய தொலைபேசி எண்: 1-850-479-DINO, (1-850-479-3466) மற்றும் எங்களின் இணையதளம்: www.drdino.com டைனோஸரஸ் துணிகர நிலத்தின் தொலைபேசி எண்: 1-850-478-DINO, அல்லது ( 1-850-478-3466). நாங்கள் டைனோஸர்களை விரும்புகிறோம். ஆயிரக்கணக்கானப் பார்வையாளர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ஆயிரம் மக்கள் எங்களுடைய, டைனோஸரஸ் துணிகர நிலத்தைப் பார்வையிட்டபோது இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் அங்கு செய்கிற அனைத்திற்கும் அறிவியல் பாடமும் மற்றும் ஆன்மீகப் பாடமும் இருக்கிறது. தேவனுடைய மகிமைக்காக டைனோஸரஸைப் பயன்படுத்துகிற ஒரு பெரிய நேரம் எங்களுக்கு இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில், கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அதிகமான குழப்பம் என்னவெனில், வேதாகமத்தில் டைனோஸரஸ் எங்கே பொருந்துகிறது என்பதைப் பற்றித்தான். சென்ற இரவில் உணவு விடுதியில் ஒரு பெண்ணினிடம் இதைப்பற்றி நான் சாட்சி சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் சொன்னாள், "எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் டைனோஸரஸ் ஒருபோதும் இருந்ததில்லை" என்று கூறினார் என்றாள். நம்மை ஏமாற்றுவதற்காக, சாத்தான் அந்த எலும்புகளை பூமியில் போட்டான் என்று ஒரு மனிதர் என்னிடம் கூறினார். நீங்கள் யாரிடமாவது சாதாரண அறிவுடன் அதுபோன்று பேசும்போது, நீங்கள் ஒரு அறிவில்லாதவர்போல் காணப்படப்போகிறீர்கள். ஆம், டைனோஸரஸ்கள் வாழ்ந்தன. மற்றும் அவைகள் எப்பொழுது வாழ்ந்தன? எங்கே வேதாகமத்தில் டைனோஸரஸ்கள் பொருந்துகிறது? இங்கே டைனோஸரஸ்களில் ஒன்றுடன் என்னுடைய இரண்டு பேரப்பிள்ளைகள், நாங்கள் வைத்திருக்கிற டைனோஸர் துணிவான நிலத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு அருமையான நேரமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள், இருப்பினும், அவைகள் எங்கே பொருந்துகின்றன என்று அடிக்கடி அதிகம் குழப்பமடைகின்றனர். இதுதான் நடந்திருக்கிறது: வேதாகமத்தின் போதனையில் டைனோசரஸ்களை தெளிவாக இடம்பெறச்செய்யாமல் இருப்பதற்காக, கிறிஸ்தவர்கள் சமரசம் செய்துகொண்டார்கள். எனவேதான் அவர்கள் இடைவெளிக் கொள்கையைக் கண்டுபிடித்தார்கள். "நாளின் காலம்", "வளரும் சிருஷ்டிப்பு" அல்லது "தெய்வ நம்பிக்கை பரிணாமம்" போன்றவைகள். அதைச்செய்ய வேண்டிய தேவை அங்கே இல்லை. நான் இந்த நாளின் காலையிலே, டைனோஸரஸ்களைப் பற்றிய வேதாகமப் பார்வையை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்போகிறேன். மனிதர்கள் எவருமே ஒரு உயிருள்ள டைனோஸரைப் பார்த்தது இல்லை என்று தேசிய புவியியல் மையத்தில் இருக்கிற இவர் கூறுகிறார். தற்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்; அவருக்கு அது தெரியுமா? அல்லது அப்படி அவர் நினைக்கிறாரா? அவர் அப்படி நினைக்கிறார். எப்பொழுதும் வாழ்ந்த அதை அனைவரிடமும் அவர் பேசாதவரையில், அவரால் அதுபோன்று தெரிந்துகொள்ள சாத்தியமான வழியே இல்லை. அவர் அதை எழுதுவதற்கு முன்பு, ஆதாமிடமோ அல்லது ஏவாளிடமோ பேசினார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் அதை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் பேசினாரா? இல்லையே. அது வெளிப்படையுடன், நீங்கள் அறிய இயலும் காரியமல்ல. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1:1) என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் வானத்தையிம், பூமியையும், சமுத்திரத்தையும் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் அனைத்தையும் ஆறு நாட்களில் சிருஷ்டித்திருந்தால், ஆதாம் டைனோஸரஸ்களைப் பார்த்திருக்க வேண்டும். ஏதேன் தோட்டம் எதைப்போன்று இருந்தது என்பதைப் பற்றி நாம் நேற்று கருத்தரங்கம் பகுதி இரண்டில் பேசினோம். பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ஆதியிலே தேவன் இந்த உலகத்தை எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதைப் பற்றி நாம் பேசினோம்.... வெள்ளத்தின்பொழுது தலைக்கு மேல் இருந்த தண்ணீர் மேல்கட்டு அனைத்தும் கீழே விழுந்தது. அது இப்பொழுது கடந்துவிட்டது, மற்றும் உண்மையிலே தண்ணீரின் பெரும்பாலானவைகள் பூமியின் மேற்பறப்பிற்குக் கீழ் இருந்தவையாகும். பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது என்றும் அவரே.... மேலாக ஸ்தாபித்தார் என்றும் சங்கிதம் 24:1-2ல் கூறுகிறது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள் என்று சங்கீதம் 136:6ல் கூறுகிறது. ஏன் கிறிஸ்தவர்கள் அதை மேலோட்டமாக வாசித்துவிட்டு, அது என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்க இயலவில்லை என எனக்குத் தெரியவில்லை. தற்பொழுது கடலில் உள்ள பெரும்பாலான தண்ணீர்களில், பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே இருந்தவைகளாகும். ஆழத்தின் ஊற்றுகள் உடைந்தபொழுது அவைகள் அனைத்தும் பீரிட்டுக்கொண்டு வெளியே வந்தன. நோவாவின் நாட்களில் எது வெள்ளத்தை உண்டுபண்ணினது என்பதைப் பற்றி நாம் கருத்தரங்கம் எண் 6-ல் பார்க்கலாம். நாங்கள் அதை ஹோவிந் கோட்பாடு என்று அழைக்கிறோம், எனவே வேறுஎவரும் அதற்காகக் குற்றம் சாட்டப்படாமல் இருப்பர். சிருஷ்டிப்பிலிருந்து 6,000 ஆண்டுகளில், வெள்ளம் ஏற்படுவதற்கு 4,400 ஆண்டுகள் வரையில், இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்தக் காலங்களில், மக்கள் 900 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தனர் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் உண்மையிலே நேர்மையுடன் 900 ஆண்டுகள் வாழ்ந்து வயதுமுதிர்ந்தோர்களாகினர். பல பழங்கால நாகரீகங்களில், பழங்காலத் தலைப்புகளில், அவர்கள் அதை பழங்காலப் பொற்காலம் என்று அழைக்கின்றனர். பாபிலோனியர்கள், சுமேரியர்கள், எகிப்தியர்கள் மற்றும் பலர் ...... அவர்கள் அனைவரும் பேசின காலம் எதுவெனில், மனிதன் ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த காலமாகும். அது ஏனெனில் அது உண்மையிலே உண்மையாகும். அவர்கள் உண்மையிலே ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர். கருத்தரங்கம் எண் 2-ல் (ஏதேன் தோட்டம்), ஊரும்பிராணிகள் அவைகளின் வாழ் நாளில் எவ்வாறு வளர்ந்தன என்று நாம் பார்த்தோம். ஊரும்பிராணிகள் ஒருபோதும் வளர்வதை நிறுத்துவதில்லை. எனவே, டைனோஸரஸ்கள் பெரிய பல்லிகளாகக் காணப்பட்டன. அது ஏதேனின் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளுடன் வாழ்ந்தன. டைனோஸரஸ்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வாழவில்லை. எனவே, வெளிப்படையான கேள்வி என்னவெனில், நோவா தன்னுடைய பேழையில் டைனோஸரஸ்களை ஏற்றினாரா? டைனோஸரஸ்கள் பேழையில் இருந்தனவா? என்று ஒருவர் பில்லிகிரஹாமிடம் கேட்டார். இல்லை, நோவாவின் பேழையில் டைனோஸர்கள் இல்லை, எனெனில் மனிதன் இங்கே வந்தவுடன் அவைகள் அழிந்துவிட்டன என்று பதில் கூறினார். பில்லிகிரஹாம் செய்த அனைத்துக் காரியங்களுக்காகவும் நான் தேவனைத் துதிக்கிறேன், ஆனால் அதைப்பற்றிய கருத்தில் அவர் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார். பேழையில் டைனோஸரஸ்கள் இருந்தனவா? என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். நோவா ஒரு வகையான இரும்புக் கூட்டில் மரங்கொத்திப் பறவைகளை அடைத்தார் என்று நான் நம்புகிறேன்........பின்பு அது முக்கியம் வாய்ந்ததாகும். பேழையில் டைனோஸரஸ்கள் இருந்தனவா? திரு ஹோவிந் அவர்களே, அவைகள் பெரியவைகள், இல்லையா? என்று மக்கள் கேட்கின்றனர். பெரியவைகள் பெரியவைகளே, ஆனால் சிறியவைகள் சிறியவைகளே. நீங்கள் பாருங்கள், அந்தப் பெரிய பேழையை நோவா கட்டியபோது அவருக்கு வயது 600 ஆகும். நீங்கள் பெரிய டைனோஸரஸ்களை உள்ளே கொண்டுவரக்கூடாது என்கிற புத்திசாலியாக அவர் ஒருவேளை இருந்திருக்கலாம். நீங்கள் இரண்டு குட்டிகளைக் கொண்டுவாருங்கள். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குட்டியைக் கொண்டுவாருங்கள். அது பின்பு முக்கியமாக இருக்கிறது. சரியா? பேழையினுள் குட்டி விலங்குகளைக் கொண்டுவருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குட்டி விலங்குகளைக் கொண்டுவருவது ஏனெனில் அவைகள் சிறியவைகள். ஒரு பெரிய டைனோஸரின் முட்டையானது ஒரு கால்பந்தைவிட சிறியது. நீங்கள் குட்டிகளைக் கொண்டுவருவது ஏனெனில் அவைகள் எடையில் குறைந்தவைகள், அவைகள் கொஞ்சமாக சாப்பிடுகின்றன, அவைகள் அதிகமாக உறங்குகின்றன மற்றும் அவைகள் நெடுங்காலம் இருக்கின்றன. சிறுவர்கள் கீழே விழும்பொழுது, அவர்கள் குதித்து மறுபடியும் எழுந்து தொடர்ந்து ஓடுகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? பெரியவர்கள் கீழே விழுந்தால் உடைந்துபோகின்றனர் அல்லது சற்று நேரம் அங்கே கிடக்கின்றனர். மேலும், நீங்கள் குட்டிகளைக் கொண்டுவருவது ஏனெனில், வெள்ளத்திற்குப் பின்பு அவைகள் நெடுங்காலம் வாழ்ந்து அவைகளின் சந்ததிகளை உண்டாக்குகின்றன. நீங்கள் அவைகளைக் கொண்டுவருவதற்கான காரணம் முற்றிலும் அதுவாக இருக்கிறது. பூமியின்மேல் இருக்க நீங்கள் ஏன் பெரிய யானைகளை பேழையினுள் கொண்டுவர வேண்டும்? பல்வேறு காரணங்களைப் பார்க்கும்போது அது முட்டாள்தனமான செயலாக இருக்கும். ஏன் ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியைக் நீங்கள் கொண்டுவருகிறீர்கள்? அனைத்திலும் குட்டிகளைக் கொண்டுவாருங்கள். தேவன் நோவாவிடம் வகை ஒன்றுக்கு ஒரு ஜோடியைக் கொண்டுவரச்சொன்னார், ஒவ்வொரு இனத்திற்கு ஒரு ஜோடி அல்ல, இல்லை, வகை ஒன்றுக்கு ஒரு ஜோடி. வகை ஒன்றுக்கு ஒரு ஜோடியும், அதன்பின்பு வகை ஒன்றுக்கு ஒரு ஜோடியும், அதன்பின்பு வகை ஒன்றுக்கு ஒரு ஜோடியுமாக......கொண்டுவரச்சொன்னார். வேதாகமம் அந்தத் தலைப்பில் மிகவும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் அனைத்து வகைகளையும் கொண்டுவாருங்கள், அனைத்து இனங்களையும் அல்ல. நாசியில் ஜீவ சுவாசமுடைய , நிலத்தில் வாழும் பிராணிகளை மட்டும் நீங்கள் கொண்டுவாருங்கள். நோவா எந்த மீனையும் பேழையினுள் கொண்டுவரவில்லை. பேழையின் வெளியே அவைகளுக்கு ஏராளமான தண்ணீர் இருந்தது. மேலும் அவன் எந்த மூட்டைப் பூச்சியையும் பேழையினுள் கொண்டுவரக்கூடாது, ஏனெனில் மூட்டைப் பூச்சிகளுக்கு நாசித்துவாரங்கள் இல்லை. மூட்டைப் பூச்சிகள் அவைகளின் தோலின் வழியாகவும், சுருள்களின் வழியாகவும் சுவாசிக்கின்றன. பேழையினுள் பூச்சிகள் இருக்கத் தேவையில்லை. பூச்சிகளால் வெள்ளத்தில் நன்றாக வாழ முடியும். வெள்ளம் ஏற்பட்ட ஏதாவது ஒரு இடத்திற்கு தண்ணீர் வடிந்து கீழே சென்றபின்பு சென்று பாருங்கள். சேற்றில் நடந்துசென்று நீங்கள் கவனிக்கிற முதல் காரியத்தை எனக்குச் சொல்லுங்கள். பல மில்லியன்கள் மூட்டைப் பூச்சிகளைப் பார்ப்பீர்கள், சரியா? பூச்சிகள் பேழையினுள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அவைகளில் சிலவைகள் அங்கு இருந்திருக்கலாம், ஆனால் அவைகள் அங்கு இருக்கத் தேவையில்லை. நோவா 400 ஜோடி நாய்களை பேழையினுள் வைக்கவில்லை. ஒருவேளை நோவா சிஹுஆஹுஆ (Chihuahua) என்கிற முடியுள்ள நாயைப் பார்த்திருக்கவே மாட்டார். ஏன் சிலர் அதை நாய்களுக்குச் செய்தனர்? ஒரு நாயை உண்டாக்க எடுக்கப்படும் அனைத்து சிறப்பு இனப்பெருக்கமும் முற்றிலும் பயனற்றதாக இருக்கிறது. என்னுடைய நாய் நிக்கியைப் போன்ற ஒரு வம்சாவளி நாயை நோவா கொண்டுவந்திருப்பார். இந்த நாய் எந்த வகையைச் சார்ந்தது என்பதை நான் அறிவதற்கு முன்பே 12 ஆண்டுகளாக நாங்கள் நிக்கி நாயை வைத்திருந்தோம். என்னுடைய நண்பர் ஒருவர் வந்து, ஹோவிந் அவர்களே, முழுமையான இரத்தமுள்ள கேன்ஹார்டிலி "Canhardly" நாயை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னார். என்ன? என்று நான் கேட்டேன். உங்களது நாய் கேன்ஹார்டிலி என்று சொன்னார். அப்படியா? என்று நான் கேட்டேன். அது எந்தவகை நாய் என்று நீங்கள் அபூர்வமாகச் சொல்ல முடியும் என்று அவர் சொன்னார். ஆம், ஒரு முழுமையான இரத்தமுள்ள கேன்ஹார்டிலி நாயாக இருக்கிறது. இந்த மெக்ஸிகோ பாடப்புத்தகம் சொல்லுவதுபோல, ஒருவேளை குதிரைக்கும் வரிக்குதிரைக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்கலாம். குதிரைக்கும் வரிக்குதிரைக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்கிறது என்று நான் அதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அது குதிரையைப் போன்று இருந்தது- " நான்கு சக்கர, உண்மையான தோலினாலான மெத்தையையுடைய" - அனைத்துமே குதிரையின் உபகரணங்கள். எவ்வாறு நோவா மில்லியன்கள் விலங்குகளை பேழையினுள் வைத்தார்? என்று சந்தேகப்படுகிறவர்கள் கேட்கிறார்கள். நல்லது, அவர் முதலாவது இடத்தில் நிலத்தில் வாழும் விலங்குகளைக் கோண்டுவந்தார். இரண்டாவதாக, நாசிகளையுடையவைகளை மட்டும் அவர் கொண்டுவந்தார். மூட்டைப் பூச்சிகளை அல்ல. மூன்றாவதாக, நீங்கள் குட்டிகளைக் கொண்டுவாருங்கள். அது ஒரு பொதுவான அறிவுடைய செயலாகும். நான்காவதாக, நீங்கள் ஒவ்வொறு வகையிலும் ஒரு ஜோடியைக் கொண்டுவாருங்கள், பல்வேறுபட்டவைகளில் ஒவ்வொன்று கிடையாது. தேவன் வகைகளை உண்டாக்கினார். மேலும் பேழையானது எந்தளவு பெரியதாக இருக்கவேண்டும் என்றும் தேவன் நோவாவிடம் கூறினார். நிஜமாகவே, என்ன அளவில் அதை உருவாக்கவேண்டும் என்றும், எத்தனை விலங்குகள் அங்கே இருந்தன என்றும் தேவன் கணக்கிட்டாரா? உலகத்தில் அடிப்படையான விலங்குகளாக சுமார் 8,000 விலங்கு வகைகள் இருக்கின்றன என்று பல நிபுணர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். அடிப்படை வகை விலங்குகள்.ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியை நோவா வைத்தார், ஆனால் சிலவற்றில் ஏழு, எனக்கு விளங்குகிறது. அங்கே பேழையில் ஏராளமான இடம் அதற்கு இருந்தது. ஆதாமினால் ஒரே நாளில் அந்த அனைத்து விலங்குகளுக்கும் பெயரிட்டிருக்கவே ஒருபோதும் முடியாது என்று சில கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூறுகிறார்கள். நான் ஆச்சர்யப்படும்போது ஒரு நிமிடத்திற்கு 350 வார்த்தைகளைப் பேச முடிகிறது. ஒரு நிமிடத்திற்கு 300 வார்த்தைகள் பேசினாலே அனைத்து விலங்குகளின் பெயர்களையும் 26 நிமிடங்களில் நீங்கள் கூறிவிட முடியும். நாய், பூனை, யானை, எலி போன்ற வார்தைகள். அத்துடன் ஆதாமுக்கு அதிகமான அறிவுத் திறமை இருந்தது என்பதை நீங்கள் கருதவேண்டும். தேவனின் முழுத் திட்டத்தினால், தேவனுடைய கரத்திலிருந்து நேராக வந்த மனிதனாக ஆதாம் இருந்தான். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மொழியையும் அவனால் பேச முடிந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அப்பொழுது அங்கே ஒரே ஒரு மொழி மட்டுமே இருந்தது. அந்த மனிதனால் நடக்கவும், பேசவும், அனைத்து விலங்குகளுக்கும் பெயரிடவும் மற்றும் முதல் நாளிலே திருமணம் முடிக்கவும் முடிந்தது. ஒருவேளை ஆதாமுக்கு மிகவும் அதிகமான அறிவாற்றல் இருந்திருக்கும். அனைத்து விலங்குகளுக்கும் பெயரிடுவதற்கு அரைமணி நேரம் எடுத்தது என்பது அங்கே அவனுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. சரி, அடுத்தது என்ன? தேவனே, வேறு என்ன எனக்காக வைத்திருக்கிறீர்? மேலும் பேழை எந்தளவு பெரியதாக இருந்தது? நோவாவினால் அந்த அனைத்து விலங்குகளையும் பேழையினுள் வைக்க ஒருபோதும் முடியாது என்று சொல்லுகிற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இருக்கிறார்கள். உண்மையிலே அங்கே எத்தனை இருந்தன? என்று நான் கேட்டால், எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் பதில் கூறுகிறார்கள். அந்தப் பேழை எவ்வளவு பெரியது என்று நான் கேட்டால், எங்களுக்குத் தெரியாது என்றும் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நோவாவினால் அதைச் செய்ய முடியாது என்பதுதான் எங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள். ஓ, அப்படித்தான் அறிவியல் வேலைசெய்கிறதா? 18 முதல் 20 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரு வெடிப்பு இருந்தது என்று அவர்கள் நம்புவதைக் காட்டிலும் பேழையானது அதிக ஞானமாக உண்டாக்கப்பட்டது. அங்கே ஒன்றுமே இல்லாதது வெடித்து அனைத்தையும் உண்டாக்கவில்லை. அதன்பின்பு, 4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்குப்பின் பூமி குளிர்ச்சியடையவுமில்லை. மேலும் அது பாறையான மேலோட்டை உருவாக்கி, ஆம், பூமி கோளானது குளிர்ச்சியடைந்து, பாறையான மேலோட்டை உருவாக்கினதாம். அதன்பின்பு, இந்த பூமி உருவாக்கப்பட்டதாம், மேல்பட்டையானது சூடாகவும் மற்றும் எரிமலைக் குழம்புகளின் குமிழிகளின் குளங்கள் இருந்தனவாம். அங்கே பூமியில் ஆக்ஸிஜன் இல்லை என்றும் பூஜ்ஜியம் சதவீதம் ஆக்ஸிஜன் இருந்தது என்றும் இந்தப் பாடப்புத்தகம் சொல்லுகிறது. ஆனால் அந்தப் பாறைகள் அதை உருஞ்சியதாம். நான் நான்கு ஆண்டுகளாக அந்த ஒன்றைக் கணக்கிட்டுக் கொண்டு வருகிறேன். அதன் பின்பு, சமுத்திரங்கள் உண்டாகி, அது பாறையின்மேல் மில்லியன்கள் ஆண்டுகள் மழையாகப் பெய்ததாம். மில்லியன்கள் ஆண்டுகள் பெய்த வேகமான மழைகள் சமுத்திரங்களை உண்டாக்கினதாம்...... மேலும் கூட்டு இரசாயானங்களின் குமிழிகளின் குழம்பு சமுத்திரங்களின் சுழற்ச்சியாம். கூட்டு இரசாயானங்களின் குழம்பு வளர்ச்சியடைந்து உயிருள்ளவைகள் உருவாக அந்த வளர்ச்சி மிகவும் மெதுவாக நடந்ததாம். ஆம், அது நிச்சமாக இருக்கிறது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை. அந்த அளவுக்கு அது மிகவும் மெதுவாக இருக்கிறது. சமுத்திரத்தின் மேல் தளத்தில் உள்ள பாறைகளில் உயிர் ஆரம்பித்திருக்கலாம் என்றும் அனைத்து உயிர்களும் பாறைகளிலிருந்து வந்தன என்றும் அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். தன்னைப்போல் தானே உண்டாக்கிக் கொண்ட முறையினால் இந்த உயிருள்ள குழம்பைத் தோற்றுவித்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே இந்தக் கொள்கையின்படி, 20 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரு வெடிப்பு இருந்ததாம். 4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் உருவானதாம். அது சூடான பாறையின் பந்தாக இருந்ததாம். அதற்குப் பின்பு மழையாக, மழையாக, மழையாகப் பெய்ய ஆரம்பித்ததாம். இறுதியாக சமுத்திரங்கள் நிறைந்து, சமுத்திரங்களில், முதல் உயிரினங்கள் காணப்பட்டதாம். எனவே, பெரிய, பெரிய, பெரிய தாத்தாவாக குழம்பு இருந்ததாம். அதுதான் பரிணாமக் கொள்கையாக இருக்கிறது. நான் அதைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம். நீங்கள் விரும்பினால் அவர்களைப் பார்த்து சிரிப்பதே சரியானது. ஒருமுறை அவர்கள் பல கல்லூரிகளின் அருகில் உள்ள போஸ்டனுக்குப் பேசுவதற்காக என்னை அழைத்தார்கள். அங்கே உள்ள ஒரு ஆலயத்தில் நான் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். சகோதரரே, சில கல்லூரிகளை அழைத்து ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்ய உங்களால் முடியுமா என்று நான் கேட்டேன். அவர்களின் சொந்தப் பல்கலைக்கழகங்களின் முன்பாக இப்படிப்பட்ட மக்களுக்கு எதிராக விவாதம் செய்ய நான் விரும்புகிறேன் என்றேன். போஸ்டனில் நூறு மைல்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரிகளையும் அவர் அழைத்தார். போஸ்டனைச் சுற்றி பல கல்லூரிகள் இருக்கின்றன. இறுதியாக, இல்லை, அவர் இங்கே வந்து விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒரு கல்லூரி கூறியது. ஆனால், எங்களுடைய பேராசிரியர்கள் அவரிடம் எந்தக் கேள்வியையும் கேட்கலாம் எனில், அவர் இங்கு வந்து எங்களுடைய மாணவர்களிடம் பேசலாம் என்றனர். ஏனெனில், கிறிஸ்தவர்கள் உண்மையிலே எவ்வாறு ஊமையாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுடைய மாணவர்களுக்குக் காண்பிக்க விரும்புகிறோம் என்றார்கள். அங்கே வருவதை நான் மதிப்பாகக் கருதுகிறேன் என்றேன். எனவே நான் அங்கு சென்றேன். அங்கே ஆறு பேராசிரியர்களும் மற்றும் மாணவர்கள் அனைவரும் இருந்தனர். சிங்கங்களின் கெபியில் இருப்பதைப் போன்று நான் உணர்ந்தேன். மக்களே, நான் வேதாகமத்தை நம்புகிறேன் என்று என்னுடைய இரண்டு வரிகளை நான் வெளிப்படுத்தினேன். ஆனால் ஒருவர்கூட மகிழ்ச்சியடையவில்லை. தேவன் அனைத்தையும், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கினார் என்ற என்னுடைய நம்பிக்கையை நான் அவர்களுக்கு விளக்கினேன். தேவன் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தை வரச்செய்தார். அப்பொழுது அந்தப் பெரிய வெள்ளத்தில் அனைத்தும் அழிந்தன. நோவா ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியை (இனத்தை அல்ல).... ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியை பேழையில் வைத்தான். அதிலிருந்து புதிய பல்வேறுபட்டவைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. அதற்குப் பின்பு அவர்கள் எதை நம்புகிறார்கள் என்பதை நான் சொன்னேன். பெரும்பாலான பரிணாமவாதிகளுக்கு அவர்கள் எதை நம்புகிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் அதை அவர்களுக்கு விவரிக்க வேண்டும். மக்களே, நீங்கள் 20 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு பெரு வெடிப்பு இருந்தது என்று நம்புகிறீர்கள். மற்றும் 4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது குளிர்ச்சியடைந்தது என்றும், அது பல மில்லியன்கள் ஆண்டுகள் பாறைகளின் மேல் மழையாகப் பெய்து, கல்லாக மாறி பின்பு குழம்பாக மாறியது என்றும், மற்றும் அந்த குழம்பு சுமார் 3 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு உயிரடைந்தது என்றும் நம்புகிறீர்கள் என்று கூறினேன். இந்த ஒரு பேராசிரியர் மிகவும் கோபமடைந்து கொண்டிருந்தார். ( அவர்களுக்கு அதைச் செய்யவேண்டும் என்று எனக்குத் தென்படுகிறது) திரு. ஹோவிந் அவர்களே, இன்றைய உலகில் ஏறத்தாள 400 வேறுபட்ட நாய்கள் இருக்கின்றன என்று நீங்கள் உணர்கிறீர்களா? என்று அவர் கேட்டார். ஐயா, எத்தனை என்று எந்த யோசனையும் எனக்கு இல்லை, ஆனால் 400 நாய்களின் சத்தங்களும் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். நோவாவின் பேழையில் இருந்த இரண்டு நாய்களிலிருந்து அந்த நாய்கள் அனைத்தும் வந்தன என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று எனக்குச் சொல்லுவதுபோன்று உள்ளது என்று அவர் என்னிடம் சொன்னார். நான் அதை நம்பவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அவர் கேட்டார். ஐயா, நீங்கள் எதை உங்களுடைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று நான் கேட்டேன். ஒரு பாறையிலிருந்து அந்த அனைத்து நாய்களும் வந்தன என்று நீங்கள் உங்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்குப் பிறகு அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு நேரம் நான் ஒரு பல்கலைக்கழகத்தில் விவாதித்தபின்பு, இந்தப் பெண் அங்கிருந்த சிறிய பாதையின் கீழே நடந்துவந்தாள். அவள் மிகவும் பேராசையுள்ளவள். அவளுடைய மூக்கிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. அவள் என்மேல் மிகவும் கோபமாக இருந்தாள் என்று என்னால் சொல்லமுடியும். அவள் என்னை நோக்கி நேராக நடந்துவந்தாள். ஆண்டவரே, நான் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன் என்று நான் ஜெபம் பண்ணினேன். அவள் தன்னுடைய கைகளை அவளுடைய இடுப்பில் வைத்துக்கொண்டு இவ்வாறு சொன்னாள், " நாங்கள் பாறையிலிருந்து வந்தோம் என்று நாங்கள் நம்புவதாக, இன்று இரவு நீங்கள் அனைவருக்கும் சொன்னீர்கள். நாங்கள் அதை நம்பவில்லை என்றாள். அம்மையாரே, நீங்கள் அமைதியாக இருக்கத் தேவைப்படுகிறது, நீங்கள் ஒரு ஒட்டும்பொருளின்மீது அடிக்கப்போகிறீர்கள் என்று நான் சொன்னேன். அம்மையாரே, நீங்கள் பரிணாமத்தை நம்புகிறீர்களா? என்று நான் கேட்டேன். ஆமாம், நான் நம்புகிறேன். நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியையாக இருக்கிறேன் என்று அவள் சொன்னாள். அம்மையாரே, நாம் எங்கிருந்து வந்தோம்? என்று நீங்கள் எனக்குத் தயவுசெய்து சொல்ல முடியுமா? என்று நான் கேட்டேன். நாம் ஒரு பெரிய மூலக்கூறிலிருந்து வந்தோம் என்று அவள் கூறினாள். அது எங்கிருந்து வந்தது என்று நான் கேட்டேன். கடல்களிலிருந்து, உயிரி உண்டாவதற்கு முன்பிருந்த குழம்பிலிருந்து என்று பதில் கூறினாள். அது எங்கிருந்து வந்தது? என்று நான் கேட்டேன். அது பாறைகளின் மேல் மில்லியன்கள் ஆண்டுகள் பெய்தது என்று பதில் கூறினாள். அவள் உண்மையிலே எதை நம்புகிறாள் என்பதை அவள் மெதுவாக உணர்ந்துகொண்டு வந்தாள் என்று என்னால் பார்க்கமுடிந்தது. உங்களுக்குத் தெரியுமா...... நான் ஒரு பாறையிலிருந்து வந்தேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினாள். ஆமாங்க அம்மையாரே, நீங்கள் வெளியே செல்லும்பொழுது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய மூதாதையரை கால்களால் மிதித்துவிடாமல் செல்ல நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவளைப் பற்றிய ஒரு வசனத்தை வேதாகமத்தில் உள்ள எரேமியா 2: 26 இவ்வாறு கூறுகிறது: கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும், கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிறார்கள். அங்கே இருக்கிற, அந்தப் பாறையானது முற்காலதுத் தாத்தாவாக இருக்கிறதாம். ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும் அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான் என்று கூறுகிற மத்தேயு 17:15 வசனம்போல் இருக்கிறது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது, பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது என்றும், தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது, மாமிசமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று வேதாகமத்தில் ஆதியாகமம் 6:11-12 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 6: 12-13 வசனங்களில், தேவன் நோவாவை நோக்கி: மாமிசமான யாவரின் முடிவும்....... பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது என்றும் கூறுகிறது. நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்; நீ உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு என்று தேவன் கூறினார். மேலும் நோவா தன்னுடைய குமாரர்களிடத்தில், போங்கள் மரத்தைக் கொண்டுவாருங்கள்; நாம் ஒரு படகை உண்டாக்கவேண்டும் என்று கூறினார். எனவே அவர்கள் சென்று இந்த அனைத்து கொப்பேர் மரங்களையும் கொண்டுவந்து, அவர்கள் இந்தப் பெரிய படகைக் கட்டினார்கள். தற்பொழுது வெள்ளம் வற்றிய பின்பு, நோவாவின் மகன் சேத்துக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கு அர்பக்சாத் (Arphaxhad) என்கிற பெயர் வைத்தான். யாராவது ஒரு குழந்தைக்கு ஏன் அர்பக்சாத் (Arphaxhad) என்று பெயர் வைக்கிறார்கள்? மழழையர் பள்ளியில் இருக்கிற ஒரு ஏழைச்சிறுவனிடம், மகனே, உன் பெயர் என்ன என்று கேட்கும்பொழுது, அர்பக்சாத் என்று பதில் சொன்னால், அதை எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரிகிறதா? இல்லை. ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. நீங்கள் நினைத்துப் பாருங்கள்,ஒரு நாளில் அந்தச் சிறிய அர்பக்சாத் என்ற சிறுவன் நன்றாக பெரியவனாக வளர்ந்தபின்பு, அவன் முற்காலத்துத் தாத்தாவாகிய நாயின்மேல் உட்கார்ந்திருப்பதையும், மற்றும் அவன் தன்னைச்சுற்றியுள்ள பிள்ளைகளிடத்தில் இவ்வாறு கேட்கிறான், ஏய், முற்காலத்துத் தாத்தா, எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது; இந்த உலகத்தில் நாம் மட்டும் ஏன் இருக்கிறோம்? இந்த முழுக் கோளும் நம்முடையது என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்ன நடந்தது? முற்காலத்துத் தாத்தா வெள்ளத்தின் முழு நிகழ்வையும் அவனுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறான். உண்மையிலே, அவர்கள் வெள்ளத்தைப் பற்றி நீண்ட காலம் பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள். புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் ஐவன் என்கிற சூறாவளிக்காற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கப்போகிறோம். அந்தச் சிறிய புயலைப் பற்றி நீண்ட நேரம் பேசப்போகிறோம். உலகம் எங்கும் காணப்பட்ட வெள்ளத்தை, நீங்கள் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதா? அவர்கள் பல நூற்றாண்டுகளாகப் பேசியிருப்பார்கள். அர்பக்சாத்தின் தந்தையான சேம் (நோவாவின் மகன்) என்பவன், அந்த நிகழ்ச்சிகளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு நேரடியாகச் சொல்லுவதற்கு நீண்ட காலம் வாழ்ந்தான். நீங்கள் உங்களின் வேதாகமத்தை வாசிக்கும்போது அதை ஒருபோதும் கவனிக்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் காலங்களைப் பற்றிப் படிக்கும்போது, அது அங்கே இருக்கிறது. உலகைச்சுற்றிலும் பல கலாச்சாரங்களில் அவர்கள் அந்த வெள்ளத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? உலகத்தைச்சுற்றிலும் உள்ள பழங்கால நாடுகளிலிருந்தும் மற்றும் கலாசாரங்களிலிருந்தும், 270 வித்தியாசமான பெரிய வெள்ளங்கள் ஏற்பட்டதின் பழங்காலக் கதைகள் உள்ளன என்று நாம் அடையாளம் கண்டுபிடித்திருக்கிறோம். ஹவாலியன்கள் தங்களுடைய பழங்காலக் கதையைப் பாதுகாத்தனர். முதல் மனிதனாகிய குனியுஹோனாவின்(Kuniuhonna) மரணதின் நீண்ட காலத்திற்குப் பின்பு... இந்த உலகம் வாழ்வதற்குக் கெட்டதாகவும் மற்றும் கொடுரமான ஒரு இடமாகம் மாறிவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு நல்ல மனிதன் மட்டும் விடுபட்டான்; அவனுடைய பெயர் நு-யு (Nu-u) என்பதாகும். அவன் ஒரு வீடு இருக்கும் ஒரு பெரிய படகை உண்டாக்கி, விலங்குகளால் அதை நிரப்பினான். பூமியின்மேல் தண்ணீர் வந்து அனைத்து மக்களையும் அழித்துப்போட்டது. நு-யு மற்றும் அவனது குடும்பமும், அதில் அடைக்கப்பட்ட விலங்குகளும் மட்டும் காப்பாற்றப்பட்டனர் என்று அந்தக் கதை கூறுகிறது. வேதாகமத்தினுடைய வெள்ளத்தைப் போன்று அது இருக்கிறது, நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்களா? சீனர்கள் ஹய்கிங் கிளாசிக் என்கிற ஒரு பழங்காலக் கதையை வைத்திருக்கிறார்கள். ஃபுஹி (Fuhi) என்பவன் அவர்களின் நாகரீகத்தின் தகப்பன் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஃபுஹி என்று அவர்கள் அறிகிற மனிதன் ஒருவேளை நோவாவாக இருக்கலாம். ஃபுஹி என்ற மனிதனும், அவனுடைய மனைவியும், அவர்களுடைய மூன்று மகன்களும் மற்றும் மூன்று மகள்களும் அந்தப் பெரிய வெள்ளத்திலிருந்து தப்பித்தனர் என்று அந்தக் கதை கூறுகிறது. அவனும் மற்றும் அவன் குடும்பத்தினர்களும் மட்டுமே பூமியின் மேல் வாழ்ந்தவர்கள். வெள்ளத்திற்குப் பின்பு அவர்கள் இந்த உலகத்தில் மறுபடியும் பெருகினார்கள் என்று அந்தக் கதை கூறுகிறது. மெக்ஸிகோவில் உள்ள டால்டெக் இந்தியர்கள் (Toltec Indians) ஒரு சுவராஸ்யமான வரலாற்றை வைத்திருந்தார்கள். முதல் உலகமானது 1,716 ஆண்டுகள் இருந்தது; உயரமான மலைகளை மூடக்கூடிய ஒரு வெள்ளமானது அதை அழித்துப்போட்டது. காக்ஸ்-காக்ஸ் (Coxcox) என்கிற ஒரு குடும்பத்தினர்கள் 1, 716 ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று அந்தக் கதை கூறுகிறது. நல்லது, வேதாகமத்தின் காலங்கள் சிருஷ்டிப்பிலிருந்து வெள்ளம் ஏற்பட்ட காலம் வரைக்கும் 1,656 ஆண்டுகள் அதனுடன் சமமாக இருக்கிறது. ஒரு வாய்மொழியான வரலாற்றை 4,000 ஆண்டுகளாகப் பாதுகாத்தது கெட்டதல்ல. கேள்வி என்னவெனில்: ஏறத்தாள 300 வெள்ளம் பற்றிய பழங்காலக் கதைகள் அங்கே ஏன் இருக்கின்றன? அது ஏனெனில் அங்கே ஒரு வெள்ளம் இருந்ததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் என்னுடைய கோட்பாடாகும். ஒருவேளை அட்லாண்டிஸ் பழங்காலக் கதையானது, ஒவ்வொருவரும் ஆராய்ச்சிசெய்துதேடுகிற அட்லாண்டிஸின் காணாமல்போன கண்டங்களைப் பற்றிய இன்னொரு கதைபோன்று உள்ளது. படகில் இருந்த மக்களைப் பொறுத்தவரையில், அந்த முழு உலகமும் தண்ணிர் அலைகளின் கீழே மூழ்கியது. உண்மையிலே அவர்கள் கீழே சென்றுகொண்டிருக்கவில்லை, மேலே சென்றுகொண்டிருந்தார்கள். அட்லாண்டிஸ் என்பது வெள்ளம் பற்றிய இன்னொரு கதை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் துருக்கி நாட்டைப் பார்த்தால், அராரத் மலை என்கிற ஒரு மலையானது, அதன் கிழக்குப் பகுதியின் தூரத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். அது ஒரு அதிக அரசியல் நிலைத்தன்மையற்ற பகுதியாக ரஷ்யா நாட்டின் எல்லையிலிருந்து 19 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. துருக்கியின் படத்தில் அது நுகுஞ்செமிஸி (NuhunGemisi) என்றழைக்கப்படுகிறது. அதன் அர்த்தம் என்னவெனில், "நோவாவின் பெரிய படகு" என்பதாகும். அவர்கள் அங்கே வழிகாட்டும் கம்பங்களை வைத்திருக்கிறார்கள்; நேராக அதை நோக்கி காரை ஓட்டுங்கள். நோவாவின் பெரிய படகுக்கு இந்த வழியாக செல்லுங்கள், 5 கிலோமீட்டர்கள் இருக்கின்றன. பேழையானது ஏழாம் மாதத்தில் தரையில் தங்கிற்று என்று வேதாகமம் சொல்லுகிறது; அது மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது. நோவா 13ஆவது மாதம் வரையில் வெளியே வரவில்லை. பேழையானது தரையைத் தொட்டபின்பும், ஏன் அவன் 5 1/2 மாதங்கள் அதிகமாக அங்கே தங்கினான்? நாம் அவைகளைப் பற்றிய அனைத்துக் காரணங்களையும் "ஹோவிந்தினுடைய கோட்பாடு" என்கிற வீடியோ எண் 6-ல் விபரமாகப் பார்க்கலாம். பேழையானது ஏழாம் மாதத்தில் அரராத் மலைகளின் (பன்மை) மேல் தங்கிற்று என்று வேதாகமம் கூறுகிறது. அராரத் மலையின் மீது பேழை தங்கிற்று என்று வேதாகமம் கூறவில்லை. அதைக் கவனமாகப் படியுங்கள்; அது அப்படிச் சொல்லவில்லை. பேழையானது அரராத் மலைகளின் மேல் தங்கிற்று என்று வேதாகமம் சொல்லுகிறது. நோவாவின் பேழைக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி, உண்மையில் ஏறத்தாள நான்கு கோட்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் அதைத் தனியே எடுத்து அந்த பேழையின் மரக்கட்டைகளைக் கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தினார்கள் என்று ஒரு கோட்பாடு சொல்லுகிறது. அது அழிகிவிட்டது என்று இரண்டாவது கோட்பாடு சொல்லுகிறது. பேழையானது இன்னும் மலையின்மேல் இருக்கிறது என்று மூன்றாவது கோட்பாடு சொல்லுகிறது. பேழையானது பள்ளத்தாக்கில் உள்ளது என்று நான்காம் கோட்பாடு சொல்லுகிறது. அது மலையில் இருக்கிறது என்று நினைக்கிற மனிதர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை அங்கே ஒரு பெரிய துரிதப் பிரயாணம் செல்கின்றனர். அவர்கள் மலையில் ஏறி, திரும்பி வந்து, அவர்கள் அநேகமாக அதைக் கண்டனர் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் அநேகமாக எதையோ கண்டதை, உங்களால் எவ்வாறு அறிய இயலும் என்பதால், நான் உறுதியாகச் சொல்லமுடியாது. எனவேதான், அது அங்கே இருக்கலாம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். எனக்குத் தெரியாது. அது எனக்கு முக்கியமல்ல. அது மலையின் மேலேயே இல்லை. அது 27 கிலோமீட்டர்கள் தொலைவில் கீழே உள்ள பள்ளத்தாக்கில் இருக்கிறது என்று மற்றவர்கள் உறுதியளிக்கின்றனர். மேலும் ஒரு படகு வடிவில் உள்ள ஒரு பொருள், எப்படியோ உடைந்த உருவத்தில், நோவாவின் பேழையானது அங்கே இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். உயரமாக பறந்துகொண்டே துல்லியமாக படம் எடுக்கும் விமானத்தால், இது 1960-ல் கண்டுப்டிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில் ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது அது மேலே வந்ததோ அல்லது அது தரைக்குக் கீழே சென்றதோ, விளைவுகள் ஒரே மாதிரியானவைகளே. தற்பொழுது இந்தப் பொருளானது தரையிலிருந்து, ஏறக்குறைய ஆறு மீட்டர்கள் மேலே ஒட்டிக்கொண்டிருக்கிறது. ரான் வியாட் (Ron Wyatt) என்பவர் 1999-ல் இறந்தார். அவர் என்னுடைய நல்ல நண்பராக இருந்தார். இது நோவாவின் பேழை என்று அவர்கள் நினைக்கிற அந்தப் பொருளைப் பற்றி அறிய, அவரும் மற்றும் பலரும் பல ஆண்டுகள் படிப்பதில் செலவிட்டனர். நான் சொன்னதுபோலவே, எனக்குத் தெரியாது. அது எங்கே இருக்கிறது என்பது எனக்கு முக்கியமல்ல. அவர்களுக்கு அடுத்து, யாராவது இன்னொரு கோட்பாடு இருக்கிறது என்று சொல்லுகிறவர்களால், படைப்பை நம்புகிறவர்களில் சிலர் தலைகீழாகிவிட்டனர். எந்தவொரு பாடத்தையும் நான் எவ்வாறு அணுகுகிறேன் எனில்: ஒன்றிற்கும் மேல் தெரிந்தெடுப்புகள் இருந்தால், அனைத்துத் தெரிந்தெடுப்புகளையும் அனைவருக்கும் சொல்லுங்கள். எதையாவதைப் பற்றி பல்வேறு கோட்பாடுகள் இருக்கும்போது, நீங்கள் முன்னே சென்று நீங்களே அதை மறு ஆராய்ச்சிசெய்யுங்கள். நீங்கள் அனைத்துத் தெரிந்தெடுப்புகளையும் பார்க்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரான் வியாட்டிற்குப் பதிலாக ரிச்சர்ட் ரீவ்ஸ் படித்தார். அங்கே நோவாவின் பேழையைப் போன்று அவர் உருவாக்கிய படகிற்கு முன்பு அவர் காணப்படுகிறார். அவர்களின் கூற்றுப்படி அந்தப் பேழையானது உடைந்துவிட்டது. பார்வைக்கு, ஒரு பழைய படகு வெளியே உடைந்தும் பக்கவாட்டில் சிதறியும் இருக்கும். நோவாவின் பேழையானது அதிக அகலமுள்ளதாக இருக்கிறது என்று கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் வாதிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். ஆம், அது அதிக அகலமாகத்தான் இருக்கிறது. படகுகள் அப்படித்தான் செய்யப்படுகின்றன. அவைகள் வெளிப்புறமாக விழுகின்றன. நீங்கள் ஒரு அழுகிப்போன படகை எங்கேயாவது பார்த்தால், நீங்கள் அதுபோன்ற பாதிப்பையேப் பார்ப்பீர்கள், ஆனால் ரேடாரின் உதவியுடன் பார்த்தால் அங்கே படகின் மேல்தள மரப்பலகைகள் இருந்தன என்று காண்பிக்கிறது. அங்கே சிலவகையான பெரிய மரப்பலகைகள் உள்ளே இருக்கின்றன. பார்க்கையில், அங்கே சில பெரிய கட்டமைப்பு இருக்கிறது. அவர்கள் அங்கே இரும்புச் சுவர்களை உள்ளே கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பேழையானது தாழ்ப்பாளிட்டு ஒன்றாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அப்பொழுதே இரும்பைப் பற்றி அறிந்திருந்தனர்; அது ஒரு பிரச்சனையே இல்லை. நீங்கள் அந்தத் தாழ்ப்பாள்களை, தெற்கு நாக்ஸ்விலியில் உள்ள டென்னிஸியில் வியட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். அதன் இணையதளம் முகவரியான www.wyattmuseum.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். அவர்கள் தகடுபோல் உள்ள மரப்பலகைகளை பயன்படுத்தினர். அவர்கள் ஒருவிதக் கீழ்போன்ற ஒரு பொருளினால் மூன்று அடுக்குகள் உள்ள மரப்பலகைகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தினார்கள். அந்தக் கீழ் (பசை) மரத்தின் சாற்றிலிருந்து உண்டாக்கப்பட்டது. பார்பதற்கு, அது அடிப்படையான மெல்லிய மரப்பலகையைப் போன்று உண்டாக்கப்பட்டது. பெரிய தடிமனான மரத்தாலான அடுக்குகளாக இருந்தது. அங்கே மரப்பலகையில் தானியம் இருக்கவில்லை. அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மரப்பலகையின் மரங்களுக்கு வளரும் காலங்கள் என்று இல்லை என்று தெரிகிறது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மாற்றி அமைத்து வியாட் அருங்காட்சியகமானது தெற்கு நாஸ்விலியின் 27-ஆவது வெளிப்பாதையில் உள்ளது. அது வடமேற்கு மூலையில் இருக்கிறது; நீங்கள் அங்கே இறங்கி அவைகளைப் பார்க்கலாம். வியாட்டின் மனைவி திருமதி. மேரி நெல் (Mrs. Mary Nell) அவர்கள் "The Boat Shaped Object on Doomsday Mountain" என்கிற ஒரு புத்தகத்தை எழுதினார்கள். அவர்களும் அவருடைய கணவரும் செய்த ஆராய்ச்சியை அதில் எழுதியிருக்கிறார்கள். பார்வைக்கு, அந்தப் பேழையானது அரராத் மழைக்கு அருகில் தரையிறங்கியுள்ளது, சேற்றில் அது அடித்து, அதற்குப் பிறகு அனைவரும் வெளியே சென்றுள்ளனர். சிலகாலங்களுக்குப் பிறகு, சேற்றின் ஓட்டமோ அல்லது குழம்பின் ஓட்டமோ, அந்தப் பேழையைக் கீழே தள்ளி அதின் அடிப்பாகத்தை உடைத்துவிட்டது. பேழையின் அடிக்கட்டைக்குக் கனமாக இருந்து முழு எடையையும் தாங்கிக்கொண்டு நேராக இருப்பதற்கு எது பயன்பட்டது? அது உடைந்து அது மலையின் தூரத்தில் மேலே காணப்பட்டது. பார்ப்பதற்கு, அந்தப் பேழையானது வழக்கமாக இருக்கவேண்டிய இடத்திலிருந்து மாறிப்போய் மற்றும் கீழே நகர்ந்து பல மைல்கள் தொலைவில் உள்ளது. அது இங்கே இடதுபுறமாக, துருக்கியில் உள்ள காஸான் என்கிற ஒரு கிராமத்தின் வழியில் வழக்கமாக இருக்கவேண்டியது. அதன் அர்த்தம் என்னவெனில், "எட்டின் கிராமம்" (Village of Eight) என்பதாகும். எட்டின் கிராமமா? தற்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், அந்தப் பேழையில் எட்டுப்பேர்கள் இருந்தனர். பார்பதற்கு அந்தப் பேழையானது கடந்த காலத்தில் வழக்கமாக இருந்த இடத்திலிருந்து கீழே மாறி இருக்கிறது. துருக்கியின் அரசாங்கம் இந்த அனைத்தையும் படித்துவிட்டு, இது நோவாவின் பேழைதான் என்று அறிவித்தார்கள். அங்கே அவர்கள் பார்வையாளர்களின் மையத்தைக்கூடக் கட்டியிருக்கிறார்கள். இது நோவாவின் பேழையல்ல என்று சில மக்கள் சொல்லியிருக்கிறார்கள்; இது படகுபோன்ற அமைப்புடைய ஒரு பொருள், அது ஒரு மிதக்கும் கல்லாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஒரு நிலைத்து நிற்கும் பொருளைச்சுற்றி ஒரு மிதக்கும் படிக உருவமாக அது இருக்கிறது. எதாவது ஒன்றைச்சுற்றி சேறு ஓடும்போது கண்ணீர் வடிவதுபோன்ற அமைப்பை அது உண்டாக்குகிறது. ஒரு விமானத்தின் இறகைப்போன்று அது இருக்கிறது. ஆனால் கண்ணீர் போன்ற கூர்மையான நுனியான துளியானது எப்பொழுதும் கீழ் நோக்கி இருக்கிறது. வட்டமான நுனியானது ஒரு விமானத்தின் இறகைப்போல மேல் நோக்கியிருக்கிறது. இந்த ஒன்று பின்நோக்கி இருக்கிறது. அந்தப் பகுதியில் தண்ணீர் ஓடுகிறதால் உருவாகும் படிவங்கள் இருக்கின்றன, ஆனால் இது அவைகளில் ஒன்றல்ல என்று கூறுகிறார்கள். இது ஒரு கோட்டையைப் போன்று இருக்கிறது என்று ஒரு மனிதன் வாதிட்டான். ஒரு மலையின் அடிப்பகுதியில் யார் ஒரு கோட்டையைக் கட்டியிருப்பார்கள்? உங்களுடைய எதிரிகள் பாறைகளை கீழே உள்ளே எறிந்திருக்கலாம். சிருஷ்டிப்பை நம்புபவர்களில் சிலர், அது நோவாவின் பேழையல்ல என்று சொல்லுகிறார்கள். மேலும் அதை நான் உச்சரித்தால், அவர்கள் என்மேல் கோபமடைகிறார்கள். நான் உங்களுக்காக பணிசெய்ய ஆரம்பிக்கும் வரையில், நான் அதை உச்சரித்துக்கொண்டே இருப்பேன், அதற்குப்பின்பு நான் வெளியே சென்றுவிடுவேன். சரியா? பேழையானது 300 முழ நீளம் (140 மீட்டர்கள்) என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு முழம் என்பது முழங்கையிலிருந்து விரலின் நுனி வரையுள்ள அளவாகும். என்னுடைய உயரமானது ஏறக்குறைய 2 மீட்டர்கள்; என்னுடைய கையின் முழத்தின் அளவு 53 செண்டிமீட்டர்கள் ஆகும். சராசரி எகிப்திய மக்களின் முழத்தின் அளவானது,என் கையின் முழத்தின் அளவைக்காட்டிலும் சற்று சிறிய அளவான 52 செண்டிமீட்டர்கள் உள்ளது. அந்தப் படகு போன்ற அமைப்புடையப் பொருளின் நீளமானது 157 மீட்டர்களாகும்; அது எகிப்தியர்களின் அளவில் 300 முழமாகும். ஆனால் அது பேழை என்று நிரூபிக்கவில்லை. அதன் அளவு சரியாக இருக்கிறது என்பது மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது. அது ஏறக்குறைய டைட்டானிக் கப்பலின் மூன்றில் இரண்டு பங்குள்ள அளவாக இருக்கிறது. ஏறக்குறைய இரண்டு கால்பந்து விளையாட்டு மைதானங்களின் நீளமுள்ளதாக இருக்கிறது. ஒரு மிகவும் பெரிய படகாக இருக்கிறது. அந்தப் பகுதியில், காஸான் என்ற கிராமத்தில், அவர்கள் பணிரெண்டு பெரிய பாறைகளைக் கண்டுபிடித்தனர். அவைகள் ஒவ்வொன்றும் 4,000 கிலோ எடையுள்ளவைகல். ஒவ்வொரு பாறையும் மேலிருந்து ஒரு வாய்க்கால் உள்ளதாக இருந்தது. பார்க்கையில் இந்தப் பாறைகளானது, அந்தப் படகின் ஓரத்தில் தொங்கியிருக்கின்றன. அது நங்கூரக் கல் அல்லது இழுக்கும் கல்லாக இருக்கலாம். மேலும் ஒரு வளைந்த வாய்க்கால்போல் அந்த பாறையின் மேல் அருகில் உள்ள துவாரமானது உண்மையிலே இருக்கிறது. நான் கட்டிடங்களிலும் மற்றும் கட்டிடவேலைகளிலும் பல துவாரங்களை என் வாழ்க்கையில் உண்டுபண்ணியிருக்கிறேன். நீங்கள் எவ்வாறு ஒரு வளைந்த துவாரத்தை ஒரு பாறையில் உருவாக்குவீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அங்கே அவைகள் இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வறட்சியின்போது, கலிலேயாக்கடலின் தண்ணீர் அளவு குறைந்தபோது, அது பல நூற்றாண்டுகளாக வெளிப்படுத்தியிராத, பலவிதமான காரியங்களை அது வெளிப்படுத்தியது. அங்கே அதைச்சுற்றிலும், அவர்கள் துவாரங்கள் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய பாறைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். புயலடிக்கும் பகுதிகளில், படகின் அருகில் சுற்றிலும் பாறைகளைப் போடுவது ஒரு சாதாரணமானப் பழக்கமாக இருக்கிறது. அந்தப் படகை நிலை நிறுத்துவதற்காக அப்படிச்செய்யப்படுகிறது. அவர்கள் அதற்கு கொஞ்சம் கனத்தைக் கொடுப்பார்கள். அது காற்றடிக்கும் காலமானால், அவைகளைத் தண்ணீரின் உள்ளே இறக்கி, நீங்கள் கடல் நங்கூரமாக பயன்படுத்துவீர்கள். இவைகள் இழுக்கும் கற்கள் அல்லது கடல் நங்கூரங்களாக நோவாவின் பேழைக்கு இருந்தன என்று பல மக்கள் தீர்மானிக்கிறார்கள். புயல் காலங்களில், அந்தப் படகை நிலையாக நிறுத்துவது அவர்களின் முக்கியமான வேலையாக இருந்திருக்கும். நீங்கள் கற்பனைசெய்முடியுமானால், நீங்கள் தண்ணீரில் நங்கூரமாக இருப்பதைப் போன்று அது இருக்கிறது, அது காற்றடிக்கும் காலமாக இருந்தால், பாறைகள் உங்களைப் பின்பாக இழுக்கும். மேலும் அப்பொழுது கடலின் அலைகளுக்கு செங்குத்தாக நீங்கள் நிற்பீர்கள்; நீங்கள் தலைகீழாக இருக்க முடியும். கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவர் எனக்கு ஒரு கடிதம் இவ்வாறு எழுதினார், " ஹோவிந் அவர்களே, நோவாவின் பேழையைப் பற்றி உங்களது கருத்தரங்கத்தில் கேட்டேன்..... அருகில் பெரிய பாறைகள் தொங்கிக்கொண்டிருந்தன என்று கூறினீர்கள், நீங்கள் மிகவும் புத்தியீனமானவர்...... என்று எழுதியிருந்தார். அந்தப் பேழையைச்சுற்றிலும் பாறைகள் தொங்கிக்கொண்டிருந்ததனால், அவன் மெதுவாக இறங்க பயன்பட்டிருக்கும் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? நான் அவருக்கு இவ்வாறு பதில் எழுதினேன், "அவன் எங்கே போய்க்கொண்டிருந்தான்? அங்கே போவதற்கு எந்த ஒரு இடமும் இல்லை. அந்த நேரத்தில் முழு உலகமும் தண்ணீரின் கீழே இருந்தது. அவன் மிதப்பதற்கு முயற்ச்சி செய்துகொண்டிருந்தான். நீ பார், நோவா, ஒழுங்குமுறைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானவைகள். உள்ளே போகவும், உட்காரவும், மிதக்கவும், இறங்கவும் மற்றும் வெளியே வரவும். நீ எங்கும் போக அவசியமில்லை; கடலைக் கடக்க வேண்டியதில்லை; நீ படகை ஓட்டிச்செல்ல வேண்டியதில்லை. ஒரு கடவுள் நம்பிக்கையில்லாதவர் இவ்வாறு கூறினார், "கடலில் பயணம் செய்யும் ஒரு படகானது ஆறு கப்பல் பாய்மரங்களால் செய்யப்பட்டது மற்றும் அதில் மிகவும் மோசமாக தண்ணீர் கசிந்தது..... ஏனெனில் படகு செலுத்துவதிலிருந்து திருகிக்கொண்டது." நோவாவின் பேழையானது எந்தவொரு கப்பற்பாயும் இல்லாதிருந்தது; அது மிதப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பேழையின் நடுவில் ஒரு நிலா குளம் இருந்திருக்கவேண்டும் என்று சில மக்கள் நினைக்கின்றனர். அது ஏனெனில் ஒரு நீண்ட கப்பலாக அலைகளின்மேல் செல்லுவதற்குக் கடினமாக இருந்திருக்கும். அது மேலே செல்லுவதற்கு ஏதுவாகவும் அதன் நுனிப்பகுதிகள் வெளியே தெரியும்விதமாகவும் இருந்து, வளைந்து அல்லது அதன் நடுப்பகுதி உடைவதற்கு ஏதுவாகவும் இருந்தன. நோவாவின் பேழையில் ஒரு நிலா குளம் இருந்திருந்தால், அது பிரச்சனையைத் தீர்த்திருக்கும். ஒரு நிலா குளம் என்பது படகின் நடுவில் இருக்கும் ஒரு துவாரமாகும். அலைகள் மேலும் கீழும் செல்லும்பொழுது, படகின் நடுவில் உள்ள துவாரத்தில் தண்ணீரானது மேலும் கீழும் செல்லுகிறது. ஆம், படகின் நடுவில் ஒரு சுவர் நீங்கள் கட்டியிருக்கிறீர்கள்; அது நிலா குளம் என்று அழைக்கப்படுகிறது. அலைகளின்மேல் தண்ணீரானது அந்த நிலா குளத்தின் மேலும் கீழும் செல்லும்பொழுது, படகின் உள்ளே மற்றும் வெளியே காற்றை அழுத்தும் ஒரு பெரிய பிஸ்டனாக அது செயல்படுகிறது, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு அலையை அடிக்கிறீர்கள். அவ்வப்போது ஒரு நல்ல அலைக்காக உண்மையிலே நீங்கள் இவ்வாறுஜெபித்திருக்க வேண்டும், " ஆண்டவரே, நாங்கள் யானைகளுக்குத் தீனி போடப்போகிறோம்; தயவுசெய்து, ஒரு அலையை அனுப்பித் தரமுடியுமா?" பேழையை விட்டு நோவா வெளியே வந்தபோது டைனோஸர்களுக்கு என்ன நிகழ்ந்தது? டைனோஸர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்கிற கேள்வியானது நீண்ட காலமாக இருந்து வருகிறது..... பரிணாமத்தைப் பற்றி உரையாடல்கள் ஆரம்பிப்பதற்கு பள்ளிகளிலே அது பயன்படுத்தப்பட்டது. சாத்தான் பயன்படுத்துகிற ஒரு மிகவும் பிடித்தமான கருவி டைனோஸர்கள் ஆகும். ஏனெனில் சிறுவர்கள் டைனோஸர்களை விரும்புகின்றனர். ஒரு நேரம் நான் முதலாம் வகுப்புப் படிக்கிற 300 சிறுவர்களிடம் ஒரு பொதுப் பள்ளியில் பேசினேன்; அதைச் சில நேரங்களில் முயற்ச்சித்துப் பாருங்கள். நான் ஒரு ஆலயப் பேருந்தை 17 ஆண்டுகளாக ஓட்டினேன். மேலும் நான் இளைஞர்களுக்கு வேதாகப் பாடத்தை 17 ஆண்டுகளாகக் கற்றுக்கொடுத்தேன். நான் பேசிக்கொண்டிருந்த இடத்தில் அங்கே 300 முதலாம் வகுப்புச் சிறுவர்கள் இருந்தனர். என்னுடைய டைனோஸரஸை வெளியே எடுத்து, மாணவ, மாணவிகளே, உங்களிடத்தில் எனக்கொரு கேள்வி இருக்கிறது. டைனோஸர்கள் எப்பொழுது வாழ்ந்தன? என்று கேட்டேன். பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர் என்று அவர்கள் அனைவரும் உடனே சத்தமாகக் கத்தினர். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், இவர்கள் முதலாம் வகுப்புச் சிறுவர்கள் என்று நான் நினைத்தேன். அவர்களால் வாசிக்க முடியும். அவர்கள் ஏற்கனவே எவ்வாறு நம்பமுடியும்? சிருஷ்டிப்பைப் பற்றிய உண்மையை கிறிஸ்தவர்கள் எங்கே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? பிள்ளைகள் தங்களுடைய மனதில் பரிணாமக் கொள்கையினால் மாசுபடுத்தப்பட்ட பின்பு, அவர்களை மறுபடியும் ஆதாயப்படுத்தும் வரையில் நாம் ஏன் காத்துக்கொண்டிருக்கிறோம்? நாம் அவர்களை முதல் இடத்தில் இழந்துவிடக்கூடாது. டைனோஸர் பற்றிய இந்தக் காரியத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்காமல் இருந்து வருவது ஏன்? 1800 ஆம் ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் செய்துகொண்டது என்னவெனில், அவர்கள் அவர்களின் வேதாகமத்தை சமரசம் செய்துகொண்டார்கள். டைனோஸர்கள் தங்குவதற்கு அவர்கள் இடைவெளிக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார்கள். டைனோஸர்களை சாத்தான் வைத்துக்கொள்ள அவர்கள் சாத்தானுக்கு இடம்கொடுத்தனர். அதுதான் நிகழ்ந்தது. உண்மையிலே, டைனோஸர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி அங்கே 16 பரிணாமக் கோட்பாடுகள் இருக்கின்றன. 65 மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய கோள்களானது மெக்ஸிகோ தீபகற்பத்தைத் தாக்கி அவைகள் அனைத்தையும் கொன்றுபோட்டன என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. டைனோஸர்கள் அவற்றின் குடல் வாயு உபத்திரவங்களினால் தாங்களே தங்களைக் கொன்றுவிட்டன என்று இண்டியானாவில் உள்ள ஒரு விஞ்ஞானி கூறுகிறார். பின்பு அவைகளால் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லையாம். அது மாதிரியான ஒரு கோட்பாட்டிற்கு நான் என்னசெய்வது என்று நான் உறுதியாகச் சொல்லமுடியாது. அவைகள் அழிந்துபோனது ஏன் என்பதற்கு உண்மையான காரணம் இங்கே இருக்கிறது: புகைந்ததினால். எது டைனோஸர்களை அழியவைத்தது? அவர்கள் தவறான கேள்வியைக் கேட்கிறார்கள் என்று நீங்கள் உணருகிறீர்களா? எது டைனோஸர்களை அழியவைத்தது? என்பது கேள்வியல்ல, அவைகள் அழிந்துவிட்டனவா? என்பதுதான் கேள்வியாகும். தவறான விஷயத்திற்கு நம்மை விவாதிக்க இழுப்பதில், தாராள மனமுடையவர்கள் எப்பொழுதுமே மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். பொதுப்பள்ளிகளில் நாம் படைப்பைப் பற்றிப் போதித்திருக்கிறோமா? என்று அவர்கள் எப்பொழுதும் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு நல்ல கேள்வியாக இருக்கிறது, நான் அதைப் பற்றி விவாதிக்க மகிழ்ச்சியோடு இருப்பேன். இருப்பினும், நாம் கேட்கவேண்டிய இன்னொரு கேள்வி அங்கே இருக்கிறது. அந்த உண்மையான கேள்வி என்னவெனில்: பொதுப்பள்ளிகள் நமக்கு வேண்டுமா? முதலில் சற்று நேரம் நாம் அதைப்பற்றி விவாதிக்கலாம். நாம் பள்ளிகள் வைக்கப்போகிறோம் எனில், அப்பொழுது அங்கே என்ன கற்றுக்கொடுக்க இயலும் என்பதை நாம் விவாதிக்க வேண்டும். அவைகளில் என்னக் கற்றுக்கொடுக்கப்படப்போகிறது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை பில் கிளிண்டன் தீர்மானிக்கிறாரா? அல்லது என்னக் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை ஒசாமா பின்லேடன் தீர்மானிக்கிறாரா? என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டுமா? அல்லது நான் தீர்மானிக்க வேண்டுமா? பிள்ளைகள் மாநிலத்திற்குரியவர்கள் என்று நினைக்கிற சில மக்களின் பேராசையான யோசனைதான் அந்த முழுப்பிரச்சனையாகும். இல்லை, இல்லை, இல்லை; பிள்ளைகள் தேவனுக்குரியவர்கள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்கு என்ன போதிக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும். மாநிலமானது மலடாயிருக்கிறது; அதினால் பிள்ளைகளைப் பெற இயலாது. அவர்கள் உங்களுடையதைத் திருடுவதற்கு விரும்புகிறார்கள். அமெரிக்காவின் பத்தாவது சட்டதிருத்தம் இவ்வாறு சொல்லுகிறது: உள்நாட்டு விஷயங்களில் சுதந்திரமளிக்கும் அரசாங்கமானது..... மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சில காரியங்களில் அதிகாரமுடையதாக இருக்கிறது. மற்ற எதுவுமே மாநிலங்களுக்கு விட்டுவிடப்படுகிறது. கல்வியின் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதற்கு,.... அமெரிக்காவின் உள்நாட்டு விஷயங்களில் சுதந்திரமளிக்கும் அரசாங்கத்திற்கு எந்த வேலையும் கிடையாது. பொதுநலம் அல்லது பொது உதவி அல்லது வேறு எதிலும் எந்த வேலையும் கிடையாது. ஏன் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக மாறின என்பதைப் பார்க்க நீங்கள் விரும்பினால், அங்கே பல கட்டுரைகள் உள்ளன. ஒன்று, சாமுவேல் புளுமென்ஃபெல்டு (Samuel Blumenfeld) எழுதின ஒப்பற்றக் கட்டுரை: ஏன் நாம் பொதுப்பள்ளித் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறோம்? என்பதை விளக்குவதாகும். "புதிய உலக ஒழுங்கு" என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவைகள் அனைத்தும் இருக்கின்றன. ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். CSE 102 என்கிற எங்களின் கல்லூரி வகுப்புப்பாடங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதிக விபரங்களுடன் இருக்கும் கல்லூரி வகுப்புகளில் நான் சிருஷ்டிப்பைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிறேன். நான் ஒவ்வொரு விபரத்தையும் விரட்டுகிறேன். மற்றும் ஒவ்வொரு தவறையும் தாக்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்குமானால், நீங்கள் அதை வாசிக்கலாம். பேழையை விட்டுச்சென்ற டைனோஸர்களுக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. இயற்கைக் காலநிலை மாறிவிட்டது; இந்த உலகமானது வித்தியாசமாக இருந்தது. வெள்ளத்திற்கு முன்பு, மக்கள் 900 ஆண்டுகள் இருப்பதற்கு வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வேதாகமத்தை வாசியுங்கள். வெள்ளத்திற்குப் பின்பு, அவர்கள் 400 ஆண்டுகள் வயதுடையவர்களாகவும், பின்பு 200 ஆண்டுகள் வயதுடையவர்களாகவும், பின்பு 100 ஆண்டுகள் வயதுடையவர்களாக மட்டுமே வாழ்ந்தனர். சிலவைகள் மாறிவிட்டன. முக்கியமான காரியம் என்னவெனில், தலைக்குமேல் இருந்த தண்ணீர் மேல்கட்டு இல்லாமல் போய்விட்டது. மேலும் தாவரங்கள் மிகவும் அதிகமாக வளருவதற்கேற்ற மண்ணானது, தாதுப்பொருட்களினால் எவ்வாறு இருக்கவேண்டுமோ அப்படி இல்லாதிருந்தது. வான்வெளி அழுத்தமானது மாறுபட்டதாக இருந்தது; தண்ணீர் மேல்கட்டு இல்லாமல் போனது என்று நான் நம்புகிறேன். பாதிப்புகளை உண்டாக்கும் அதிக ஒளிக்கற்றைகள் போன்றவைகளுடன் நேரடி சூரியவெளிச்சமாக இருந்தது. வெள்ளத்திற்குப் பின்பு இருந்த சுற்றுப்புற சூழ்நிலையில் அதிகமான பல பிரச்சனைகள் இருந்தன. டைனோஸர்களுக்கு இரண்டு பிரச்சனைகள் இருந்தன: ஒன்று, காலநிலை மாற்றம். இரண்டாவது, ஒருவேளை மிகவும் மோசமானதாக இருந்தது; மக்கள் அவைகளை வேட்டையாடினர், அவர்கள் அவைகளைக் கொன்றனர். இல்லை, அதற்குப் பின்பு அவர்கள் அவைகளை டைனோஸர்கள் என்று அழைக்கவில்லை. அவர்கள் அவைகளை பறக்கும் பாம்புகள் (dragons) என்று அழைத்தனர். "டைனோஸர்" என்கிற வார்த்தையானது 1841ஆம் ஆண்டு வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பெரும்பாலான மனித வரலாற்றில் இந்த பிராணிகள் பறக்கும் பாம்புகள் என்றே அழைக்கப்பட்டன. "டைனோஸர்" என்கிற வார்த்தையானது 1891 ஆம் ஆண்டின் அகராதியில் கூடக்கிடையாது. ஏனெனில், பெரும்பாலான மனித வரலாற்றில் அவைகள் பறக்கும் பாம்புகள் என்றே அறியப்பட்டுள்ளன. பறக்கும் பாம்புகளைப் பற்றி 34 தடவைகள் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது. வேதாகமத்தில் டைனோஸர்கள் பற்றிக் குறிப்பிடப்படாதது ஏன்? என்று மக்கள் கேட்கின்றனர். ஒரு உணவு விடுதியின் தாழ்வாரத்தில் ஒரு பெண்ணினிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். வேதாகமத்தில் டைனோஸர்களைப் பற்றி வேதாகமத்தில் இல்லை என்று அவள் கூறினாள். அது சரி; 1841 ஆம் ஆண்டுவரை அந்த வார்த்தையானது உருவாக்கப்படவில்லை என்று நான் கூறினேன். நீங்கள் ஒரு சரியான ஆங்கில வேதாகமம் வைத்திருப்பீர்களானால், அது 1611 ஆம் ஆண்டில் மொழிபெயர்க்கப்பட்டதாகும். எனவே, ஆம், அங்கே நீங்கள் அந்த வார்த்தையைக் காணமாட்டீர்கள். அவர்கள் அவைகளை பறக்கும் பாம்புகள் என்று அழைத்தனர். "தற்பொழுது அபூர்வமான" (now rare) என்று 1946 ஆம் ஆண்டின் அகராதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்திற்குப் பின்பு, மக்கள் தொகையானது வளர ஆரம்பித்தவுடன், பறக்கும் பாம்பின் எண்ணிக்கையானது குறைய ஆரம்பித்தது. பறக்கும் பாம்பு இருக்கும் அடுத்த கதவின் அருகில் ஒருவரும் வசிக்க விரும்பவில்லை. இன்று அட்லாண்டா இருக்கிற, ஜியார்ஜியா நாட்டின் நடுவே அதே போன்றக் காரியம் நிகழ்ந்தது. இன்று எத்தனை பெரிய சாம்பல் நிற முடிகளையுடைய கரடிகள் அட்லாண்டாவின் அருகில் ஜியார்ஜியாவில் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? பூஜ்ஜியமாகும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எத்தனை இருந்தனவென்று உங்களுக்குத் தெரியுமா? நூற்றுக்கணக்கில் இருந்தன. ஜியார்ஜியா நாட்டில் இருந்த சாம்பல் நிற முடிகளுள்ள கரடிகளுக்கு என்ன நேரிட்டது? ஒரு பகுதியில் மக்கள் சென்று குடியேறும்பொழுது, பெரிய கொடிய விலங்குகள் கொல்லப்படுகின்றன அல்லது தூரமாக விரட்டப்படுகின்றன. இது எங்கும் நேரிடுகிறது. ஜியார்ஜியாவில் ஐந்து சாம்பல் நிற முடிகளுடைய கரடிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று செய்தியின் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டிருந்தால்,..... காலை ஆறு மணிக்கு என்ன நிகழும் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தக் கரடிகள் அனைத்தும் இறந்துபோயிருக்கும். ஒன்றைச் சுடுவதற்கு, நான்கு மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு வேட்டையாடுபவர்களும் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு முயற்ச்சி செய்திருப்பார்கள். சரியா? மேலும் மிகப்பெரிய ஒன்றை யார் சுடக்கூடுமோ, அவர் ஒரு கதாநாயகனாக இருந்திருப்பார். புபா என்பவர் சாம்பல் நிற முடிகளுடைய கரடியைச் சுட்டு அந்தக் கிராமத்தைக் காப்பாற்றினார் என்று பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் படத்துடன் போட்டிருப்பார்கள். பறக்கும் பாம்புகளுக்கும் உண்மையிலே அதேபோல்தான் நேரிட்டது. ஒரு பறக்கும் பாம்பைக் கொல்வதற்கு நீங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், முகாம்களில் உட்கார்திருக்கும்பொழுது அவர்கள் உங்களின் கதைகளைப் பற்றிச்சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள். மக்கள் பறக்கும் பாம்புகளை இறைச்சிக்காகக் கொன்றனர், ஏனெனில் அவைகள் அபாயகரமானவைகளாக இருந்தன, அல்லது நீங்கள் ஒரு கதாநாயகன் என்று நிரூபிப்பதற்காக, அல்லது........ உங்களுடைய மேலான நிலையைக் காண்பிப்பதற்காக, புதிய பூமி என்று சொல்லிக்கொள்வதற்கு, அல்லது மருத்துவக் காரணங்களுக்காக என்று சொல்லிக்கொள்வதற்காகவும் இருக்கலாம். பறக்கும் பாம்பின் இரத்தம், பறக்கும் பாம்பின் எலும்புகள், பறக்கும் பாம்பின் எச்சில் என்று பல பழங்கால உணவு முறைகளை அழைக்கிறார்களே, ஏன்? கில்கமெஷ்(Gilgamesh) என்பவர் பறக்கும் பாம்பை வெட்டுவதில் மிகவும் பெயர்பெற்றவர். சீனாவின் நிலத்தை அளந்த யூ (Yu) என்னும் பெயரையுடைய ஒரு மனிதனைப் பற்றி, சீனாவின் பழங்காலக் கதையானது இவ்வாறு விவரிக்கிறது: வெள்ளத்திற்குப் பின்பு, அவன் நிலத்தை அளந்தானாம். மேலும் அவன் பல பகுதிகளாகப் பிரித்தானாம். தண்ணீரானது வழிந்து கடலுக்குச் செல்வதற்கு அவன் வாய்க்கால்களைக் கட்டி, நிலமானது மறுபடியும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும்படி உருவாக்கினானாம். பல பாம்புகளும் மற்றும் பறக்கும் பாம்புகளும் சதுப்பு நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனவாம் என்று அந்தக் கதை கூறுகிறது. இது சாதாரணமான விஷயம் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு பட்டிணத்தைக் கட்ட விரும்பினால், முதலில் பறக்கும் பாம்புகளை நீங்கள் விரட்டிவிடவேண்டும், அதற்குப் பின்பு நீங்கள் உங்கள் பட்டிணத்தைக் கட்டுங்கள். முதலாவதாக நீங்கள் பறக்கும் பாம்புகளைத் தூரமாக விரட்டவேண்டும் அல்லது அவைகளைக் கொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீனாவின் காலப்பட்டியலில் உண்மையான பதினொரு பிராணிகள் இருப்பது ஏன்? பன்றி, வாத்து, நாய் மற்றும் பறக்கும் பாம்பு இருப்பது ஏன்? ஒரு புராணக்கதையில் வரும் விலங்கை மட்டும் அங்கே அவர்கள் போட்டிருப்பது ஏன்? அவர்களின் காலப்பட்டியலுக்குப் பெயர்களை வைக்கத்தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விலங்குகள், அந்த நேரத்தில் உண்மைலே இருந்திருக்குமா? பூமிக் கோளின் பழங்கால மண்பாண்டத்தின் ஒரு சிறிய துண்டு அங்கே ஒன்று உள்ளது. ஒருங்கிணைந்த எகிப்தின் முதலாம் ராஜவம்சத்தினரின், ஒரு கற்பலகைத் துண்டு எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே இருக்கிறது. அது நீண்ட கழுத்துக்களுடைய பறக்கும் பாம்பைக் காட்டுகிறது; நாம் அதினுடைய நகல்களை உண்டாக்குகிறோம். நீங்கள் விரும்பினால், உங்களின் பேருந்து வழித்தடங்களுக்கான பரிசாகவோ, அல்லது ஒரு மாணவருக்கு வெகுமதியாகக் கொடுக்கவோ அதில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் இந்தப் பொருளின்மேல் மிகவும் ஆவலுடன் செல்லுவார்கள்; பூமியின் பழங்காலத்தில் இருந்த மண்பாண்டத் துண்டுகளில் ஒன்றாக அவைகள் அரை அளவு நகல்களாக இருக்கின்றன. 3,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கழுத்துடைய பறக்கும் பாம்புகளை பழங்கால மண்பாண்டத்தில் அவர்கள் ஏன் போட்டிருக்கிறார்கள்? இங்கே இரண்டு நீண்ட கழுத்துகளுடைய டைனோஸர்களின் வாய்களின் நடுவே ஒரு செம்மறி ஆட்டுடன் காணப்படுகின்றன. கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு நீர் யானையின் தந்தம் ஒன்று இங்கே இருக்கிறது. அதற்கு நீண்ட கழுத்தும் மற்றும் நீண்ட வாழும் இருக்கிறது. டைனோஸர்களுக்கு நீண்ட கழுத்து இருப்பது முற்றிலும் பார்வைக்குத் தெரியும் விதத்தில் இங்கே ஒரு உருளையான முத்திரை இருக்கிறது. வேதாகமமானது ஒரு பறக்கிற அக்கினிச் சர்ப்பத்தைக் குறித்து ஏசாயா 14: 29 ல் கூறுகிறது. ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்! ஒரு அக்கினிச் சர்ப்பமா? சில நேரங்களில், ஹீரோடுட்டஸின் (Herodotus) வரலாற்றை வாசித்துப்பாருங்கள். ஹீரோடுட்டஸ் இவ்வாறு எழுதினான்: "அரேபியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன், அது ஏறக்குறைய பூட்டோவிற்கு சரியாக எதிரேயுள்ளது..... இறக்கைகள் உள்ள சர்ப்பங்களைப் பற்றி விசாரிப்பதற்காக நான் அங்கு சென்றேன். நான் சென்றடைந்தபொழுது, சர்ப்பங்களின் முதுகு எழும்புகள், சர்ப்பங்களின் விலா எழும்புகள் போன்றவைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அதை விவரிப்பது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. இறக்கைகள் உள்ள சர்ப்பங்களானது தண்ணீர்ப் பாம்பு போன்ற வடிவத்தில் உள்ளது. அதனுடைய இறக்கைகள் சிறகுகளால் ஆனதல்ல; ஆனால் ஒரு மட்டை போன்ற வடிவத்தை ஒத்திருப்பதுபோல் இருக்கிறது. இரண்டு செங்குத்தான மலைகளுக்கிடையில் உள்ள குறுகிய மலை இடைவெளியின் நுழைவு வாசலில் அந்த எழும்புகள் இருக்கின்றன." என்று கூறுகிறார். மேலும் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "வசந்த காலத்தில், அந்த இறக்கைகள் உள்ள பாம்புகளானது அரேபியாவிலிருந்து பறந்து எகிப்தை நோக்கி வருகின்றன..... ஆனால் தண்ணீர்ப் பறவைகளால் இவைகள் இந்த மலை இடைவெளியில் உள்ள நுழைவிடத்திலே தடுக்கப்படுவதால், அவைகள் அனைத்தையும் அழிக்கின்றன." என்று கூறுகிறார். ஜோசப்பஸ் (Josephus) என்பவரின் புத்தகமானது கொடிய பறக்கும் சர்ப்பத்தைப் பற்றிப் பேசுகிறது. மோசே என்பவர் எத்தியோப்பியாவிற்கு வந்தபோது அவன் அதைக் கொல்லவேண்டியிருந்தது. மேலும் அதற்குப் பின்புதான் அவன் எத்தியோப்பியர்களின் இளவரசியைத் திருமணம் முடித்தான். அதனால்தான் அவனுடைய தங்கை அவன்மீது பின்பு கோபமடைந்தாள். அவன் ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் முடித்ததினால், அவள் அவன்மீது கோபமடைந்தாள். அவள் கருப்பு நிறத்தில் இருந்ததிற்காக அல்ல, ஆனால் இவைகள் அனைத்தும் எவ்வாறு நேரிட்டது என்பதற்காகவே கோபமடைந்தாள். சில நேரங்களில் மோசேயைப் பற்றிய கதையை, ஜோசப்பஸினுடைய வரலாற்றுப் புத்தகத்தில் வாசியுங்கள். கி.மு. 793 ஆம் ஆண்டில் உள்ள (Anglo-Saxon Chronicles) ஜெர்மானிய-ஆங்கில உறுப்பினர்களின் நிகழ்வு பதிவேடுகளில், கொடிய பறக்கும் பாம்புகளானது ஆகாயத்தின் குறுக்கே பறந்துகொண்டிருந்தன என்று சொல்லுகின்றன. பாபிலோனியத் தெய்வமான மர்டக் (Marduk), தீயை சுவாசிக்கும் பறக்கும் பாம்பின்மேல் படமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. "தற்பொழுது, சகோதரர் ஹோவிந் அவர்களே, தீயை சுவாசிக்கும் பறக்கும் பாம்புகளை நீங்கள் நம்பவில்லை. நம்புகிறீர்களா? ஆம், அங்கே சிலவைகள் இருந்தன என்று நான் நம்புகிறேன். பயங்கரமான கடல் பிராணியைப் பற்றி, லிவியாதான் (Leviathan) என்கிற எங்களுடைய வீடியோவில் நாம் அனைத்தையும் பார்க்கலாம். யோபு 41-ஆம் அதிகாரத்தில் லிவியாதான்களைப் பற்றி இவ்வாறு பேசுகிறது: "அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப் பொறிகள் பறக்கும் என்று வசனம் 19 கூறுகிறது. கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும் என்று வசனம் 20 கூறுகிறது. தெற்கு பாப்திஸ்து சபைகளில் உள்ள உபதேசியார்கள் புகை ஊதுவதை நான் பார்த்திருக்கிறேன். அது ஒன்றும் புதியது அல்ல. அவருடைய சுவாசம் நிலக்கரியை எரியச்செய்வதால், அவருடைய வாயிலிருந்து அனல் வெளியே செல்லுகிறது. தற்பொழுது பொறுத்திருங்கள்; உண்மையிலே தீயைச் சுவாசிக்கும் ஒரு பறக்கும் பாம்பு அங்கே இருந்ததா? தீயைச் சுவாசிக்கும் பறக்கும் பாம்பைப் பற்றி அறிய, நீங்கள் லிவியாதான் வீடியோவைப் பார்க்கவேண்டும். நீங்கள் கத்தோலிக்க வேதாகமத்தைச் சோதித்துப் பார்ப்பீர்களானால், அதில் தானியேலின் புத்தகத்தில் இரண்டு அதிகாரங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அது தேவனுடைய வார்த்தையென்று அங்கீகரிக்கப்படவில்லை, அது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட வரலாறுகளிலிருந்து இருப்பவைகள் தானியேல் 13 மற்றும் 14 ஆம் அதிகாரங்கள். அதை வாசிப்பது மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது. அது நிச்சமாக வேதாகமப் பகுதிகள் கிடையாது; ஆனால் தானியேல் 14 ஆம் அதிகாரம் சொல்லுகிறது, "அந்த இடத்தில் ஒரு பெரிய பறக்கும் பாம்பு இருந்தது, பாபிலோனியர்கள் அதை வணங்கினார்கள். மேலும் ராஜா தானியேலை நோக்கி, இதோ, இது ஒரு உயிருள்ள தெய்வம் இல்லை என்று நீ சொல்ல இயலாது; எனவே இதை வணங்கு என்றான். மற்றும் தானியேல் சொன்னான், "நான் என் ஆண்டவராகிய தேவனை வணங்குகிறேன், ஏனெனில் அவர்தான் உயிருள்ள தேவன்; ஆனால் அது உயிருள்ள தெய்வம் அல்ல என்று கூறினான். ஆனால் நான் செல்லுவதற்கு அனுமதி தாருங்கள்....... மேலும் நான் இந்தப் பறக்கும் பாம்பை பட்டயமோ அல்லது கனமான தடியோ இல்லாமல் கொன்றுவிடுவேன் என்று கூறினான். அதற்கு ராஜா, நான் உனக்கு அனுமதி தருகிறேன் என்று கூறினான். அப்பொழுது தானியேல் கீல், கொழுப்பு மற்றும் உரோமத்தை எடுத்து அவைகளை ஒன்றாக சூடுபண்ணி ஒரு கட்டியாக்கி, பறக்கும் பாம்பின் வாயில் போட்டான், அந்த பறக்கும் பாம்பு வெடித்துச் சிதறியது." என்று காணப்படுகிறது. என்ன ஒரு விசித்திரமான கதையாக இருக்கிறது! ஹோவிந்தின் மொழிபெயர்ப்பை உங்களுக்குக் கொடுக்க என்னை அனுமதிக்கவும். தானியேல் என்னும் மனிதன் அறிவியலை விளங்கிக்கொண்டவன் என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த இளைஞர்களைத்தான், நேபுகாத் நேச்சார் அந்த நேரத்தில் இஸ்ரேல் நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோனான். அந்தக் கட்டியானது மரத்தின் பிசினால் செய்யப்பட்டது, அது மிகவும் ஒட்டும் தன்மையுடையது என்று தானியேல் தெரிந்திருப்பான். கொழுப்பு என்பது உப்பு சுவையையுடையது, மற்றும் அனைத்து விலங்குகளும் உப்பு சுவையுடையவைகளை விரும்பும். மேலும் உரோமமானது ஜீரணிக்க முடியாதது என்றும் தானியேலுக்குத் தெரிந்தது. எனவே, அவன் கொழுப்பு மற்றும் உரோமங்களினால் செய்த சிறிய கட்டிகளை உண்டாக்கி, பறக்கும் பாம்பின் குகையில் சுண்டிவிட்டான். அது அவைகளை விழுங்கிற்று, ஆனால் அதற்குப் பின்பு அவைகளை ஜீரணிக்க முடியவில்லை. அவைகளை குடலின் பாதையில் அடைத்துவிட்டன. குழாய்களைச் சரிசெய்பவர்கள் இருப்பதற்கு முன்பு உள்ள நாட்களாக இருந்தது. எனவே அது வெடித்தது என்று நான் கூறுகிறேன். சதாம் உசேனுக்கு "தான்" என்கிற அகம்பாவப் பிரச்சனை இருந்ததால், தான் நேபுகாத் நேச்சாரின் மறுபிறவி என்று அவன் நினைத்தான். ஜார்ஜ் புஷ் அவனை எப்பொழுதுமே ச...தாம் உசேன் என்று அழைத்தார்; அவர் அவனை ச...தாம் உசேன் என்று அழைப்பது ஏன் என்று ஆச்சர்யப்பட்டேன். அது ச....தாம் ஆக இருந்தது. நல்லது, சதாம் என்றால் இளவரசர். ச....தாம் என்றால் குதிரையினுடைய பின்புற நுனி என்று அர்த்தம். அவர் அவனை ச....தாம் என்று அழைத்தார். நேபுகாத் நேச்சாருக்கு முன்பாக தன்னுடைய படம் பொறிக்கப்பட்ட பணத்தை வெளியிட்டான். பழங்கால பட்டிணமாகிய பாபிலோனை மறுபடியும் கட்டுவதற்கு சதாம் செல்வத்தை எல்லாம் செலவழித்தான். பழங்கால பாபிலோன் கண்டுபிடிக்கப்பட்டு அது வறட்சியான மணலின்மேல் அங்கே புதைக்கப்பட்டது. செங்கட் கற்கள் காய்ந்த மணலினால் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் பழங்கால பாபிலோனைத் திரும்பவும் தோண்டி எடுத்து அதை மறுபடியும் கட்டினார்கள். கடந்த 20 அல்லது 30 ஆண்டு காலங்களில் பாபிலோன் பட்டணமானது முழுவதுமாக கட்டப்பட்டுள்ளது. "நான் சதாம் உசேன்" என்று எழுதியுள்ள செங்களை ஒவ்வொரு பத்து அடிக்கு ஒன்றாக சுவரைச்சுற்றிலும் இருக்கும்படி செய்துள்ளான்..... .....நான் மகாபெரிய பாபிலோனை மறுபடியும் கட்டினேன்; நான் நேபுகாத் நேச்சாரின் பேரன் என்று எழுதியிருக்கிறது. ஆனால் அந்த அசல் சுவற்றிலே, சிங்கங்களின் செதுக்கியப் படங்களையும் மற்றும் பறக்கும் பாம்புகளின் செதுக்கிய படங்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அங்கே ஏன் ஒரு சிங்கம் இருந்தது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நாம் சிங்கங்களைப் பற்றி அறிகிறோம். ஆனால், 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக, செதுக்கிய பறக்கும் பாம்புகளை ஒரு செங்களின்மேல் தெரியும்படியாக, அவர்கள் போட்டிருப்பது ஏன்? ஒருவேளை, அவர்கள் பறக்கும் பாம்புகளைப் பற்றித் தெரிந்திருந்த காரணத்தினால் இருக்கலாம். அவைகள் இன்னும் அங்கே இருக்கின்றன; நீங்கள் சென்று அவைகளைப் பார்க்கலாம். என்னுடைய நண்பர் ஒருவர் அங்கே இராணுவ வீரராக இருக்கிறார். அவைகளை இஷ்தார் நுழைவு வாயில் (Ishtar Gate) மூடியிருக்கிறது, சிங்கங்களின் படங்களும் மற்றும் பறக்கும் பாம்புகளின் படங்களும் மாறிமாறி இருக்கின்றன. எங்களது டைனோஸர் துணிகர நிலம் உருவாக்குவதற்கு அதை ஒரு முன்னுதாரணமாக வைத்து உருவாக்கினோம். நீங்கள் புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவிற்கு வருவதற்கு விரும்பினால், பெரும்பாலானவர்களுக்கு ஈராக் நாட்டைக் காட்டிலும் அது அருகில் உள்ளதுபோல் இருக்கிறது. கி.மு. 300 ஆவது ஆண்டில் மகா அலெக்ஸாண்டரின் போர்வீரர்கள், இந்தியாவின் ஒரு பகுதியை வென்றபொழுது பறக்கும் பாம்புகளினால் பயந்தனர் என்று அலெக்ஸாண்டர் பதிவுசெய்துள்ளார். இரண்டு நீண்ட கழுத்துடைய பறக்கும் பாம்புகள் சண்டையிடுவதுபோல் அல்லது முத்தம் கொடுப்பதுபோல் உள்ளதை இந்த ரோமானிய மொசைக் கற்கள் காண்பிக்கின்றன. கி.பி. 200 ஆவது ஆண்டில் பறக்கும் பாம்புகளைப் பற்றி ரோமானியர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர்? கி.பி. 275 ஆவது ஆண்டில் பறக்கும் பாம்புகளைக் கொல்லுவதில் பரி. ஜியார்ஜ் மிகவும் பெயர்பெற்றவராக இருந்தார். பியோஉல்ப் (Beowulf) இரண்டு பறக்கும் பாம்புகளைக் கொன்றான், அதற்குப் பின்பு மூன்றாவது ஒன்று அவனைக் கொன்றது. பியோஉல்ப் கதையைப் பழங்கால ஆங்கிலத்தில் வாசிக்க நீங்கள் முயற்ச்சி செய்யவேண்டும். நல்ல அதிர்ஷ்டம்; அதுதான் ஆங்கிலமாக இருக்கிறது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அதுதான் ஆங்கிலம். அந்தப் பக்கத்தில் இருக்கிற முதல் வார்த்தையை மட்டுமே என்னால் வாசிக்க முடிகிறது, அது டூ "DUH" என்று சொல்லுவதுபோல் உள்ளது. அவர்கள் அந்தக் கதையை நவீன ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்பொழுது, அந்தக் கதையானது பியோஉல்ப் கிரண்டல் என்கிற பறக்கும் பாம்பைக் கொன்றான் என்று கூறுகிறது..... ....அதனுடைய சிறிய கைகளில் ஒன்றை பிடுங்கினதினால், அந்தப் பிராணி இரத்தம்சொட்ட இறந்தது. அதனுடைய கையைப் பிடுங்கினானா? ஒரு மனிதன், ஒரு பறக்கும் பாம்பின் கையைப் பிடுங்கினதுபோல் காணப்படும், ஒரு பாபிலோனிய வட்டமான முத்திரையை அவர்கள் கண்டுபிடித்தனர். பறக்கும் பாம்புகள் மனிதனுடன் வாழ்ந்தன என்பது பற்றி, நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், பில் கூப்பர் (Bill Cooper) எழுதியுள்ள புத்தகமாகிய வெள்ளத்திற்குப் பின்பு (After the Flood) என்கிற புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு பெயர்பெற்ற பட்டிணம் இருக்கிறது, ஏனெனில், தண்ணீரிலிருந்து ஒரு பறக்கும் பாம்பு வெளியே வந்தபோது, அதை ஒரு மனிதன் கொன்றான். அவன் அதின் தலையை வெட்டி ஒரு கட்டிடத்தின் மூலையின்மேல் அதை அடித்தான். பறக்கும் பாம்பின் தலையின்மீது அவனுடைய கட்டிடம் ஏறியது. அவர்கள் அதை கார்கோயிலி (Gargoyle) என்று அழைக்கின்றனர். எத்தனைபேர்கள் எப்பொழுதாவது கார்கோயிலியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இன்றும் அதைக் கட்டிடம் கட்டுபவர்கள் செய்கின்றனர். அவர்கள் இந்த அவலட்சணமான பிராணிகளை வாங்கி அவைகளை அவர்களின் கட்டிடங்களிலோ அல்லது அவர்களின் கதவுகளிலோ வைக்கின்றனர். கார்கோயிலி என்கிற வார்த்தைக்கு "தொண்டை" என்பது அர்த்தமாகும். நம்முடைய ஆங்கில வார்த்தைகளான, gargle, gurgle, regurgitate, gorge மற்றும் glutton போன்ற வார்த்தைகள் அனைத்தும் தொண்டையுடன் தொடர்புடைய வார்த்தைகளாகும். எனவே, நீங்கள் அடுத்தமுறை gargle (வாய் கொப்புளி) என்றால், ஒரு பறக்கும் பாம்பைக் கொல்லுவதைப் பற்றி நினைக்கலாம். "சகோதரர் ஹோவிந் அவர்களே, நான் gargle என்று சொல்லும்பொழுது ஒரு பறக்கும் பாம்பைக்கொன்றுகொண்டு இருக்கிறேன்" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஒரு பறக்கும் பாம்பின் வாலில் இரும்பு ஆணிகளால் அடித்து அதைக்கொன்றனர் என்று ஒரு பழங்கால ஐரிஸ் வரலாற்றுக்காரர் எழுதினார். தாவரங்களை உண்ணும் டைனோஸர்களுக்கு (Stegosaurus) பெரிய நீண்ட வால் இருந்தது, அது உறுதியாக இருக்கிறது. மற்ற பல விலங்குகளுக்கு இருப்பதுபோலவே இருந்தது. வடபகுதியில் உள்ள ஒரு மரத்துண்டில் ஒரு பறக்கும் பாம்பு ஒரு மனிதனை விழுங்கிக்கொண்டிருப்பதுபோன்று இருக்கிறது. இது 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, 11ஆம் நூற்றாண்டில் இருந்ததாகும். வடபகுதியில் உள்ளவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் பறக்கும் பாம்பின் தலைகளை அவர்களின் கப்பல்களில் வைத்தனர். அதை அவர்கள் ஏன் செய்தனர்? கடலின் பெரிய பறக்கும் பாம்புகளைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவர்கள் அதை கிராக்கன் (Kracken) என்று அழைத்தனர். மறுபடியும், "வெள்ளத்திற்குப் பின்பு" என்கிற புத்தகத்தில் பில் கூப்பர் அதைப் பற்றி அதிகம் சேர்த்துள்ளார். சீஜ்ஃபிரட் (Siegfried) என்கிற ஐஸ்லாண்ட் நாட்டின் பெயர்பெற்ற கதா நாயகன், ஃபாப்னிர் (Fafnir) என்கிற பறக்கும் பாம்பைக் கொன்றான். 12ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு கோட்டையில், பறக்கும் பாம்புகள் காணப்படும் செங்கள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. 12 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனி நாட்டில் பறக்கும் பாம்புகள் இருப்பதுபோன்றுள்ள ஒரு கோட்டையானது இங்கே இருக்கிறது. அவர்களின் கோட்டையில் பறக்கும் பாம்புகளை அவர்கள் போட்டது ஏன்? இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோ போலோ (Marco Polo) என்னும் கண்டுபிடிப்பாளர் சீனாவில் 17 ஆண்டுகள் இருந்தார். அவர்களுடைய பேரரசர் அணிவகுப்பில், இரதங்களை இழுப்பதற்கு பறக்கும் பாம்புகளை வளர்த்தார் என்று அவர் தாய் நாடு திரும்பியபோது கூறினார். மார்க்கோ போலோ அதை ஏன் சொல்லியிருக்கிறார்? ஒருவேளை காரணம் என்னவெனில்...... சீனாவின் பேரரசர் தன்னுடைய அணிவகுப்பில் இரதங்களை இழுப்பதற்கு, பறக்கும் பாம்புகளை வளர்த்துக்கொண்டிருந்தார்; இது என்னுடைய கோட்பாடாகும். சீனாவில், 1611 ஆம் ஆண்டில் அவர்கள் "ராஜாவின் பறக்கும் பாம்புகளுக்கு உணவளிப்பவர்" என்கிற பதவியை நியமித்தனர். உங்களுக்கு ராஜாவின் பறக்கும் பாம்புகளுக்கு உணவளிப்பவர் ஏன் தேவையிருக்கிறது? நான் உத்தேசிக்க எனக்கு அனுமதி கொடுங்கள்: பறக்கும் பாம்புகளுக்கு உணவளிப்பதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன். 13 ஆம் நூற்றாண்டின் ஒரு கோட்டையின்மேல் பறக்கும் பாம்புகள் காணப்படுவதுபோல் அங்கே இருக்கிறது. பித்தளையின்மீது இரண்டு செதுக்கிய நீண்ட கழுத்துகளுள்ள டைனோஸர்கள் இருக்கும், 15 ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு கல்லறை இருக்கிறது. இந்த 16ஆம் நூற்றாண்டுக் கோட்டையின்மேல் பறக்கும் பாம்புகள் இருக்கின்றன. எங்களுடைய அருங்காட்சியகத்தில் கடனுக்கு ஏழு வெள்ளிக்காசுகள் இருக்கின்றன. அவைகள் 1500 முதல் 1600 ஆண்டுகளில் இருந்த வெள்ளி டாலர்களாகும். அவைகள் உண்மையான வெள்ளி டாலர்கள்; அவைகளில் அனைத்திலும் யாரோ ஒருவர் பறக்கும் பாம்பைக் கொல்லுவதுபோல் உள்ளதைக் காண்பிக்கின்றன. பறக்கும் பாம்புகள் 400 ஆண்டுகளுக்கு முன்புவரையில் சாதாரணமாக இருந்தன. ஒவ்வொருவரும் பறக்கும் பாம்புகளைக் கொல்லுவதைப் பற்றி அறிந்தனர். ஒரு பறக்கும் பாம்பு கொல்லப்படவேண்டும் என்பது தெளிவாக இருந்தது. அது ஒரு நிலையான செயல்முறையாக இருந்தது. பறக்கும் பாம்பைக் கொன்று இளவரசியையோ அல்லது எதையோ காப்பாற்றுங்கள். ஒரு மனிதன், ஒரு பறக்கும் பாம்பைக் கொல்லுவதுபோல் உள்ள ஒரு ரஷ்ய நாட்டு பதக்கம் இருக்கிறது. யாரோ ஒருவர் ஒரு பறக்கும் பாம்பைக் கொல்லுவதுபோல் காண்பிக்கும் பல்கேரி நாட்டின் தபால் தலை ஒன்று உள்ளது. லித்துஆனியா (Lithuania) சிகரமானது, யாரோ ஒருவர் ஒரு பறக்கும் பாம்பைக் கொல்லுவதுபோன்று காண்பிக்கிறது. பறக்கும் பாம்பைக் கொன்ற ஒரு மனிதனைக் கெளரவப்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நகரமானது நர்லக் (Nerluc) என்று மறுபெயரிடப்பட்டது. பழங்காலத்து அமெரிக்க ஆதிவாசிகள், மலைகளூக்கிடையே உள்ள ஆழமான இடைவெளிச்சுவறுகளில் (Grand Canyon) டைனோஸர்களின் படங்களைச் செதுக்கினார்கள். ஏன் அவர்கள் மலைகளூக்கிடையே உள்ள ஆழமான இடைவெளிச்சுவறுகளில் (Grand Canyon) டைனோஸர்களின் படங்களைச் செதுக்கினார்கள்? ஒருவேளை அவர்கள் அங்கே சுற்றியுள்ள இடங்களில் டைனோஸர்களைப் பார்த்து அவைகளை வேட்டையாடியிருக்கிற காரணமாகவும் இருக்கலாம். 1925 ஆம் ஆண்டில், சில மனிதர்கள் தென்மேற்கே உள்ள மலைகளுக்கிடையே உள்ள ஆழமான இடைவெளியின் (Grand Canyon) அடிப்பாகத்தில் கட்டுமரத்தில் பிரயாணம்செய்து அவர்கள் ஒரு அறிக்கையை எழுதினார்கள். இந்த டைனோஸர்களில் ஒன்றை அவர்கள் பார்த்தார்கள். " உண்மையென்னவெனில், வரலாற்றுக்கு முந்தின ஒரு மனிதன்...... இந்த மலைகளுக்கிடையே உள்ள சுவறுகளில் டைனோஸர்களின் படத்தை வரைந்து, நமது கோட்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் தலைகீழாக்கிவிட்டான் என்று கூறுகிறார்கள். ஓ! அவர்கள் அவனின் கோட்பாடுகளைத் தலைகீழாக்குகிறார்கள்! ஓ, இல்லை...... ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு முன்பு...... செதுக்கப்பட்ட அந்த டைனோஸரின் ஒரு படமானது மிகவும் பெயர்பெற்ற ஒரு விஞ்ஞானியினிடத்தில் காண்பிக்கப்பட்டது; அவர் அப்பொழுது டைனோஸர்கள் பற்றி பிரத்தியேக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் என்று அவன் கூறுகிறான். அது ஒரு டைனோஸராக இருப்பதற்கு வாய்ப்பில்லை,ஏனெனில் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அவைகள் அழிந்துவிட்டன........ ........பூமியில் மனிதன் காணப்படுவதற்கு முன்னர் அவைகள் அழிந்துவிட்டன என்று அவர் கூறுகிறார். இது சில கேள்விகளை எழுப்புகிறது. முதலாவது, 12 மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நேரிட்டது என்பதை நீங்கள் அறிவது சாத்தியமில்லை. அது நிச்சயமாக நமக்குத் தெரியும். இரண்டாவது, அவர் "12 மில்லியன்" என்று சொன்னதைக் கவனியுங்கள். இன்று, "65 மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு" டைனோஸர்கள் இறந்தன என்று மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அப்படித்தானே? 65 மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பாகவா? அவர்கள் பூமியின் வயதை அதிகமாகப் பார்ப்பது சுவராஸ்யமாக இருக்கிறது. 1770 ஆம் ஆண்டில், இந்தப் பூமிக்கு 70, 000 ஆண்டுகள் வயதாகிறது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். 1902 ஆம் ஆண்டில் அதற்கு 2 பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று கூறினார்கள். 1969 ஆம் ஆண்டில் இதற்கு 3.5 பில்லியன்கள் ஆண்டுகள் வயதானது என்று கூறினார்கள். இன்று இதற்கு 4.6 பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று கூறுகிறார்கள். இந்தப் பூமியானது ஒரு வருடத்திற்கு 21 மில்லியன்கள் ஆண்டுகள் வீதம் வயது முதிர்ச்சியடைகிறது என்று அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அதாவது ஒரு நிமிடத்திற்கு 40 ஆண்டுகள் வீதம் பூமியானது விரைவாக முதிர்ச்சியடைகிறதாம். நீங்கள் உட்டாவில் உள்ள பிலாண்டிங் சென்றால், அங்கே உள்ள செங்குத்தான மலைப்பாறையில் டைனோஸர்களின் செதுக்கிய வரைபடங்களைப் பார்ப்பீர்கள். வெளிப்படையாக உட்டாவில் டைனோஸர்கள் இருப்பதைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவைகளைப் பற்றி இந்தியர்கள் அறிந்தனர். அவர்கள் அவைகளை வெளிப்படையாகக் கொன்றனர். ஒரு டைனோஸர்போல் காணப்படுவதைக் கண்டு, ஒரு மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதுபோன்று காண்பிக்கும் ஒரு குகை வரைபடம் ஒன்று ஆஸ்த்திரேலியாவில் உள்ளது. கனடா நாட்டின் அண்டாரியோவில் (Ontario), மிஷிபிசூ (Mishepezoo) என்கிற இடத்தின் பெயரை என்னால் உச்சரிக்க இயலவில்லை. அங்கே உள்ள மலைப்பாறையில் இந்த இந்தியர்கள் வரைந்த படம் போன்று, அது ஒரு டைனோஸர் போன்று காணப்படுகிறது..... ......தோலின் பகுதியானது சுருங்கி முகட்டுப்பகுதியானது கீழ் நோக்கி பின்பக்கமாகச் செல்லுகிறது. இது ஆஸ்த்திரேலியாவில் உள்ள ஒரு வரைபடமாகும்; இந்த மனிதர்கள் ஒரு டைனோஸரைச் சுற்றி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தெளிவாகத் தெரிகிறது, அது அவர்களின் நண்பனைத் தின்றுவிட்டக் காரணத்தினால் அவர்கள் தலைகீழாக இருக்கிறார்கள். அங்கே உள்ளே நண்பன் இருக்கிறான். "இப்பொழுதே, தயவுசெய்து அவனை மறுபடியும் தா" என்று யாருமே ஒரு டைனோஸரைப் பார்த்திராதபோது ஒரு மனிதன் சொன்னால், அப்போது பாறை வரைபடங்களில் அவர்கள் வரைந்தது ஏன்? பழங்கால மண்பாண்டங்களில் அவர்கள் வரைந்தது ஏன்? ஒரு மனிதனும் இதுவரை ஒரு பறக்கும் பாம்பைக் கண்டதில்லையெனில், பறக்கும் பாம்புகளின் பழங்காலப் பொறிக்கப்பட்ட பலவையான சொற்களை நாம் பார்ப்பது ஏன்? பெரு நாட்டின் (Peru) கீழே, உலகின் அதிக வறட்சியானப் பாலைவனத்தை அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். கடந்த 400 ஆண்டுகளில் இரண்டுமுறை மட்டுமே அங்கே மழை பெய்திருக்கிறது; இது என்னுடைய புரிந்துகொள்ளுதலாகும். 1500 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டினர் அதன் வழியாகக் கடந்துசென்றபோது, அந்தப் பாலைவனத்தில் வெள்ளையான வரிகளைக் கண்டுபிடித்தனர். அவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சில மக்கள் பாறைகளைக் குவித்தார்கள். அங்கே ஒரு வெள்ளைப் பாறைகளின் குவியல் இருக்கிறது; சில நேரங்களில் அது சில கிலோமீட்டர்கள் நீளமாக ஒரு அம்பைப் போன்று நீண்டு காணப்படுகிறது. இன்று அவைகள் நாஸ்கா வரிகள் (Nazca Lines) என்று அழைக்கப்படுகின்றன. நாஸ்கா உருவங்களைப் பற்றி எத்தனைபேர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? பெரு நாட்டின் கீழே அவர்கள் இந்த அனைத்துப் உருவங்களையும் வைத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் அதைப் பற்றி நீங்கள் படிக்கலாம். ஒரு விநோதமான உண்மை என்னவெனில், இந்த உருவங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன, ஆனால் அவைகளில் ஒன்றாக ஒரு எட்டுக்கால் பூச்சி இருக்கிறது. அந்த எட்டுக்கால் பூச்சிக்கு கண்கள் கிடையாது, மற்றும் ஒரு காலானது மற்றவைகளைவிட நீளமாக இருக்கிறது. இவைகள் ஏழைகளால், அறியாதவர்களால் மற்றும் அறிவற்றவர்களால் உருவாக்கப்பட்டன என்று பல நூற்றாண்டுகளாக ஒவ்வொருவரும் நினைத்தனர். கண்களை அந்த எட்டுக்கால் பூச்சிக்கு வைப்பதற்கு அவர்கள் மறந்துவிட்டனர், மற்றும் தற்செயலாக அவர்கள் ஒரு காலை நீளமானதாக உருவாக்கினர் என்று நினைத்தனர். சமீபத்தில், அமேஸான் காட்டில் 1500 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வித்தியாசமான ஒரு எட்டுக்கால் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அது குகைகளில் மட்டும் வாழ்கிறது மற்றும் அது மிகவும் அபூர்வமானது. பூமியில் உள்ள எட்டுக்கால் பூச்சிகளில் மிகவும் அபூர்வமானவைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. 3 மில்லிமைக்ரான் அளவுள்ள நீளமுள்ளதாக மட்டுமே அது இருக்கிறது. அது மிகவும் சிறிய ஒரு எட்டுக்கால் பூச்சியாக இருக்கிறது. அந்தக் கண்கள் இல்லாத எட்டுக்கால் பூச்சியானது ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள இருண்ட குகைகளில் வாழ்கிறது. மற்றும் இனப்பெருக்கக் காலத்தில், அந்த ஒரு நீண்ட காலானது இன்னும் நீளமாக வளர்ந்து, காலின் நுனிப்பகுதியில் DNA வைப் பரிமாறிக்கொள்ளுகிறது. 1,500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த அதை பெரு நாட்டின் பழங்கால மக்கள் எவ்வாறு அறிந்தனர்? ஒருவேளை அவர்கள் முட்டாள்களாக இருக்கவில்லை. 1535 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டின் வெற்றிபெற்றவர்கள் பெரு நாட்டின் வழியாக பிரயாணம் பண்ணினபோது, விசித்திரமான விலங்குகளின் படங்கள் செதுக்கப்பட்ட கற்களைக் கண்டார்கள். அவைகளில் சிலவற்றை அவர்கள் ஸ்பெயின் நாட்டின் இராஜவுக்கு அனுப்பி, "இந்தப் பாறைகளில் செதுக்கப்பட்ட விலங்குகள் இந்தப் பூமியில் இருக்கிறதே என்ன?" என்று கேட்டனர். எனக்குத் தெரியாது என்று அந்த இராஜாவும் சொல்லியிருப்பான். பெரு நாட்டில் ஐகா என்னுமிடத்தில் அவைகள் எடுக்கப்படுகிறதினால் இன்று ஐகா கல்லரைக் கற்கள் என்று அழைக்கப்படுகிறது. டென்னிஸ் ஸ்விவ்ட் (Dennis Swift) என்கிற உலக வல்லுனர் அவைகளைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்கலாம்; ஓரிகனில் உள்ள போர்ட்லாண்டில் இருக்கும் அவர் என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவராவார். 2005 ஆண்டில் நடைபெற்ற சிருஷ்டிப்பின் ஆதார முகாமில் அவர் ஒரு கூட்டத்தில் மிகப்பெரிய சிறப்புரையாற்றினார். எங்களுடைய சிருஷ்டிப்பின் ஆதார முகாமானது புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் நடைபெறுகிறது. ஐகா கற்களைப் பற்றி அவர் பேசியிருக்கிற DVD க்கள் எங்களிடம் இருக்கின்றன. அது மிகவும் சிறப்புவாய்ந்தது; நிங்கள் எங்களின் இணைய தளத்தில் அவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கற்கள் டைனோஸர்களை அவைகளின்மீது காண்பிக்கிறதாக இருக்கின்றன. கிறிஸ்து வாழ்ந்த காலங்களூக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்போ அல்லது பின்போ இந்த ஐகா கல்லரைக் கற்கள் எடுக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. அவைகளில் சிலவைகள் மூளை அறுவை சிகிட்சையைக் காண்பிக்கின்றன. அவர்கள் கடினமான பித்தளையினால் செய்யப்பட்ட மூளை அறுவை சிகிட்சை செய்யும் கருவிகளையும் கண்டுபிடித்தனர். மக்களின் தலைகளை வெட்டுவதற்கு ஏற்ற பதமான பித்தளைக் கருவிகளை வைத்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவைகளில் சிலவைகள் இருதய அறுவை சிகிட்சையைக் காண்பிக்கின்றன மற்றும் கால் பகுதியை மீண்டும் இணைப்பதைக் காண்பிக்கின்றன. அவைகளில் ஒன்று, ஒரு நீராவி இயந்திரம்போன்று காணப்படுவதைக் காண்பிக்கிறது. பெரு நாட்டில் உள்ள இந்த ஐகா கற்களில் விநோதமான காரியங்கள் காணப்படுகின்றன; அவைகளில் சிலவைகள் முற்றிலும் விநோதமானவைகள். அவைகளில் 500 க்கும் அதிகமானவைகளில் டைனோஸர்களைக் காண்பிக்கின்றன என்று நான் நம்புகிறேன். அதே கற்களில் டைனோஸர்களும் மற்றும் மனிதர்களும் ஏன் காணப்படுகின்றன? நல்லது, ஏனெனில் மக்கள் டைனோஸர்களுடன் வாழ்ந்தனர். எங்களுடைய அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்று அங்கே இருக்கிறது. டைனோஸரானது தன்னுடைய தலையினால் ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டிருப்பதை அது காண்பிக்கிறது. பறக்கும் பாம்பின் தலையை ஒரு மனிதன் கொல்லுவதைப்போன்று காணப்படுவதை இது காண்பிக்கிறது; ஏனெனில் அது அவனின் நண்பனைக் கொன்றது. நண்பனுடைய உடலானது உள்ளே இருப்பதை நீங்கள் பார்க்கமுடிகிறது, ஆனால் அவனுடைய தலை இல்லாமல் இருக்கிறது. எனவே, பழிவாங்குதல் என்று வேதாகமத்தில் அழைக்கப்படுகிறதை அவனுடைய நண்பன் செய்துகொண்டிருக்கிறான்; அது தேவனுடைய வேலையாக இருக்கிறது. இந்த மனிதன் ஒரு ஈட்டியினால் ஒன்றின் தொண்டை வழியாக அதிக வேகமாகக் குத்திக்கொண்டிருக்கிறான். இந்த உருவத்தைப் பார்ப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த மனிதன் அந்த ஈட்டியை பறக்கும் பாம்பின் தொண்டையின் மேலிருந்து கீழாக அழுத்திக்கொண்டிருக்கிறான். பறக்கும் பாம்பானது மனிதனைக் கைகளினால் பிடித்திருந்தது, மற்றும் அவனுடைய ஆவி சென்றுகொண்டிருக்கிறது; அது பரலோகத்திற்குப் பறந்துகொண்டிருக்கிறது. அல்லது அவர்களின் கலாச்சாரப்படி, அவர்கள் மரணத்திற்குப் பின்பு எங்கு செல்லுவார்கள் என நம்பினார்களோ அங்கு அவர்கள் செல்லுவார்கள். இந்த மனிதன், பறக்கும் பாம்பின் தலையில் கத்தியை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறான், மற்றும் அந்தப் பறக்கும் பாம்பானது அவனைக் கடித்துக்கொண்டிருக்கிறது. புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் இந்தக் கற்களில் எட்டு எங்களிடம் இருக்கிறது; அமெரிக்காவின் மிகப்பெரிய சேகரிப்பு என்று நான் நம்புகிறேன். ஒவ்வொன்றும் 1,500 டாலர் தொகையாக இருப்பதினால், சில மக்கள் மட்டுமே இவைகளை வைத்திருக்கிறார்கள். அவைகளின் அருகில் வட்டங்கள் இருப்பதை சிலவைகள் காண்பிக்கின்றன. அது முற்றிலும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. டைனோஸர்களின் அருகில் வட்டங்களை அவர்கள் போட்டது ஏன்? சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, படிகமான பழங்காலப்பொருளாக டைனோஸர்களின் தோலானது கண்டுபிடிக்கப்படும் வரையில், ஒருவரும் அதுவரை டைனோஸரின் தோலினைக் கண்டதில்லை. டைனோஸர்களின் தோலின்மேல் வட்டமான வடிவங்கள் இருக்கிறது என்பது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அந்தக் கற்களில் வட்டங்களைப் போடுவதற்கு அறிவதற்கு முன்பு அவர்கள் உயிருள்ள ஒரு டைனோஸரைப் பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் தோலில் வட்டங்கள் காணப்பட்டன என்று எலும்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் சொல்ல முடியாது. புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் உள்ள எங்களது அருங்காட்சியகத்தில் டைனோஸரின் தோல்களில் சிலவைகள் இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் டைனோஸரின் சில இறுகிப்போகாத மென்மையான திசுவைக் கண்டுபிடித்தனர். மென்மையான டைனோஸரின் திசுவா? எனவே, திசுவானது 70 மில்லியன்கள் ஆண்டுகளாக எவ்வாறு மென்மையாக இருக்க முடியும்? என்று தற்போது புத்திசாலியான அறிவியலார்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு 70 மில்லியன்கள் ஆண்டுகள் வயது இருக்க இயலாது என்கிற சிந்தனை அவர்களின் அறிவில் ஒருபோதும் நுழையாது. அவர்களின் தலைகளில் அந்தச் சிந்தனை ஒருபோதும் நுழையாது. இந்த மனிதன் ஒரு பறக்கும் பாம்பின் தலையை வெட்டிக்கொண்டிருக்கிறான். அவைகளில் ஒன்றின்மீது அங்கே ஒரு மனிதன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். டைனோஸர்கள் மனிதனுடன் வாழ்ந்தது பற்றிய அதிகமானத் தகவல்களை நாங்கள் சேகரித்திருக்கிறோம். சில நேரங்களில் அங்கே ஒரு நண்பத்துவ சைகை இருக்கிறது. இதுபோன்று, மனிதன் ஒரு டைனோஸரை அற்பமாக காண்பிக்கிறதுபோல், அவனுடைய தலையை அதின் தோல்பட்டையில் வைத்திருப்பதுபோன்று உள்ளது. டைனோஸர்களின் படங்கள் காணப்படும் ஒரு மண்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு போர்வையில் சுருட்டப்பட்ட ஒரு கல்லரையில் ஒரு அம்மா கண்டுபிடிக்கப்பட்டார்கள், மற்றும் அந்தப் போர்வையின்மேல் எங்கும் டைனோஸர்களின் உருவங்கள் காணப்பட்டன. அவர்களின் போர்வைகளில் அவர்கள் ஏன் டைனோஸர்களைப் போட்டார்கள்? அவர்களின் மண்பாண்டத்தில் அவர்கள் ஏன் டைனோஸர்களை வரைந்தார்கள்? மலை உச்சியின் பாறைகளில் அவர்கள் ஏன் அவைகளை செதுக்கினார்கள்? அவர்களின் இடுப்புக்கயிறுகளில் அவர்கள் அவைகளைப் போட்டது ஏன்? மெக்ஸிகோவின் அக்கம்பரா என்னுமிடத்தில் சுமார் 56,000 டைனோஸர்களின் களிமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் அவைகளை மத்திய மெக்ஸிகோவில் தெரிந்துகொண்டார்கள். அவைகள் எப்பொழுதும் மனிதனுடன் வாழ்ந்தன; அவைகள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வாழவில்லை. ஆனால், பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு டைனோஸர்கள் வாழ்ந்தன என்று இன்று பரிணாமவாதிகள் கூறுகிறார்கள். மேலும் ஒரு டைனோஸரையும் ஒருவர்கூடப் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். ஆம், அவைகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு இத்தாலிய விவசாயி தன்னுடைய பசுமாடுகளைத் தொல்லைப்படுத்தின ஒரு பறக்கும் பாம்பைக் கொன்றான். 1572 ஆம் ஆண்டு அவர்கள் அதை ஒரு அருங்காட்சியகக் காட்சிக்காக ஒரு மலைமீது கொண்டுசென்றனர். இதனிடையே, டோனி என்று பல இத்தாலியர்கள் அழைக்கப்படுவது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் பலர் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு வந்துகொண்டிருந்தனர். (TO:N.Y. New York). இறக்கைகளையுடைய ஒரு பறக்கும் பிராணி தன்னுடைய இறக்கைகளை மடக்கிவைத்திருப்பதுபோன்ற ஒரு சூடான் தொல்பொருள் காண்பிக்கிறது. உட்டா (Utah) என்ற இடத்தில் காணப்பட்ட ஒரு பறக்கும் பாம்பின் படத்தை இந்தப் பெண்மணி எனக்கு அனுப்பினாள். "சகோதரர் ஹோவிந் அவர்களே, மலையுச்சியில் செதுக்கப்பட்ட இது ஒரு டைனோஸர்போல் எனக்குத் தெரிகிறது" என்று அவள் கூறினாள். அரிஸோனாவில் உள்ள டக்ஸன் (Tucson) என்ற இடத்தில் ரோமானிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனிடையே, கொலம்பஸ்ஸிற்கு முன்பே ரோமானியர்கள் கடல்தாண்டிப் பிரயாணம் பண்ணி வந்தனர். கொலம்பஸ் என்னும் வெள்ளை மனிதன் கடலைத் தாண்டி பிரயாணம் பண்ணின முதல் மனிதன் அல்ல. இருண்ட காலங்கள் வந்ததிற்கு முன்பாகவே பல நூற்றாண்டுகளாக அங்கே போக்கும் வரத்துமான வணிகம் இருந்தது...... மற்றும் கடல்தாண்டிய பிரயாணம் பற்றிய அறிவையும் மற்றும் தகவலையும் நிறுத்திவையுங்கள். பிரண்டன் (Brendan) என்கிற கப்பல் மாலுமி கி.மு.500 ஆம் ஆண்டு கடல்தாண்டிவந்தார். ஒஹியோ (Ohio) என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லரைக் குன்றில் எபிரெயக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிறிஸ்துவின் காலத்தில் அட்லாண்டிக் கடலைத் தாண்டி இங்கும் அங்கும் வணிகம் அங்கே இருந்தது. நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் லூனாஸில் பத்துக்கட்டளைகள் எழுதப்பட்ட கல் கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கால கிரேக்க மொழியில் பத்துக்கட்டளைகளைக் காண்பிக்கும் 80 டன் எடையுடைய ஒரு கல் அங்கே இருக்கிறது. வரலாற்றின்படி, சுமார் கி.மு. 500 ஆம் ஆண்டுகள்வரை மட்டும்தான் இந்த மொழிப்பதிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. யாரோஒருவர் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் கடந்து அமெரிக்காவிற்கு நற்செய்தி அறிவிக்கச்சென்று நியூ மெக்ஸிகோவரை சென்றுள்ளார். இந்த ரோமானிய கத்திகளில் ஒன்று, ஒரு டைனோஸர் அதின்மீது இருப்பதுபோன்றதைத் தெளிவாகக் காண்பிக்கிறது. ரோமானியப் பேரரசின் நாட்களில் அவர்கள் டைனோஸர்களை அவர்களின் கத்திகளில் எவ்வாறு செதுக்கியிருக்க முடிந்தது? கடலில் காணப்பட்ட பெரிய பிராணிகளைக் கண்ட மக்களின் பழங்காலக்கதைகள் அங்கே ஆயிரக்கணக்கில் கப்பலில் பிரயாணம் பண்ணின காலத்தில் இருந்தன. நீங்கள் படகில் பிரயாணம் செய்யும்போது நீங்கள் முற்றிலும் தண்ணீர்வழியாகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். இன்று, தண்ணீருக்குக் கீழ் ஒரு டீசல் இயந்திரத்தினால் 80 கிலோமீட்டர் தொலைவில் நீங்கள் வரும்போது அவர்களால் கேட்க முடிகிறது. இன்று நிச்சயமாக நீங்கள் ஒருவரைப் பார்க்கப்போவதில்லை. நீங்கள் தூரத்திலிருந்து வருவதை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். பறக்கும் பாம்புகள் மக்களைச் சுற்றி வாழ்ந்ததாக உலகின் அனைத்துப் பகுதியிலும் பழங்காலக் கதைகள் அங்கே இருக்கின்றன. நம்மிடம் பொய்சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் உண்மையிலே நினைக்கிறேன். பறக்கும் பாம்புகளைப் பற்றியப் பழங்காலக் கதைகளைப்பற்றி நாம் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கலாம். வரலாற்றின் காலங்களின் வழியாக பறக்கும் பாம்புகளைப் பார்த்த விபரங்களைப் பற்றி நான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். பறக்கும் பாம்புகளைப் பற்றிய பழங்காலக் கதைகளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், எங்களது கருத்தரங்கம் எண் 3 ஐ பெற்றுக்கொள்ளுங்கள். எட்டுக்கால்களையுடைய மிகப்பெரிய மென் உயிரி கடலில் வாழ்வது பற்றி விவரிக்கும் கதைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நான் எதை அர்த்தப்படுத்துகிறேன் எனில், பெரிய, மிகப்பெரிய எட்டுக்கால்களையுடைய மென் உயிரியைச் சொல்லுகிறேன். புளோரிடாவின் கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட எட்டுக்கால்களையுடைய மென் உயிரி கரை ஒதுங்கியது. அதன் குறுக்களவானது 61 மீட்டர்கள் அளவும் 5 டன்கள் எடையும் உள்ளதாக இருந்தது. அது எட்டுக்கால்களை உடைய ஒரு பெரிய மென் உயிரியாக இருந்தது. சியாட்டில் அருகே ஒரு திமிங்கிலமானது கொல்லப்பட்டது; எட்டுக்காள்களை உடைய ஒரு பெரிய மென் உயிரியின் ஒரு கால் அந்தத் திமிங்கிலத்தின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டது, அது 46 மீட்டர் நீளமாக இருந்தது. திமிங்கிலங்கள் எட்டுக்கால்களை உடைய பெரிய மென் உயிரிகளை உண்பதை விரும்புகின்றன. ஒரு திமிங்கிலமானது அதிகமாக எட்டுக்கால் பெரிய மென் உயிரிகளை சாப்பிட்டால், அதற்கு நோய் ஏற்பட்டு அதை மறுபடியும் வாந்தி எடுத்துவிடும். கடலில் எட்டுக்கால்களை உடைய மென் உயிரியின் பாகமானது வாந்தி எடுக்கப்பட்டுக் கிடப்பதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்தால், அதை உடனே பிடித்துவிடுங்கள். அது ஒரு சொத்துக்குத் தகுதியுடையதாக இருக்கிறது. வாந்தி எடுக்கப்பட்ட எட்டுக்கால்களையுடைய மென் உயிரியிலிருந்து மக்கள் என்ன தயாரிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? வாசனைத் தைலம், அது சரி. ஆண்களுக்குச் சில காரியங்களை விவரிப்பதற்கு அது உதவியாக இருக்கிறது. "என் அன்பான மனைவியே, வாந்தி எடுக்கப்பட்ட எட்டுக்கால்களை உடைய மென் உயிரியின் வாசனையைப் போன்று நீ இருக்கிறாய்." "ஆம், நீ சில மாதங்கள் வெளியேகூடத் தூங்கலாம்." என்று சொல்லலாம். பத்துக்கால்களையுடைய மிகப்பெரிய மென் உயிரிகள் கடலில் அங்கே காணப்படுகின்றன. நான் எதைச்சொல்லுகிறேன் எனில், உண்மையான பத்துக்கால்களையுடைய பெரிய மென் உயிரியைச்சொல்லுகிறேன். அந்த ஒன்றைப் பற்றி நாம் நீண்ட நேரம் செலவழிக்கலாம். நியூசிலாந்தின் கடற்கரையில் பத்துக்கால்களையுடைய மிகப்பெரிய மென் உயிரி கரை ஒதுங்கியது. அது ஒரு குழந்தை மென் உயிரி என்று அவர்கள் சொன்னார்கள். அது முழுமையாக வளர்ந்தால் அது 46 மீட்டர்கள் நீளமாக இருக்கும். "டாக்டர் ஹோவிந் அவர்களே, வரலாற்றில் குறிப்பிடப்பட்ட டைனோஸர்கள் இருக்குமானால்,....... வேதாகமம் டைனோஸர்களைப் பற்றி குறிப்பிடுகிறதா?" என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். வேதாகமத்தில் டைனோஸர்கள் பற்றித் தகவல் இருக்கிறதா? ஆம், நாம் அந்த விபரத்தை அடுத்தக் கூட்டத்தில் பார்ப்போம். டைனோஸர்களைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், ஆனால் சில டைனோஸர்கள் உண்மையிலேயே இன்னும் உயிருடன் இருக்கவேண்டும். அதை நாம் அடுத்துப் பார்ப்போம். ( கருத்தரங்கம் 3அ நிறைவடைகிறது) - www.drdino.com கருத்தரங்கம் 3ஆ ஆரம்பம் - டாக்டர் கென்ட் ஹோவிந் - மொழிபெயர்ப்பு: D. மந்திரி குமார், M.Sc. தற்போது நாம் எங்கே இருந்தோமோ அங்கிருந்து ஆரம்பிக்க அனுமதியுங்கள். "வேதாகமத்தில் டைனோஸர்கள் இருக்கின்றன." "வேதாகமத்தில் டைனோஸர்கள் இல்லை!" என்று மக்கள் சொல்லுகிறார்கள். அது உண்மையே, "டைனோஸர்" என்கிற வார்த்தை வேதாகமத்தில் இல்லை. 1841ஆம் ஆண்டுவரையில் அந்த வார்த்தையே இல்லை. "கணிணி" என்கிற வார்த்தையும் அங்கே இல்லை, ஆனால் அங்கே உண்மையிலே கணிணிகள் இருக்கின்றன. ஆம், டைனோஸர்கள் பற்றி உண்மையிலே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களது வேதாகமத்தைக் கவனமாகப்படியுங்கள். யோபுவின் புத்தகத்தை நீங்கள் படித்தால், யோபுவின் புத்தகத்தில் 42 அதிகாரங்கள் இருக்கின்றன. யோபுவின் புத்தகமானது வேதாமத்தின் நடுவில் உள்ள புத்தகமான சங்கீத புத்தகத்தின் முந்தின புத்தகமாக இருக்கிறது. ஒரு ஆர்வத்தைத் தரும் அந்த புத்தகத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். யோபு முதலாம் அதிகாரத்தில், யோபு ஒரு நீதிமானாயிருந்தான் என்று அது சொல்லுகிறது. அவன் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அது ஒரு நல்ல அறிவுரை என்று நான் சொல்லுவேன். யோபுவிற்கு 7 மகன்களும் மற்றும் 3 மகள்களும் இருந்தனர். மற்றும் யோபுவிற்கு ஆயிரக்கணக்கான ஆடுகளும், ஒட்டகங்களும், ஏர்மாடுகளும் மற்றும் கழுதைகளூம் இருந்தன. அந்த மனிதன் மிகவும் பணக்காரனாக இருந்தான். யோபுவின் புத்தகமானது ஒருவேளை வெள்ளத்திற்குப் பின்பு எழுதப்பட்டதாகவும், ஆனால் மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பும் எழுதப்பட்டது. வெள்ளத்திற்கு முன்பு, 900 ஆண்டுகளுக்கும்மேல் வாழ்வதற்க்காக மக்கள் வாழ்ந்தார்கள். வெள்ளத்திற்குப் பின்பு அவர்கள் 400 ஆண்டுகள் வாழ்வதற்காக வாழ்ந்தார்கள். யோபுவிற்கு 10 பிள்ளைகள் வளர்ந்து அவனைவிட்டுச் செல்லும்வரை நீண்ட காலமாக வாழ்ந்தான். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர், அதன்பின்பு...... ........அவனுக்கு மேலும் 10 பிள்ளைகள் இருந்து அவன் தன்னுடைய கொல்லுப்பேரப்பிள்ளைகளை தன்னுடைய இரண்டாவது குடும்பத்தில் பெற்றிருந்தான். அந்தக் காரியங்களை எல்லாம் செய்துமுடிக்க நீங்கள் நீண்ட காலம் வாழனும். யோபுவின் புத்தமானது வெள்ளத்திற்குப் பின்பு எழுதப்பட்டது என்பதற்கு இவைகள் காரணமாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் மிகவும் வயதானவர்களாக வாழ்வதற்கு வாழ்ந்த காலமாக அது இருந்திருக்கலாம். ஒரு நாள் தூதன் யோபுவிடம் வந்து இவ்வாறு சொன்னான், "என்னிடம் சில துக்கமான செய்திகள் இருக்கிறது. எருதுகளும் கழுதைகளும் திருடப்பட்டுவிட்டன....... மேலும் உம்முடைய வேலையாட்களும் கொன்றுபோடப்பட்டனர், ஆடுகள் சுட்டெரிக்கப்பட்டன, மற்றும் ஒட்டகங்களும் திருடப்பட்டன." என்று அறிவித்தான். இருப்புச் சந்தை அழிகிறது என்ற வார்தைபோல் இருந்தது. அந்த இருப்பைப் பெற்றுக்கொள்ளுவீர்களா? அதன்பின்பு இன்னொரு தூதன் வந்து இவ்வாறு சொல்லுகிறான், "யோபுவே, உங்களது பிள்ளைகள் இறந்துவிட்டார்கள்; உங்களது 10 பிள்ளைகளும் இறந்துவிட்டனர்." என்று கூறினான். யோபுவிற்கு அந்த நாள் கெட்ட நாளாக இருந்தது. அப்பொழுது யோபு சொன்னான், "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். என்ன மனவலிமை உள்ள மனிதனாக இந்த மனிதன் இருக்கிறான்? கெட்ட காரியங்கள் உங்களுக்கு நிகழும்போது, நீங்கள் அந்தமாதிரி செயல்படுவீர்களா? அதற்குப்பின்பு சாத்தான் அவனுக்கு உச்சந்தலை துவங்கி உள்ளங்கால் மட்டும் பருக்களைக் கொடுக்கிறான். ஒரு பரு என்பது உலகின் மிகவும் மோசமான பருவாகும். யோபு பருக்கலால் மூடப்பட்டான்; அதன்பின்பு அவனுடைய மனைவி அவனுக்கு எதிராக மாறுகிறாள். மனிதர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் எதையாகிலும் சமாளித்துவிடலாம் என்றும் ஆனால் அங்கே ஒரு மோசமான ஒன்று இருக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒருபோதும் ஒருவேளைக் கேள்விப்படாத ஒரு வசனம் ஒன்று அங்கே இருக்கிறது. எபேசியர் 5 ஆம் அதிகாரம் சொல்லுகிறது, "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள், மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். நீங்கள் ஒருவேளை அதுபற்றிய பிரசங்கத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒருவேளை நீங்கள் இந்தப் பகுதியை ஒருபோதும் கேள்விப்படாமலே இருக்கலாம். தன்னுடைய கணவரை, தான் மதிக்கிறேனா என்று மனைவி பார்க்கவேண்டும். ஆம், தன்னுடைய கணவரை ஆண்டவனாக நடத்துங்கள். அவள் அவனுக்கு ஒரு நாளூக்கு மூன்றுமுறை "தகனபலிகளை" (burnt sacrifices) செலுத்தலாம். அதிகாரம் 2, வசனம் 10-ல் யோபு சொல்லுகிறான், " நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்;...... தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ? என்றான். அதன்பின்பு யோபுவின் நான்கு நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தனர். அந்த மனிதர்களில் ஒருவனாகிய சூகியனான பில்தாத் என்பவன் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட மனிதர்களில் மிகவும் குள்ளமானவன். "Shuhite" என்கிற வார்த்தையின் ஆங்கில உச்சரிப்பு (Shoe height) கால் ஷு உயரம் ஆகும். அது மிகவும் நேர்த்தியான குள்ளமாக இருக்கிறது. இந்த நான்கு நண்பர்கள் யோபுவிடம் வந்து 35 அதிகாரங்கள் பேசினார்கள். யோபு புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இவர்கள் யோபுவிடம் வந்து அனைத்தும் தவறாக நடப்பது ஏன் என்கிறதை விவரிக்கிறார்கள். நம்முடைய சொந்த கவனிப்புகளின் அடிப்படையில் இருப்பதுபோன்ற பாப்திஸ்துகாரர்களைப் போல் அவர்கள் சத்தமிடுகிறார்கள். "யோபுவே, நீ பாவம் செய்திருக்க வேண்டும்" என்று அவர்கள் சொன்னார்கள். குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?" என்று எலிப்பாஸ் சொன்னான். யோபுவே, நீ பாவம் செய்தபடியால்த்தான் உமக்குக் கெட்ட காரியங்கள் நடக்கிறது என்றார்கள். அதுதான் உலகத்தின் ஞானம் என்றும், ஆனால் அது உண்மையல்ல என்றும் விளங்கிக்கொள்ளுங்கள். யாருக்காவது கெட்டது நிகழ்ந்தால், ஏன் அது நிகழ்ந்தது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அவர்களை அன்புசெய்து அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள், தைரியப்படுத்துங்கள், அதன்பின்பு அமைதியாக இருங்கள். பித்த கற்களை அவர்கள் நீக்கியிருக்கும் நேரத்தில், நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று இவ்வாறு சொல்லாதீர்கள்,.... "சகோதரரே, இவைகள் பித்தக் கற்கள் அல்ல; இவைகள் தசமபாகமும் மற்றும் காணிக்கைகளாகும்,...... தேவன் அதை உங்களிலிருந்து ஒருவழியாகவோ அல்லது வேறுவழியாகவோ அவைகளை வெளியே எடுத்துக்கொண்டிருக்கிறார்." என்று அப்படிப் சொல்லாதீர்கள். சரியா? ஒவ்வொரு காரியமும் ஏன் கெட்டதாக நிகழ்ந்தது என்று தேவன் அவர்களுக்குக் காண்பிக்க அனுமதியுங்கள். அவர் அவர்களூக்கு முற்றிலும் போதிக்க முடியும். எனவே, யோபு அங்கே தன்னுடைய உடலில் உள்ள பருக்களிலிருந்து வரும் சீழைத் துடைத்துக்கொண்டு உட்காந்து, தன்னுடைய 10 பிள்ளைகளின் இறந்த கல்லரைகளில், அவர்களை நினைத்து..... "தேவனே, தயவாய் எனக்குப் பதில் தருவீரா; இது ஏன் எனக்கு நேரிட்டது? என்று கேட்டான். நண்பர்களே, அந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுக்கொண்டிருபதற்கு முன்னால் நீங்கள் இந்தக் கோளில் நீண்டகாலம் வாழவேண்டியதில்லை. "தேவனே, ஏன் இதை எனக்குச் செய்தீர்? யாரோ ஒருவருடைய மறைத்துவைக்கப்பட்ட வருத்தமான இரகசியங்களை வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. ஒருவேளை உங்களுடைய வாழ்க்கையில் சோகச் சம்பவம் இருந்திருக்கலாம். நான் என்ன காரியங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்குத் தெரியும்; இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிற மூன்று பிள்ளைகள் எனக்கு இருக்கிறார்கள் மற்றும் பரலோகத்திலிருக்கிற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆம், நேர்மையானதைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிற நல்ல மக்களுக்குச் சோகச் சம்பவம் வருகிறது. அது நிகழ்கிறது; ஆனால் கெட்டது எதாவது நிகழ்ந்தால், உங்களின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? ஆண்டவர் எனக்குப் பதில் அளிக்க நான் விரும்புகிறேன் என்று யோபு சொன்னான். ஆனால் ரோமர் 8:28 ஆம் வசனம் பற்றி யோபுவிற்குத் தெரியாது. தேவன் சொல்லுகிறார், " அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு, சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம்...... நிகழ்வது அனைத்தும் நல்லது என்று இந்த வசனம் சொல்லவில்லை; அது அப்படிச் சொல்லவில்லை. அனைத்தும் நன்மைக்காக நடக்கிறது என்று அது சொல்லுகிறது. நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். யாராவது பசியாக எப்பொழுதாவது இருந்திருக்கிறார்களா? நீங்கள் இதற்கு முன்பு பசியாக இருந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் கதவைத் தட்டி; "திரு. ஹோவிந் அவர்களே, நான் பசியாக இருக்கிறேன்" என்று நீங்கள் கேட்டால், "வாருங்கள், நான் உங்களூக்கு ஒரு கிண்ணம் மாவு தருகிறேன்" என்று நான் கூறினால், அது நன்றாக இருக்காது. நான் கொடுக்கலாம்; தேக்கரண்டியின் உப்பு பற்றி என்ன? "இல்லை, அது எனக்கு உதவிடாது" என்று நீங்கள் கூறலாம். இன்னொரு யோசனை: ஒரு தேக்கரண்டி சோடா உப்பாக அது இருந்தால் எவ்வாறு இருக்கும்? அது உங்களுக்கு ஒரு கெட்ட காலைவேளையைக் கொடுக்கும். நீங்கள் ஒருவேளை தற்போது நேர்த்தியாக வறட்சியடைந்து வருவீர்கள், எனவே, நாம் ஒரு சிறிய கிண்ணத்திலிருந்து எண்ணையை ஊற்றவேண்டும். மேலும் அதைத் தொடர்ந்து ஒரு கிண்ணம் மோர் ஊற்ற வேண்டும். " சகோதரர் ஹோவிந் அவர்களே, அது அனைத்தும் கொடுமையான சுவையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லுவீர்கள். ஆனால் நாம் அவைகள் அனைத்தையும் கலந்து பிஸ்கட்டுகளை தயாரித்தால் என்ன? பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒவ்வொரு பொருளின் சுவையும் கெட்டதாக இருக்கிறது என்றும், ஆனால் அவைகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு பிஸ்கட்டுகளை உருவாக்குகிறது. உங்களுக்கு நிகழ்கிற ஒவ்வொன்றும் நல்லதாக இல்லாமல் இருக்கலாம்.... என்பதற்கு இதை விளங்கிக்கொள்ளூங்கள். ஆனால் அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டு, தேவனிடத்தில் நீங்கள் அன்புகூர்ந்தால், அவைகள் அனைத்தும் ஒன்றாகச் செயல்பட்டு நன்மைக்காக நிகழும். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மிகவும் எளிதானது. உங்களுடைய இருதயத்தைத் தேவனுடன் சரியாக வைத்துக்கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியமானது. அது பின்பற்றுவதற்கு கடினமாக இருக்கும், ஏனெனில் இருதயமே அனைத்திற்கும் மேலாக ஏமாற்றுவதாகவும் மற்றும் நம்பிக்கையற்ற கேடுள்ளதாகவும் இருக்கிறது. யோபு அங்கே தன்னுடைய பருக்கலில் இருந்து வருகிற சீழைச் சுரண்டிக்கொண்டு சொல்லுகிறான், "தேவனே, எனக்குத் தயவாய் பதில் தருவீரா?" இறுதியாக, அதிகாரம் 38-ல் கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுவிற்குப் பதில் தந்தார். உங்களுக்குத் தெரியுமா, ஒரு பெருங்காற்று என்னுடன் பேசப்போகிறது எனில், நான் அதைக் கேட்கக் கவனமாக இருக்கப்போகிறேன். அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? என்று ஆண்டவர் கேட்டார். யோபுவே, உன்னுடைய நான்கு நண்பர்களும் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது! நான் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும்: யோபுவின் புத்தகத்திலிருந்து எந்த வேதாகம உபதேசத்திற்கும் மிகவும் கவனமாக இருங்கள். அவனுடைய நண்பர்கள் காரியங்களைச் சொன்னார்கள் என்பது உண்மையே, ஆனால் அவர்களின் வார்த்தைகள் உண்மையை அது உருவாக்கவில்லை. மதச் சடங்காச்சாரங்கள் இங்கே ஒரு வசனத்தை மட்டும் தெரிந்தெடுத்துக்கொள்கின்றன; ஆனால் நீங்கள் முழு அதிகாரத்தையும் படிக்கவேண்டும். வேதாகமமானது தேவனுடைய வார்த்தை என்று நான் நம்புகிறேன், ஆனால் சில மக்களின் பொய்களை அது பதிவு செய்கிறது. மனிதர்களின் பொய்சொல்லுதலை அது சரியாகப் பதிவுசெய்கிறது. அதை அவர்கள் சொன்னது உண்மை, ஆனால் அவர்கள் சொன்னது உண்மையல்ல. அதுதான் இந்த நான்கு மனிதர்களின் நிலையாக இருக்கிறது. யோபு 38: 3-ல் இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு என்று தேவன் கேட்கிறார். "நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?" என்று தேவன் கேட்கிறார். ஒரு புதிய கிறிஸ்தவனாக அதை 36 வருடங்களுக்கு முன்பு வாசித்துவிட்டு, அது ஒரு மோசமான கேள்வி என்று நான் நினைத்தேன். தேவனே, " நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?" என்று ஏன் நீர் யோபுவிடம் கேட்கவேண்டும்?" தேவனே, அவன் அங்கே இல்லை என்று கூறினேன். அது உமக்கும் தெரியும் மற்றும் அது அவனுக்கும் தெரியும். எனவே அந்த ஒரு கேள்வியை நீர் ஏன் கேட்டுக்கொண்டிருக்கிறீர்? என்று கேட்டேன். தேவன் பூமியை உருவாக்கினபோது உங்களில் எத்தனைபேர்கள் இங்கே இருந்தீர்கள்? தேவன் பூமியை உண்டாக்கினபோது யாராவது ஒருவர் இங்கே இருந்தீர்களா? பிற்காலப் பரிசுத்தவான்கள் எனப்படுகிற முனிவர்களின் சடங்காச்சாரங்களில், அவர்களின் கதைகளின் மூலமாக அவர்கள் முன்னமே இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். இல்லை, தேவன் இந்தப் பூமியை உருவாக்கினபோது நீங்கள் இங்கு இல்லை. பிள்ளைகளே, இது மிகவும் சிக்கலாக இருக்கப்போகிறது, எனவே நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளுங்கள். தேவன் இந்த பூமியை உருவாக்கினபோது நீங்கள் இங்கு இல்லாதிருந்தீர்கள் என்பதின் அர்த்தம் என்னவெனில், தேவன் உங்களைக் காட்டிலும் மூத்தவராக இருக்கிறார். உதவியின்றி எத்தனைபேர்களால் இதைக் கணிக்க முடிகிறது? தேவன் உங்களைக் காட்டிலும் சாமர்த்தியமானவர் என்று நீங்கள் எப்பொழுதாவது கருதினதுண்டா? தேவன் உங்களைக் காட்டிலும் வலிமையானவர் என்று நீங்கள் எப்பொழுதாவது கருதினதுண்டா? தேவன் உங்களைக் காட்டிலும் பணக்காரர் என்று நீங்கள் உணருகிறீர்களா? " சகோதரர் ஹோவிந் அவர்களே, என்னைக்காட்டிலும் ஒவ்வொருவரும் பணக்காரராக இருக்கிறார்கள்." என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஒருவேளை இருக்கலாம், ஆனால் அனைவரைக் காட்டிலும் தேவன் நிச்சயமாக அதிகப் பணக்காரராக இருக்கிறார். தற்பொழுது இந்த ஒன்றைக் கருதுங்கள்; நான் இந்த ஒன்றை ஆயிரம்முறை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன், ஆனால் இன்னும் நான் அதை விளங்கிக்கொள்ளவில்லை. இருப்பினும், நான் அதை அடிக்கடிச் சொல்லுகிறேன், மற்றும் என் மூளைக்கு வலிக்கும்வரை நான் அதைத் தியானிக்கிறேன். தேவனுக்கு நிகழாத ஒன்று எப்பொழுதாவது உங்களுக்கு நிகழ்ந்ததுண்டா? அனைத்தையுமே அவர் ஏற்கனவே சிந்தித்துவிட்டார். நீங்கள் எப்பொழுதும் சிந்திக்கிறதைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். அவர் நினைவுகளின் கற்பனைகளை விளங்கிக்கொள்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது. அது ஒரு கவரக்கூடிய வசனம். அவர் உங்களின் சிந்தனைகளை மட்டுமல்லாது, அவர் நினைவுகளின் கற்பனைகளை அறிகிறார். முதலாவது,காரியங்களைப் பற்றி நீங்கள் நினைக்க முடியும், ஆனால் அப்போது நீங்கள் உண்மையிலே..... நீங்கள் என்ன சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள். அதைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். மூளையானது ஆச்சர்யமடைந்துகொண்டிருக்கிறது. மனிதனின் சிந்தனைகளைத் தேவன் அறிகிறார் என்று வேதாகமம் கூறுகிறது. மேலும், லூக்கா நற்செய்தி நூலில், "இயேசு அவர்களின் நினைவுகளை அறிந்து"....என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு சரீரத்தில் காணப்பட்ட சர்வ வல்லமையுள்ள தேவன் என்று நிரூபிக்கும் பல வசனங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. உங்களின் சிந்தனைகளை தேவன் அறிகிறார், மற்றும் உங்களை அவர் எப்படியோ நேசிக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதே! தேவனுடைய இரக்கத்திற்காக அவரைப் போற்றுங்கள். சரியா? யோபு 38: 5 சொல்லுகிறது, "அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு." யோபு பதில் கூறவில்லை. உண்மையிலே, தேவனுடைய எந்தக் கேள்விகளுக்கும் யோபு பதில் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. "நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?" என்று தேவன் (யோபு 38:16ல்) கேட்கிறார். கடலில் ஊற்றுகள் இருந்தன என்று 1977 ஆம் ஆண்டுவரை விஞ்ஞானிகளுக்குக்கூடத் தெரியாது. வேதாகமத்தின் சில பகுதிகளை அறிவியலானது மிகவும் மெதுவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழி எங்கே? " (யோபு 38:19) என்று தேவன் கேட்கிறார். அது கவர்ந்திழுக்கும் கேள்வியாக இருக்கிறது; நான் இயற்பியலைக் கற்றுக்கொடுத்தேன். உங்களுக்குத் தெரியுமா? வெளிச்சமானது ஒரு இடத்தில் தங்கியிருக்காது, அது வழியில் இருக்கிறது. அது எப்பொழுதும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதன்பின்பு அந்த வசனம் கேட்கிறது, "இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானம் எங்கே?" ஒளியின் வேகம் ஒவ்வொரு நொடிக்கும் 3,00, 000 கி.மீ என்று உங்களுக்குத் தெரியும். இருளின் வேகம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? பூஜ்ஜியம். இருள் நகர்ந்துசெல்ல முடியாது. தற்பொழுது அதை நினைத்துப்பாருங்கள்; நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் நகர்ந்துசெல்லுவதற்கு இருக்கவேண்டியவர்கள்; தேவனுக்காக எதையாவது செய்வதற்குச் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். இது இருளாகிக்கொண்டிருக்கிறது; இந்த உலகம் மிகவும் தீயதாக இருக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். அப்படியானால், உங்களின் வெளிச்சத்திற்குத் திரும்புங்கள். நீங்கள்தான் அது இருளாக இருப்பதற்கான காரணம். நீங்களே ஒளியாக இருக்கிறீர்கள், எனவே உங்களது வெளிச்சத்தை ஆரம்பித்துவையுங்கள். பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளூவதில்லை என்று வேதாகமம் கூறுகிறது. பாதாளத்தின் வாசல்கள் உங்களைத் தாக்குவதில்லை; நீங்கள் அவைகளைத் தாக்குங்கள். நாம் சென்று தேவனுக்காக எதையாவது செய்வோமாக. "வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?" என்று வசனம் 24 கேட்கிறது. ஒரு கேள்வி: வெளிச்சம் காற்றை வீசச்செய்கிறது என்று தேவன் யோபுவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாரா? அவர் நிச்சயமாக அதைத்தான் சொல்லுகிறார். நீங்கள் எந்தவொரு காலநிலை வல்லுனர்களிடமும் கேட்கலாம்; அது மிகவும் சரியாக இருக்கிறது; சூரியவெளிச்சம் காற்றின் வகைகளை உண்டாக்குகிறது. தரையானது சூடாகி அது காற்றை விரிவடையச்செய்கிறது. தேவன் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதின்படி, வெளிச்சத்தின் காரணமாகவே நாம் இந்தப் பூமியில் காற்றை உடையவர்களாக இருக்கிறோம். யோபு 38:35-ல், "நீ மின்னல்களை அழைத்தனுப்ப முடியுமா?" என்று தேவன் கேட்கிறார். நீங்கள் மின்னல்களை அனுப்பமுடியாததினால், யாரோஒருவர் உயிருடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று உங்களில் எத்தனைபேர்களால் நினைக்க முடிகிறது? என்னால் பலபேர்களை நினைக்க முடிகிறது. "நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?" என்று தேவன் கேட்கிறார். ஒரு செய்தியை அனுப்புவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும் என்று தேவன் யோபுவிற்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று இது அர்த்தமாகிறதா? அது ஒரு வானொலியாகவோ, கைபேசியாகவோ, ஒரு நுண்ணலையாகவோ, அல்லது ஒரு தொலைக்காட்சியாகவோ இருக்கலாம். மின்சாரமானது ஒரு செய்தியை இரண்டு வேறுபட்ட வழியில் அனுப்புகிறது. முதலாவது, மின்சாரத்தின் வழியாகவும், மற்றும் மின்காந்த விசை வழியாகவும் செய்தியை அனுப்புகிறது. அதிலிருந்து வெளிவருகிறவைகளே வானொலி அலைகள். தேவன் யோபுவுக்கு அதை 4,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னார். மார்க்கோனி மற்றும் மற்ற விஞ்ஞானிகள் அதை கடந்த நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்க மட்டும் செய்தனர் அல்லது அப்படி இருக்கிறது. தேவன் யோபுவிடம் 84 கேள்விகளைக் கேட்டார். யோபு ஒருபோதும் அவைகளில் ஒன்றுக்குக்கூடப் பதில் அளிக்கவில்லை. ஒரு பதிலும் தேவையில்லாத கேள்விகளின் வகைகளாக இவைகள் இருக்கின்றன. ஒருவரின் மனப்பாங்கை மாற்றுவதற்காக அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டன. தகப்பனாக இருக்கிற நீங்கள், உங்களது பிள்ளைகளிடம் கேட்கவேண்டிய அதே வகையான கேள்விகளாக இவைகள் இருக்கின்றன. எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என நான் குறிப்பிட்டேன். நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிகிறேன். பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்ததும், அவர்கள் குடும்பத்தின் ஒழுங்குகளை மாற்றவேண்டும் என்று அவர்கள் சிந்திக்கச் சோதிக்கப்படுகிறார்கள். அந்தப் பிள்ளை ஒரு நாள் வீட்டிற்கு வந்து, "அப்பா, கேளூங்கள்; நான் வெளியே போவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.... காலை 4 மணி வரையிலும் என்னுடைய நண்பர்களுடன் செல்ல விரும்புகிறேன்; ஏனெனில் எனக்குத் தற்போது 10 வயதாகிறது." என்று கூறுகிறது. தகப்பன் பதில் கூறுகிறார், " பிள்ளையே, ஒரு நிமிடம் பொறுத்திரு; காலை 4 மணி வரையிலும் நீ ஏன் வெளியே இருக்க முடியாது என்பதை நீ அறிய விரும்புகிறாய்." முதலாவதாக, உன்னைச் சில கேள்விகள் கேட்க என்னை அனுமதிக்கவும்: இந்த வீட்டிற்கான மின்சாரக் கட்டணத்தை யார் கட்டுகிறார்கள்?" வீட்டிற்காக யார் கட்டணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? நீ அணிந்துகொண்டிருக்கிற ஆடைகளுக்கு யார் பணம் கட்டியது? சென்ற இரவு நீ தூங்கின படுக்கைக்கு யார் பணம் கட்டியது? நீ சாப்பிடுகிற, சாப்பிடுகிற, சாப்பிடுகிற மற்றும் சாப்பிடுகிற உணவிற்கு யார் பணம் கட்டியது? நீ பயன்படுத்துகிற நல்ல தண்ணீர் மற்றும் குளிப்பதற்குத் தேவையான சோப்புவிற்கு சுமார் ஒரு மாதத்திற்கு யார் பணம் கட்டியது? தவறுதலாகப் புரிந்துகொள்ளாதே, மகனே; பெற்றோர்கள் போன்று கருதுகிற வேதாகமத்தின் கொள்கைகளானது மிகவும் தெளிவாக இருக்கிறது. "பணம் கட்டுவது யாரோ அவரே ஒழங்குகளையும் உருவாக்குகிறார்." இரண்டாவது கருத்துக்கள், அதிகாரம் 4, வசனம் 7 கூறுகிறது, "நான் தந்தையாக இருக்கிறேன், நீ பிள்ளையாக இருக்கிறாய்." மேலும் நீ என்னுடைய வீட்டில் தூங்கி, என்னுடைய உணவை உண்ணப்போகிறாய் எனில்,...... என்னுடைய வழியில் நீ காரியங்களைச் செய்யப்போகிறாய்; மேலும் உன்னுடைய வழியில் உன்னுடைய காரியங்களைச் செய்ய நினைத்தால், அப்பொழுது போ.... உனக்கென ஒரு வீட்டை வைத்துக்கொண்டு, உன்னுடைய வழியில் செய். இது இவ்வாறு அழைக்கப்படுகிறது: தங்கமான ஒழுங்கு. "தங்கத்தை உடையவர் ஒழுங்குகளை உருவாக்குகிறார்." பிள்ளையே, நீ யார் என்று நீ நினைக்கிறாய்? நாங்கள் இந்தச் சொத்தை வாங்கினபோதும் மற்றும் இதைச் சுத்தம் செய்தபொழுது நீ எங்கே இருந்தாய்?..... கொடிய கரடிகளைத் துரத்தினபோதும் மற்றும் வெறும் கால்களுடன் பனியில் 60 கிலோமீட்டர்கள் படிப்பிற்காக ஏறி இறங்கினபோதும் நீ எங்கே இருந்தாய்? நீங்கள் பிள்ளைகளாக இருந்தபோது இதுபோன்ற பேச்சு வகைகளை எத்தனைபேர்கள் கேள்விப்பட்டீர்கள்? நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். மகனே, நாம் தெளிவாக இருக்கிறோம்; நான் தந்தையாக இருக்கிறேன், நீ பிள்ளையாக இருக்கிறாய். தேவன் யோபுவிடம் அதைத்தான் செய்துகொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். தேவன் யோபுவிடம் 84 கேள்விகளைக் கேட்டார். யோபு ஒருபோதும் ஒரு கேள்விக்குக்கூட பதில் அளிக்கவில்லை, ஆனால், சரிப்படுத்தின ஒரு மனப்பாங்கை யோபு பெற்றுக்கொண்டான். நீங்கள் பாருங்கள், நம்மிலே பெரும்பாலானவர்களுக்கு இருக்கிற அதே பிரச்சனை யோபுவிற்கு இருந்தது. தேவன் யாராக இருக்கிறார் என்ற நல்ல பாராட்டு அவனிடம் இல்லாமல் இருந்தது. 40-ஆம் அதிகாரத்திற்கு வாருங்கள். தேவன் சொல்லுகிறார், இதோ இப்போதும் பிகிமோத்தே, பூமியின்மேல் என்ன இருக்கிறது: பிகிமோத்தே. அது எதுவாக இருந்தாலும், யோபுவினால் தாங்கிக்கொள்ள முடியும், ஏனெனில் உங்களால் செய்யமுடியாததை தேவன் ஒருபோதும் உங்களைச் செய்யச்சொல்வதில்லை. "இதோ இப்போதும் பிகிமோத்தே," யோபுவினால் தற்போது தாங்கிக்கொள்ள முடியவில்லையானால் என்று தேவன் சொல்லமாட்டார் என்று புரிந்துகொள்ளுங்கள். அது ஒரு ஆழமான மறையியலாக இருக்கிறது, எனக்குத் தெரியும், ஆனால் அதின் வழியாக சிந்தியுங்கள். பிகிமோத் என்பது ஒருவேளை யானையாகவோ அல்லது நீர்யானையாகவோ இருக்கலாம் என சில போதிக்கும் புத்தகங்கள் கூறுகின்றன. அது மிகவும் முட்டாள்தனமானது. இல்லை. பிகிமோத் என்பது நீண்ட கழுத்துடைய டைனோஸர் என்று நான் நம்புகிறேன். 13 வித்தியாசமான நீண்ட கழுத்துடைய டைனோஸர்கள் இருக்கின்றன: பிரக்கியோஸரஸ் (Brachiosaurus) அல்லது அப்பட்டோசரஸ், சீட்டாசரஸ் (பெரிய இருக்கையுடையது),...... அங்கே பிளண்டாஸர் இருக்கிறது, மேலும் அவளிடம் நீங்கள் மெதுவாகப் பேச வேண்டும். பிரக்கியோஸரஸ் என்பதுதான் பிகிமோத் என்று நான் நினைக்கிறேன். அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும் என்று தேவன் கூறுகிறார். என்னுடைய வேதாகமக் குறிப்புகள் சொல்லுகிறது அது யானைகள் என்றும் மற்றும் யானைகள் புல்லைத் தின்னுகின்றன என்றும் சில மக்கள் சொல்லுகிறார்கள். முயல்களும்கூட புல்லைத் தின்னுகின்றன. பலவகையான விலங்குகள் புல்லைத் தின்னுகின்றன. அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்; இதோ, அதினுடைய பெலன் இடுப்பில் இருக்கிறது என்றும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது; அதினுடைய பாகங்களில் வயிறானது மிகவும் பெரியதாக இருக்கிறது. யானைகளுக்கு பெரிய வயிறு இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆம், எனக்குத் தெரியும். நீர்யானை பெரிய வயிறை உடையதாக இருக்கிறது. பிரக்கியோஸரஸிற்கும் பெரிய வயிறு இருக்கிறது. அதற்குப் பெரிய வயிறு இருக்கிறது. அதற்கு அப்படி இருக்கிறதா? அது சுகவீனமாக, சுகவீனமாக இருக்கிறது; அதை நிமிர்ந்து நிற்கச்செய்யப்போவது யார்? அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்; அதனுடைய வால் கேதுருமரம்போல் இருக்கிறது. ஒரு யானையின் வாலை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? அது உங்களுக்குக் கேதுருமரத்தை நினைப்பூட்டுகிறதா? அல்லது ஒரு நீர்யானையை நினைப்பூட்டுகிறதா? அது ஒரு கேதுருமரம்போல் இல்லை. தற்பொழுது, ஒரு பிரக்கியோஸரஸின் வால்; மற்றவைகளைக் காட்டிலும் சற்று கேதுருமரம்போல் அது இருக்கலாம். முன்பு அவர்கள் வேதாகமத்தின் அடியில் உள்ள குறிப்புகளில் அந்தப் போதனையை வைத்தார்கள். அந்தப் பகுதியை அவர்கள் ஒருமுறையாவது வாசிக்க வேண்டியிருக்கிறது என்றும் அதன்பின்பு அதின்மேல் அவர்கள் வியாக்கியானம் செய்யட்டும் என்று நான் நினைக்கிறேன். சரியா? இதனிடையே, பிரசங்கியார்களே, நீங்கள் பிரசங்கிக்கச் செல்லுவீர்களானால், நீங்கள் அதைப்பற்றிப் பிரசங்கிக்கும் முன்பு, குறைந்தது ஒருமுறையாவது அந்த வசனத்தை நீங்கள் வாசியுங்கள். அடுத்த வசனம் (யோபு 40:18) சொல்லுகிறது, " அதின் எழும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது." அதற்கு பெரிய கனமான எழும்புகள் இருக்கிறது; மற்றும் அவைகளுக்கு இருந்தன. பென்ஸகோலாவில் உள்ள எங்களுடைய அருங்காட்சியகத்தில், நான் வைத்திருக்கிற டைனோஸரின் உண்மையான பெருவிரலின் எழும்பாக இது இருக்கிறது. ஒரு பிரக்கியோஸரஸிலிருந்து எடுக்கப்பட்ட விரல்மூட்டு எழும்புகளில் ஒன்றாக இது இருக்கிறது. இது சிக்கலாக இருக்கப்போகிறது, எனவே கவனமாக் கேளுங்கள். அதற்கு பெரிய பெருவிரல் எழும்புகள் இருந்ததற்கானக் காரணம் என்னவெனில் அதற்குப் பெரிய பெருவிரல்கள் இருந்தன. எந்த உதவியும் இன்றி அதைப் புரிந்துகொள்ள எத்தனைபேர்களால் முடிகிறது? நான்கு, ஐந்து, ஆறு. அதற்குப் பெரிய பெருவிரல் இருந்ததற்கான காரணம் என்னவெனில் அதற்குப் பெரிய கால் இருந்தது. ஒரு பிரக்கியோஸரஸின் கால் மிதித்த தடத்தில் அங்கே ஒரு குழந்தை குளித்துக்கொண்டிருக்கிறது. படிக்கட்டுகளின்மேல் உள்ள இந்தப் புத்தகத்தின் உள்ளே சரியாக அந்தப்படம் இங்கு இருக்கிறது. அதற்குப் பெரிய காலின் அடிப்பாகம் இருப்பதற்கானக் காரணம் என்னவெனில் அதற்குப் பிடிப்பதற்குப் பெரிய கால் இருந்தது. அதனுடைய முன்னங்காலின் உயரம் 6 மீட்டர்களாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய டைனோஸரானது அதின் தலைவரைக்கும் 18 மீட்டர்கள் உயரமாக இருக்கிறது. அது ஒக்லஹாமாவில் கண்டுபிடிக்கப்பட்டது. தரையிலிருந்து அனைத்து எழும்புகளையும் வெளியே எடுப்பதற்கு 20 ஆண்டுகள் ஆகும் என்று அவர்கள் கணக்கிடுகின்றனர். அது ஒரு அரசாங்கத்தின் திட்டம். அது உயிருடன் இருந்தபோது அதற்கு ஒருவேளை ஒரு நூறு டன்கள் எடையுள்ளதாக இருந்திருக்கும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஒரு நூறு டன்கள் எடை என்பது 14 பள்ளிகளின் பேருந்துகளை ஒன்றாகச் சேர்த்தால் இருக்கும் எடைக்குச் சமமாகும். அதன் அர்த்தம் என்னவெனில், அது உங்களிடம் வந்து உங்கள்மேல் மிதித்திருந்தால், நீங்கள் அதனால் "ஆழமாக அழுத்தப்பட்டிருப்பீர்கள்". நீங்கள் ஒரு தட்டையான ரொட்டியைப்போல் இருப்பீர்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் என்ற தலைப்பில் பார்க்கும்போது, என்னுடைய புதிய கண்டுபிடிப்புகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அது என்னை இந்தப் பூமிக்கோளில் முதன்மையானப் பணக்காரராக ஆக்கிவிடும். தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு நான் அதிகமான பணத்தை சேமிக்கப்போகிறேன்,..... கட்டிடக்கம்பெனிகள், பயன்பாட்டுக் கம்பெனிகள் மற்றும் இராணுவத்திற்கும்கூட. நான் விரும்புகிறது எல்லாம் 10% சேமிப்பாகும். அப்பொழுது பூமிக்கோளின் மேலுள்ள முதன்மையானப் பணக்காரராக ஆகிவிடுவேன். தானாகவே நிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு மண்வெட்டியை நான் கண்டுபிடித்திருக்கிறேன். அதின்மீது இவர்கள் சாய்வதற்கு நீங்கள் பணங்கட்டத்தேவையில்லை, எப்படியோ. ஆ, உங்களுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி. அடுத்த வசனம் கூறுகிறது (யோபு 40:19) " அது தேவனுடைய வழிகளில் பிரதானமாக இருக்கிறது." அது பிரதானமாக இருக்கிறது; அதன் எபிரெய வார்த்தை ரிஷித் (re'-shiyth) என்பதாகும். அது பிரதானமாக இருக்கிறது, அது முதன்மையாக இருக்கிறது; தேவன் உண்டாக்கினவைகளில் அது மிகவும் பெரியதாக இருக்கிறது. அது யானையாகவோ அல்லது நீர்யானையாகவோ இருக்காது என்று நமக்குத் தெரியும். அது பிரக்கியோஸரஸாகத்தான் இருந்திருக்கும். பிசாசு வேலைசெய்கிற வழிக்கு அந்த மாதிரியானது பொருந்துவதுபோல் தோன்றுகிறது. தேவன் எப்பொழுதெல்லாம் பொருட்களை உருவாக்குகிறாரோ, அப்பொழுது பிசாசு அவைகளை அழிக்க முயற்சிக்கிறான். தேவன் அழகானவைகளை உருவாக்குகிறார், ஆனால் சாத்தானோ எப்பொழுதும் அவைகளை அழிக்க முயற்சிக்கிறான். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது: உங்களுடைய தேவன் எவ்வளவு பெரியவர்? நீங்கள் அதை எப்பொழுதாவது நினைக்கிறீர்களா? நீங்கள் நிறுத்தி ஜெபிக்கும்போது, "பரலோகப் பிதாவே" என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்ற எதாவது எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எப்பொழுதாவது சற்று நிறுத்தி அதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறீர்களா? பேசுகிறதற்கு நீங்கள் யார்? நீங்கள் மதிய உணவிற்காகக் கீழே உட்கார்ந்து, மற்றும் நீங்கள் ஜெபிக்கப்போகிறீர்கள், "அன்புள்ள ஆண்டவரே, இவர்கள் அவர்களின் மதிய உணவைச் சாப்பிடும்போது இந்த நண்பர்களை ஆசீர்வதியுங்கள். ஆமென்." ஒரு நாய்க்குட்டி அழைக்கும்போது செயல்படுவதுபோல், தேவன் செயல்படவேண்டும் என்று மக்கள் தேவனிடம் எதிர்பார்க்கிறார்கள்; அவர்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள், இல்லையா? "தேவனே, கவனியுங்கள், தற்பொழுது நான் உங்களுக்கு நேரம் வைத்திருக்கிறேன், எனவே கவனமாகக் கேளுங்கள், இங்கே எனது விண்ணப்பங்கள் இருக்கின்றன." "இதைக்கொடுங்கள், இதைக்கொடுங்கள், இதைக்கொடுங்கள் மற்றும் இதைக்கொடுங்கள்- மற்றும் அதைச் சீக்கிரமாகக் கொடுங்கள்." பல மக்களின் உண்மையான மனப்பாடச்சுருக்கமாக அந்த ஜெபங்கள் இருக்கின்றன, அப்படித்தானே, இல்லையா? நீங்கள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுஎப்பொழுதாவது நீங்கள் நிறுத்திக் கவனமாக அதைக் கருதினது உண்டா? உங்களின் தேவன் எவ்வளவு பெரியவர்? நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களுடைய தேவன் இருக்கிறாரா? மேலும் கேள்விகள் கேட்காதபடிக்கு நீங்கள் அவருக்கு எளிமையாகக் கீழ்படிகிறீர்களா? உதாரணத்திற்கு, நீங்கள் எந்தவிதமான ஆடைகள் அணியவேண்டும் என்று தேவன் கூறுகிறாரா? பெண்கள் தகுதியான வஸ்திரத்தை அணியவேண்டும் என்று 1 தீமோத்தேயு 2:9 சொல்லுகிறது. "நீ வியாபாரத்தில் இல்லையெனில், விளம்பரம் செய்யாதே" என்று என் தந்தை சொல்லுவதை நான் நினைத்துப்பார்க்கிறேன். உங்களுடைய தலைமுடியை எவ்வாறு கத்தரிக்கவேண்டும் என்று தேவன் கூறுகிறாரா? புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்குக் கனவீனமாயிருக்கிறது என்று 1கொரிந்தியர் 11:14 கூறுகிறது. முதலாவது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டபோது, நான் ஒரு மீட்கப்பட்ட நீச்சல்காரராக, அழகான செம்பட்டையான, நீளமான பெண்கள்போன்று தலைமுடி வைத்திருந்தேன். நான் அந்த வசனத்தை வாசித்துவிட்டு, என் முடியை வெட்டிக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன். அது எனக்குத் தெளிவாக இருந்தது. தேவனே, நீர் பிரியப்படுகிறதில்லையா? அப்படியானால், சரி ஐயா. நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. உங்களுடைய தேவன் எவ்வளவு பெரியவராக இருக்கிறார்? உண்மையிலே, உங்களுடைய வாழ்க்கையின் தேவன் யாராக இருக்கிறார்? உண்மையிலே அவர்தான் தேவன் என்றால், அப்பொழுது நீங்கள் அவருடைய புத்தகத்தை வாசித்து, அவர் என்ன சொல்லுகிறாரோ அதைச்செய்யுங்கள்; அதுதான் ஒரே நல்ல மறுமொழியாக இருக்கிறது. எனவே, எந்தவிதமான பேச்சைப் பயன்படுத்த வேண்டும் என்று தேவன் உங்களூக்குக் கூறுகிறாரா? எபேசியர் 4:29 சொல்லுகிறது, "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்." உங்கள் வாயிலிருந்து வருகிற அனைத்தின்மேலும் தேவன் பிரியமாக இருக்கிறாரா? "இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்" என்று லூக்கா 6:45-ல் காணலாம். யாராவது உங்களைத் தகாத வார்த்தைகளால் சபித்தால், நீங்கள் குறிப்பிடுவதற்கு அது ஒரு நல்ல வசனமாக இருக்கிறது. தொலைக்காட்சியில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை தேவன் அடக்குகிறாரா? சங்கீதம் 101: 3 சொல்லுகிறது, "தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்." தீங்கான காரியத்தை உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் வைத்திருந்தீர்களா? ஒருவேளை நீங்கள் ஒரு ஒழுங்கை உண்டாக்கினீர்கள்; உங்கள் வீட்டைச் சுற்றிலும் ஒரு ஒழுங்கை நீங்கள் உண்டாக்கினீர்கள் என்று நினைத்துக்கொள்ளூங்கள். தொலைக்காட்சியில் ஒரு சாபமான வார்தையைக் நீங்கள் கேட்கிறீர்கள் எனில், அப்பொழுது நீங்கள் அதை 2 மணி நேரம் நிறுத்தப்போகிறீர்கள். தொலைக்காட்சியில் யாராவது ஒழுங்கீனமாக ஆடையணிந்திருப்பதை நீங்கள் பார்த்தால், நீங்கள் மேலும் 2 மணி நேரம் அதை நிறுத்தப்போகிறீர்கள். யாராவது மதுபானம் குடிப்பதைப் பார்த்தால், நீங்கள் 2 மணி நேரம் அதை நிறுத்தப்போகிறீர்கள். அந்தச் சாதாரண மூன்று ஒழுங்குகளை உங்கள் வீட்டைச் சுற்றிலும் நீங்கள் உருவாக்கினால் என்ன? நீங்கள் தொலைக்காட்சியை எந்தளவு பார்ப்பீர்கள்? ஒன்றுமில்லை. எனவே, நீங்கள் அதை விற்கவேண்டியும் வரலாம் மற்றும் ஒரு மாத கேபிள் வாடகைப் பணத்தை ஒரு மிஷனரிக்குக் கொடுக்கலாம். அப்பொழுது, இந்த முழு உலத்தையும் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த முடியும். நம்மால் முடியாதா? நீங்கள் எந்த வகையான இசையைக் கேட்கவேண்டும் என்று தேவன் சொல்லுகிறாரா? எபேசியர் 5:19 சொல்லுகிறது, "சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுக்களினாலும்........ உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக்கீர்த்தனம் பண்ணுங்கள்." உங்களுடைய இசையில் தேவன் பிரியமாக இருக்கிறாரா? நீங்கள் பாருங்கள், தேவன் இசையை விரும்புகிறார். தேவன் இசையைக் கண்டுபிடித்தார். ஆனால், நீங்கள் கேட்கக்கூடாத, தெய்வீகமல்லாத இசையைச் சாத்தான் கண்டுபிடித்திருக்கிறான். ஒருவர் ஒரு நேரம் என்னிடம் இவ்வாறு கேட்டார், "ஹோவிந், நீங்கள் எதைப்பெறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா?.... நாட்டின் இசையை நீங்கள் பின்பாகக் கேட்கும்போது? நான் சொன்னேன். "இல்லை." உங்கள் மனைவி திரும்புகிறாள், உங்கள் நாய் திரும்புகிறது, உங்களது வாகனம் திரும்பப்பெறப்படுகிறது, மற்றும் நீங்கள் சிறையிலிருந்து வெளியே வருகிறீர்கள். தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். திருமணம், குடும்பம் மற்றும் பாலுணர்வை தேவன் கண்டுபிடித்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அது முழுவதையும் தேவன் கண்டுபிடித்தார், மற்றும் அது அருமையாக இருக்க அவர் விரும்புகிறார். எனவே, அவர் சில ஒழுங்குகளை உருவாக்கினார்; மாணவர்களே, ஒரு பெண்ணை முதலாவதாகத் திருமணம் முடிக்கும் வரையில் அவளைத் தொடாதீர்கள். சிலருடைய ஆர்வங்களும் மற்றும் ஆசைகளும் தீயவைகளாக இருந்தால், அப்பொழுது மக்கள் அவர்களைத் தவிர்க்கவேண்டும். அப்படிப்பட்ட தெய்வீகமற்ற மக்களை நான் பார்த்திருக்கிறேன். தேவன் ஒழுங்குகளை உருவாக்கினார். அவர் ஒழுங்குகளை அறிவித்தார், ஏனெனில் உங்களுக்கு மிகவும் சிறந்ததைக் கொடுக்க அவர் விரும்புகிறார். அவர் கூறுகிறார் (நீதிமொழிகள் 6:26), "விபச்சாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்." நீங்கள் ஒரு அருமையான வாழ்க்கையை வேட்டையாடுவதற்குத் தேவன் விரும்பவில்லை. ஒரு அருமையான வாழ்க்கையை நீங்கள் பெற்றுக்கொள்ள அவர் விரும்புகிறார். திரையுலகில் இருக்கிறவர்கள் விவாகரத்திற்குப் பெயர்பெற்று மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்வது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் என்பவருடைய திருமண வாழ்க்கை 55 மணி நேரங்கள் வரை இருந்தது; ஜெனிஃபர் லோப்பஸ் என்பவருடைய திருமண வாழ்க்கை 7 மாதங்கள் வரை இருந்தது. பிராண்டி நார்வுட் என்பவரது திருமணம் 2 வருடம் மற்றும் 6 மாதங்கள் வரையிலும்; ஸாஸா கோபர் என்பவரது திருமண வாழ்க்கை ஒரு நாள் வரை மட்டுமே நீடித்தது. எது அவர்களைத் திருமணம் முடிக்கவும், விவாகரத்து செய்யவும் மற்றும் மறுபடியும் திருமணம் முடிக்கவும் கட்டாயப்படுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அருமையான வாழ்க்கையை வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அது இல்லாமல் இருக்கிறது. கவனமாகக் கேளுங்கள்; திரையுலகத்தினருக்கு உங்கள் கவனத்தைக் கொடுக்காதீர்கள். ஒரு அருமையான வாழ்க்கையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை, இந்த உலகில் அவர்களுக்கு ஞானம் இல்லை. ஒரு அருமையான வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அப்பொழுது உங்களை நீங்களே சுத்தமாக வைத்துக்கொள்ளூங்கள்..... நீங்கள் முறையாகத் திருமணம் முடித்து மற்றும் உங்களது போதகர் உங்களுக்கு ஒரு உடன்படிக்கை உண்டு என்று அறிவிக்கும் வரையில் சுத்தமாக இருங்கள். அவர்கள் எதைச்செய்தாலும், உங்களது மீதமுள்ள வாழ்நாட்கள் எல்லாம் அந்த ஒருவருக்கு உண்மையுள்ளவராக இருங்கள். அதுதான் அருமையான வாழ்க்கையாக இருக்கிறது. ஒரு நொடிக்காகத் திரையுலகத்தினர்களை நம்பாதிருங்கள். வாழ்வதற்கான மிகச்சிறந்த வழியை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தேவன் உயிருள்ள ஜந்துக்களைச் சிருஷ்டித்தார், ஒவ்வொரு உயிருள்ள ஜந்துக்களையும் ..... ஆதியாகமம் 1:21-ல் கூறியுள்ளபடி, தேவன் டைனோஸர்களைச் சிருஷ்டித்தார். அவர் அவைகளைச் சிருஷ்டித்தார், ஆனால் சாத்தான் சொன்னான், "தேவனுடைய சத்தியத்திற்கு எதிராக டைனோஸர்களைப் பயன்படுத்துவதற்கு வேறு வழி இருக்கவேண்டூம்" என்று சாத்தான் சொன்னான். ஆனால், டைனோஸர்களை வைத்து ஆதாமை அவனால் ஏமாற்ற முடியவில்லை. ஆதாம் டைனோஸர்கள் என்று பெயரிட்டிருந்தான். பிசாசானவன் ஆதாமிடம் நடந்துசென்று இவ்வாறு சொல்லியதாக உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறதா?, "ஆதாமே, டைனோஸர்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டிருந்தால், ஆதாம் சொல்லியிருப்பான், "நீ முட்டாளாக இருக்கிறாயா?" என்றும், "செர்ரி மரத்தைத் தின்றுகொண்டிருக்கிற டைனோஸர் ஒன்று அங்கே பின்பாக இருக்கிறதே!" என்றும் சொல்லியிருப்பான். "மில்லியன்கள் ஆண்டுகளூக்கு முன்னால்" என்று கூறுகிறீர்களே, அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். பிசாசானவனால் நோவாவை ஏமாற்ற முடியவில்லை; வெள்ளம் ஏற்பட்ட ஆண்டிலே, அவன் டைனோஸர்களைத் தினமும் போஷித்துக்கொண்டிருந்தான். ஆனால், அடுத்துள்ள 4,000 ஆண்டுகளிலே, டைனோஸர்கள் மிகவும் அபூர்வமானதாக மாறிவிட்டன. அவைகள் இறந்துகொண்டிருந்தன, அல்லது கொல்லப்பட்டன, அல்லது குறைந்துகொண்டிருந்தன, ஏதோ சில காரணங்களால் அவைகள் காணாமல்போய்க்கொண்டிருந்தன. 1809 ஆம் ஆண்டு, டைனோஸர்கள் ஏறத்தாள அழிந்துகொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் சில எழும்புகளைக் கண்டுபிடித்து மற்றும் அவைகளை ஒரு எழும்புக்கூடாக ஒன்றிணைத்தார். நாம் அறிந்த அந்த முதல் டைனோஸரானது ஒன்றாக்கப்பட்டு, ஒரு அருங்காட்சியகத்தில் 1809 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. சாத்தான் அந்த நாளில் அங்கிருந்து இவ்வாறு சொன்னான், " இப்பொழுது, எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துவிட்டது." இந்தத் ஜந்துக்கள் மனிதனுடன் எப்பொழுதும் வாழ்ந்தன. அது எனக்கும் தெரியும், மற்றும் தேவனுக்கும் அது தெரியும். ஆனால் இந்த மக்களுக்கு அது தெரியாது." என்றான். எனவே, பிசாசானவன் சொன்னான்,....... " டைனோஸர்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன என்று ஒவ்வொருவரையும் நம்பச்செய்யத் தூண்டுவேன்." "மேலும், அவர்கள் அதை நம்பினால், வேதாகமத்தை நம்புவதற்கு அவர்களுக்குச் சந்தேகத்தை உண்டாக்குவேன்." என்றான். அந்த சாத்தானின் திட்டமானது நன்றாக செயல்பட்டது. கடந்த 200 ஆண்டுகளாக, பிள்ளைகள் பள்ளிகளிலே முதலாவதாகப் படிக்கச் சேர்ந்தனர். மற்றும் இதுபோன்ற ஒரு புத்தகம் அவர்களுக்குக் கிடைத்தது. புத்தகத்தின் தலைப்பு: " டைனோஸர்களைப் பற்றி என்னால் வாசிக்க முடியும்." இந்தப் புத்தகங்களின் முதல் வாக்கியம் என்ன கூறுகிறது என்பதை சாதனையாக உத்தேசிப்பதற்கு யாராவது விரும்புகிறீர்களா? "பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர்!" அப்படி உங்களது நகரத்தில் எத்தனைப் பிள்ளைகள் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்? உங்களூடைய செலவில், அடுத்த தலைமுறை அழிவதற்காக நீங்கள் பணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை அது உங்களை வேண்டுமானால் சங்கடப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அது என்னைச் சங்கடப்படுத்துகிறது. மேலும் நீங்கள் அதைச் சிந்திப்பீர்களானால், நான் எனது அழகான மனைவியை வீட்டில்விட்டுவிட்டு உலகம் எங்கும் பிரயாணம் செய்கிறேன். தற்பொழுதுவரை பல ஆண்டுகளாக ஒரு வருடத்திற்கு 200 நாட்கள் வீட்டைவிட்டு வெளியே செல்கிறேன். சென்ற வருடம் 215 முறைகள் விமானத்தில் பறந்து, 900 முறைகளுக்கும் மேலாகப் பேசியிருக்கிறேன். நான் எனது அன்பான மனைவி மற்றும் 4 பேரப்பிள்ளைகளைவிட்டுத் தூரமாக இருக்க விரும்புகிறேன் என நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறுதலாக என்னைப் புரிந்துகொண்டீர்கள். நான் வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புகிறேன். ஆனால், அங்கே ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறதே! யாராவது அந்தப் படைகளை எச்சரிக்க வேண்டுமே, " உங்களது ஆயுதங்களை அணிந்துகொள்ளுங்கள்! உங்களது துப்பாக்கிகளை எடுத்துக்கொள்ளுங்கள்; நாம் செல்லுவோம்!" இந்தக் கோளில் பல பில்லியன்கள் பிள்ளைகள் சாத்தனால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், மற்றும் அதைச் செய்வதற்குச் சாத்தான் டைனோஸரஸ்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். ஏறத்தாள அனைத்துப் புத்தகங்களும் "மில்லியன்கள் ஆண்டுகளூக்கு முன்னர்" என்று சொல்லுகின்றன. அப்பொழுது நம்மில் சில கிறிஸ்தவர்கள்....... அந்த விபரமே முற்றிலும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு பதில் இல்லாமல் இருக்கிறார்கள். 2 தீமோத்தேயு 2:15 சொல்லுகிறது, "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி......" பதிலைப் பெற்றுக்கொள்ளுங்கள், மற்றும் அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்கள். "மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர்," என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. நான் எல்லா நேரங்களிலும் அருங்காட்சியகம் செல்கிறேன்; அது என்னை அதிகக் கோபமுண்டாக்குகிறது. இந்த அழகான டைனோஸரின் எழும்புகளின் காட்சி விபரங்களை நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பார்த்துவிட்டுச் செல்வதை நீங்கள் கவனிக்கிறீர்கள். மேலும் அதன் அடியில் அந்த அடையாளம் என்ன சொல்லுகிறது? என்று நீங்கள் உத்தேசித்துப் பாருங்கள். " மில்லியன்கள் ஆண்டுகளூக்கு முன்பு." இதைக் கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ளாததுபோல் தெரிகிறது: அந்த அறிவியல் நிலையம் மற்றும் அருங்காட்சியக இயக்குனர்கள் அவைகளை அவர்களின் ஆலயங்கள் என்று கருதுகின்றனர். நிங்கள் உங்களது நற்செய்தியை அறிவிக்க முயற்சிப்பதுபோல, அவர்கள் அவர்களது பொய்க்கருத்துக்களைப் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் உங்களது வரிப்பணத்தை அவர்களின் பொய்க்கருத்துக்களைப் பிரசங்கிக்கப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அது இவ்வாறு நிகழ்ந்துகொண்டிருக்கிறது; "மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு....." "பெகிமோத்தானது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்." என்று(யோபு 40:21) வேதாகமம் கூறுகிறது. "Fenz" என்ற வார்த்தையானது பழைய ஆங்கில வார்த்தையாகும். அதன் அர்த்தம்: சதுப்பு நிலம் ஆகும். மத்திய ஆப்பிரிக்காவில் உலகத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது லிக்கவாலா சதுப்பு நிலம் (Likawala Swamp) என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சதுப்பு நிலம் பெரியது. ஆப்பிரிக்காவின் இந்தப் பெரிய அளவை பெரும்பாலான அமெரிக்கர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் முழு அளவுபோல் அடுத்தபடியாக ஆப்பிரிக்கா இங்கு இருக்கிறது. ஆப்பிரிக்கா மிகப்பெரியதாக இருக்கிறது. புளோரிடா மாகாணத்தின் அளவிற்குச் சமமாக 1,60,000 சதுர கிலோமீட்டர்கள் அளவு உள்ளது. அந்தச் சதுப்பு நிலம் பெரியது. இன்றைக்கு வரைக்கும் இந்தச் சதுப்பு நிலத்தின் 80% கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 1885 ஆம் ஆண்டில், பெல்ஜியத்தால் காங்கோ கொண்டுசெல்லப்பட்டது; அது பெல்ஜிய காங்கோ என்று பல ஆண்டுகள் அழைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட்டுகள் அவர்களை விடுதலையாக்கினார்கள். நாடுகளை கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு விடுவிக்கின்றனர்? என்று உங்களுக்குத் தெரியும். பெரும்பாலான மக்களை அவர்கள் கொலைசெய்கிறார்கள். " தற்பொழுது நாங்கள் உங்களை விடுவிக்கிறோம்." என்று கூறுகிறார்கள். முதலாவதாக அங்கே மிஷனரிகள் சென்றபொழுது, 1700 ஆம் ஆண்டுகளிலிருந்து அந்தச் சதுப்பு நிலத்தைப் பற்றிய அறிக்கைகள் இருந்தன. மேலும் அங்கே இன்றும் டைனோஸர்கள் சதுப்பு நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்! டைனோஸர்கள் இன்னும் வாழ்கின்றனவா? 1910 ஆம் ஆண்டு, நியூயார்க் ஹெரால்டு என்னும் பத்திரிக்கையில் ஆப்பிரிக்காவின் சதுப்பு நிலங்களில் இன்னும் டைனோஸர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்னும் ஒரு கட்டுரைத் தலைப்பு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இது 1948 ஆம் ஆண்டு சனிக்கிழமை மாலைப் பதிப்பில் (Saturday Evening Post) அச்சடிக்கப்பட்டது, "ஆப்பிரிக்காவில் அங்கே இன்னும் டைனோஸர்கள் வாழலாம்." ஒரு பெரிய விளையாட்டு வேட்டைக்காரர், திரு. காப்லர் (Mr. Gobler) என்னும் பெயருடையவர் அங்கோலாவிலிருந்து பிரயாணத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அவன் கேப் டவுன் என்னுமிடத்திற்கு வந்து, தி கேப் ஆர்கஸ் என்னும் பத்திரிக்கைக்கு அறிவித்தான், " அங்கே...... ஒரு பெரிய அளவுடைய விலங்கு இருக்கிறது, அதன் விபரங்கள் ஒரு டைனோஸருக்கு மட்டுமே பொறுந்தும்." என்றான். அங்கே உள்ள பூர்வீகக் குடிகள் அதை சிப்பிக்வி (Chipekwe) என்று அழைக்கின்றனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் அவர்கள் அதை நுகுருரி(Ngururi) என்று அழைக்கின்றனர். 1980 ஆம் ஆண்டு ராய் மேக்கல் (Roy Mackal) என்பவர் ஒரு குறிக்கோளுடன் கூடிய பிரயாணமாக அங்கு சென்றார்; அவர் 2,50,000 டாலர்கள் செலவழித்தார். அவர் அடுத்த ஆண்டு திரும்பி வந்தார் மற்றும் மறுபடியும் அவர் அந்தச் சதுப்பு நிலத்திற்குச் சென்றார். மேலும் பூமிக்கோளின் மேல் உள்ள மிகவும் துக்ககரமான சதுப்பு நிலம் அது என்று அவர் கூறினார். ஒரு மணிக்கு ஆயிரம் வீதம் என்ற கணக்கில் அவர்கள்மேல் அங்கே கொசுக்கள் வந்து இறங்கின,...... தொடர்ச்சியாக உங்களைச் சுற்றிலும் புழுதிப்பூச்சிகளின் கூட்டம் போன்று, இரத்தம் குடிக்கத் தாகமாக இருக்கும் கொசுக்கள், 35 செல்ஸியஸ் டிகிரி வெப்பம், மற்றும் எப்பொழுதும் 95% ஈரப்பதம் இருக்கிறது. அவர்கள் அந்தச் சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் பிரயாணம் பண்ணினபோது, அங்குள்ள பூர்வீகக் குடிமக்கள், மகம்பா(Mahomba) என்கிற இந்த விலங்கைப் பற்றிப் பேசினர். "அது என்ன?" என்று அவர் கேட்டார். அவன் அவர்களுக்கு ஒரு முதலையைக் காட்டினான். "ஆமா, அது மகம்பாதான் என்று அவர்கள் சொன்னார்கள். மற்றும் அது எந்த அளவு இருக்கும்? என்று அவர் கேட்டார். மேலும் அவர்கள் தரையிலே நடந்து 15 மீட்டர்கள் நீளம் என்று அளந்து காட்டினர். நீங்கள் 1.3 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு குள்ளமானவராக மட்டும் இருந்தால், 50 அடி முதலையானது உங்களுக்கு மிகவும் பெரியதாகக் காணப்படும். "இல்லை, முதலைகள் சுமார் 5.2 மீட்டர்கள் நீளத்திற்குமேல் வளர்வதில்லை." என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்லுகிறார்கள். அது சரி என்று நான் நினைக்கவில்லை. முன்பு, 2005 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், அவர்கள் அதே சதுப்பு நிலத்தில் 7.3 மீட்டர் நீளமுள்ள ஒரு முதலையைக் கொன்றார்கள். "நீங்கள் அந்தப் பெரியவைகளைப் பார்க்கவேண்டுமே!" என்று அப்பொழுது, அந்தப் பூர்வீகக்குடிகள் சொல்லுவார்கள். மொக்லி-மெம்பீ (Mokele-Mbembe) என்று அந்தப் பூர்வீகக்குடிகள் அழைக்கிற வேறொரு விலங்கைப் பற்றி அவர்கள் விவரித்தார்கள். மொக்லி-மெம்பீயா?..... அது எதுவாக இருக்க முடியும்? நீங்கள் ஒரு அப்பட்டோஸரஸின் படத்தை அவர்களுக்குக் காண்பிப்பீர்களாகில், " ஆமா, இது அதுதான், மொக்லீ-மெம்பீ." என்று அவர்கள் சொல்லுவார்கள். இந்த விலங்குகள் தண்ணீருக்குக் கீழ் வாழ்கின்றன என்று இந்தப் பூர்வீகக்குடிகள் உரிமைகொண்டாடுகிறார்கள். ஆம், அவைகள் அபூர்வமானவைகளாகக் காணப்படுகின்றன. அவைகள் அந்த மத்திய ஆப்பிரிக்காவின் அந்தச் சதுப்பு நிலத்தின் ஆழத்தில் இருக்கின்றன. அங்கே ஒருவரும் ஒருபோதும் இரவு நேரங்களில் வெளியே செல்லுவதில்லை. இரவு நேரங்களில் விளக்கைப் பயன்படுத்த அவர்களுக்கு மின்சாரம் இல்லை. அந்த விலங்குகள் பெரும்பாலும் அதிகாலையிலோ அல்லது இருட்டானபின்பு உள்ள மாலையிலோ அங்கே காணப்படுகின்றன. அவைகள் வெளியே வரும்போது; அவைகளுக்குப் பிடித்தமான தாவரம் மொலம்போ தாவரமாகும். அங்கே டாக்டர் மேக்கல் (Dr. Mackal) மொலம்போ தாவரத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். டாக்டர் மேக்கல் என்பவர் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல்(Microbiology) பேராசிரியராக இருந்தார். அவர் அங்கு சென்று இவைகள் அனைத்தையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அவர் அங்கிருந்து வந்து, "ஒரு வாழும் டைனோஸர்" என்று அழைக்கப்படுகிற ஒரு புத்தகத்தை எழுதினார். அவர் பரிணாமத்தை நம்புகிறவர், ஆனால் அவருடைய புத்தகங்கள் அனைத்திலும் டைனோஸர் இன்னும்.... மத்திய ஆப்பிரிக்காவின் சதுப்பு நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்கிற ஆதாரங்களால் நிறைந்திருக்கின்றது. அவர்கள் அந்த ஜந்துகளின் காலடிச் சுவடுகளைக் கண்டுபிடித்தனர். அங்குள்ள,யூஜின் தாமஸ் என்னுமிடத்தில், என்னுடைய நண்பர் ஒருவர் 43 ஆண்டுகளாக ஒரு மிஷனரியாக இருந்தார். அவர் இப்பொழுது ஓஹியோவில் இருக்கிறார். நீங்கள் அவரை இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அவர் ஆப்பிரிக்காவில் அங்கு 43 ஆண்டுகள் இருந்தார். என்னுடைய ஆலயத்தில் இரண்டு குள்ளமானவைகள் இருக்கின்றன. அவைகள் ஒன்றைக் கொன்று அதைத்தின்றன. டைனோஸர்கள். அந்தச் சதுப்பு நிலத்தில் இருக்கும் இந்த ஜந்துக்களைப் பற்றிய பல அறிக்கைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஒரு பெல்ஜிய கோங்கோ உயிரியியல் வல்லுனர், தன்னுடைய வீட்டிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவுவரை ஆற்றில் சென்று, அவர் ஒன்றைப் பார்த்தார் என்று கூறுகிறார். ஆனால், அதிகமான சூடு மற்றும் ஈரப்பதம் இருந்ததினாலும் அவருடைய கேமரா சரியாக செயல்படவில்லை. அந்தச் சதுப்பு நிலத்தில் டைனோஸர்கள் இருப்பது பற்றிப் பல அறிக்கைகள் இருந்து வருகின்றன; உங்களுக்காகவே நீங்கள் இதைப் படிக்கலாம். ஒரு குழுவினர் அங்கு சென்று அந்த ஜந்துவானது கரும் பழுப்பு நிறக் கலரிலும், தோலானது மென்மையாகவும் வழவழப்பாகவும் இருந்தது என்று கூறுகின்றனர். நீண்ட கழுத்துடையது மற்றும் சிறிய தலையுடையது; அவர்கள் அதைப் பார்த்தனர், அவர்கள் அதைக் கேட்டனர், அது ஒரு உருமுகிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது என்று கூறுகின்றனர். மேலும் அரசாங்க அதிகாரிகளும்கூட அதைப் பார்த்தனர். ஒரு குழு டைனோஸரைப் பார்க்கச்சென்றது பற்றிய செய்தியானது போஸ்டன் ஹெரால்டு பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இருந்தது. ஒரு டைனோஸரானது இன்னும் அந்த பெரிய பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படாத அந்த கோங்கோ சதுப்பு நிலத்தில் வாழ்கிறது. இதைப்பற்றிக் கற்றுக்கொள்வதற்கு, நீங்கள் (Crypto zoology) என்கிற மறைக்கப்பட்ட உயிரியியலைப் படியுங்கள். கிரிப்டோ என்றால் "மறைக்கப்பட்ட" என்று அர்த்தம். மறைக்கப்பட்ட உயிரியியலில் - டைனோஸர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன என்பதைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இந்த விலங்குகள் ஆற்றின் அருகில் உள்ள குகைகளில் வாழ்கின்றன என்று இந்தப் பூர்வீகக்குடிகள் உரிமைகொண்டாடுகிறார்கள். வில்லியம் கிப்போன்ஸ் என்பவர் அந்தக் கோங்கோ சதுப்பு நிலத்திற்கு இதுவரை நான்குமுறை சென்றுள்ளார். அவரும் நானும் சேர்ந்து பிள்ளைகளுக்காக "(Claws, Jaws and Dinosaurs)" என்கிற இந்தப் புத்தகத்தை எழுதினோம். வில்லியம் கிப்போன்ஸ் எனக்கு எழுதின ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறினார், " நமது வழிகாட்டிப்புத்தகமாகிய பியரீ சிமா (Pierre Sima) படி பார்த்தால்... போம்பா ஆற்றின் (Boumba River) எல்லைப்பகுதியில் உள்ள காட்டிலும் மற்றும் சதுப்பு நிலங்களிலும் முதலாவதாக ஊடுருவிச்சென்ற வெள்ளைக்காரர்கள் நாமாகத்தான் இருந்தோம்." "நமக்குத் தகவல் கொடுத்தவர்களில்,மூத்த கேமரூனியனாகிய ஒரு முஸ்லீமைத் தவிர, பெரும்பாலானோர் மிகவும் குள்ளமானவர்கள். அந்தச் சதுப்பு நிலத்தில் உள்ள அறியப்பட்ட மற்றும் அறியப்படாத விலங்குகளை முற்றிலும் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்...... அவர்கள் மதிக்காத லீ-கேலா-பெம்பீ (Le'Kela-bembe) என்கிற இன்னொரு மொழிப்பெயரில் உள்ள ஒரு வித்தியாசமான விலங்கிற்கு, அவர்கள் அந்த ஜந்துகளுக்கு அதிகமாகப் பயப்படுகின்றனர். ஏனெனில் அது மிகவும் கொடூரமாகவும், நீர்யானைகள், யானைகள் மற்றும் முதலைகள் போன்றவைகளைத் தாக்குகிறது. அந்த விலங்கானது ஆற்றில் உள்ள எந்த மற்ற பெரிய ஜந்துக்களையும் முற்றிலும் சகிக்க முடியாததாகவும் இருப்பதுபோல் காணப்படுகிறது..... மற்றும் அந்த ஆற்றின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கிறது, குறிப்பாக அதற்குரிய உணவு இருக்கும் இடங்களில் அது அப்படி இருக்கிறது." சந்தேகப்படுகிற இரண்டு டைனோஸர்களாகிய, மொக்லீ-மெம்பீ மற்றும் என்கோபு (Mokele-Mbembe and N'Goubou) அவ்வப்போது எதிர்க்கின்றன. பியரீ பயிரிடுகிற (Pierre's plantation) ஒரு மூத்த பக்கா தம்பதியினரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். பெரும்பாலான குள்ளமானவர்கள் இருப்பதுபோல், அந்தப் பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறியப்பட்ட ஆப்பிரிக்க விலங்குகள் மற்றும் டைனோஸர்களின் விளக்கங்கள் உள்ள எங்களது புத்தகத்தை அவர்களுக்குப் பரிசளித்தேன். டைனோஸர்கள் பற்றிய எங்களது இரண்டு விளக்கங்களைத் தவிர சுமார் 98% விளக்கங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த இரண்டையும் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல், அவர்கள் ஏற்கனவே கவனித்துப் பார்த்திருந்தபடி தேர்தெடுத்தனர். ஒன்று சொளரெப்பாடு டைனோஸர் (Sauraupod dinosaur) மற்றொன்று ட்ரைசெரோடாப்ஸ் (Triceratops) ஆக இருந்தது. தற்பொழுது, "நாங்கள் உறுதியாச்சொல்லுகிறோம், அந்த ஒன்றை நாங்கள் பார்த்தோம்." என்று ஆப்பிரிக்காவில் அந்தச் சதுப்பு நிலத்தில் மையப்பகுதியில் இருக்கிற மக்கள் ஏன் சொல்லவேண்டும்? கென்யாவில் பல ஆண்டுகளாக கால் பாம்பே என்கிற மிஷனரி இருந்தார். இந்தச் ஜந்துக்களில் ஒன்றை அவரும் அவருடைய மனைவியும் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் பின்புறமுள்ள தட்டுகளானது பெரியதாக, ஒரு ஸ்டெகோஸரஸ் (Stegosaurus) போன்று இருந்தது. கீழே உள்ள தென் அமெரிக்காவில் ஒரு பெரிய அமேஸான் காடு அவர்களுக்கு இருக்கிறது. 1907 ஆம் ஆண்டில், இங்கிலாந்து இராணுவமானது கொலோனல் P.H. Fawcett என்பவரை பிரேசில் நாட்டிற்கும் மற்றும் பெரு நாட்டிற்கும் இடையில் உள்ள எல்லையைக் குறிக்கும்படி அவரை அனுப்பியது. அவர் ஒரு இராஜ பொறியாளராகவும் மற்றும் உண்மைகளைப் பதிவுசெய்கிற ஒரு கவனமுள்ள அதிகாரியாகவும் இருந்தார். டிப்லோடோகஸ் (Diplodocus) என்று நம்பப்படுகிறதை அவர் பென்னி சதுப்பு நிலங்களில் பார்த்ததாகக் கூறுகிறார். "ஓ, ஆம், இந்தச் சதுப்பு நிலத்தில் அந்த விலங்கு இன்னும் இங்கே வாழ்கிறது." என்று அதனைச் சுற்றியுள்ள பூர்வீகக்குடிகளும் மற்றும் மற்ற வம்சத்தினர்களும் கூறினர். அந்த விலங்கின் கால் அடிச்சுவற்றை கலோனல் Fawcett அவர்களின் மகன் வரைந்தான். 1883 ஆம் ஆண்டு, அவர்கள் பரிணாமத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவதற்கு முன்பாக அமெரிக்க அறிவியலார் இந்த கட்டுரையை ஓடவிட்டார்கள். இன்றுள்ள அமெரிக்க அறிவியலார் இதுபோன்றக் கட்டுரையை ஒருபோதும் வெளியிடமாட்டார்கள். ஏனெனில், பரிணாமக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். அந்தக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது, " பொலிவியாவில், லா பாஸ் என்ற இடத்தில் பிரேசில் நாட்டின் மந்திரி...... ரியோவில் உள்ள வெளியுறவுத் துறை மந்திரிக்கு சாரியன் (saurian) என்கிற டைனோஸரைக் கொடுத்தார் என்கிற ஒரு சிறப்பான வரையப்பட்ட படத்தை..... பென்னி சதுப்பு நிலத்தில் அது 36 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. அதிபரின் ஆணைக்குப்பிறகு அது சுடப்பட்டது, அதன் காய்ந்துபோன உடலானது பாதுகாக்கப்பட்டு பின்பு லா பாஸ் என்ற இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது." அதினுடைய மூக்கிலிருந்து வால் வரையில் 12 மீட்டர்கள் நீளம் அளவுள்ளதாக இருந்தது. அதற்குச் செதில்கள், நீண்ட கழுத்து, மற்றும் அதன் வயிறானது மிகவும் பெரியதாக ஏறத்தாள தரையை இழுக்கத்தக்கதாக இருந்தது. பேராசிரியர் கில்வெட்டி என்பவர் அந்த விலங்கை ஆய்வுசெய்து, அது ஒரு காணாமல்போன இனங்களின் உறுப்பினராக இருக்கிறது என்று கூறினார். அந்தப் பகுதியில் உள்ள இந்தியர்கள் அதேபோன்ற வடிவில் உள்ள மண்பாத்திரங்களை செய்கின்றனர். இயற்கையாகப் பார்த்ததிலிருந்து அவைகள் பிரதிகளாக எடுக்கப்பட்ட டைனோஸர்களா? மூன்று நாளைக்கு முன்பாக வாகன் காப் என்கிற ஒரு மிஷனரி என்னை அழைத்தார், ஏனெனில் நான் இங்கு இண்டியானா வருவதற்காகக் காரை ஓட்டிக்கொண்டுருந்தேன். அவருடைய பகுதியில் உள்ள பூர்வீகக்குடிகள் 9 மீட்டர்கள் நீளமும் மற்றும் 1.5 மீட்டர்கள் உயரம் உள்ள ஒரு பல்லியைப் பற்றிப் பேசுகின்றனர். அதன் தீணிகளைப் பயமுறுத்துவதற்காக அது இடிமுழக்கம் போன்ற சத்தத்தை எழுப்புகிறது. பூர்வீகக்குடிகளான வெய்வெய் இந்தியர்கள் அதை உருஃபெரி (Urufere) என்று அழைக்கிறார்கள், மற்றும் அவர்கள் அந்த பிராணியைக் கண்டு திகிழடைகின்றனர். அங்கே கீழே உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள டைனோஸர்கள் பற்றி நீங்கள் பேச விரும்பினால் அவருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பல ஆண்டுகளூக்கு முன்பு கொல்லப்பட்ட ஒரு பெரிய பாம்பு இங்கே இருக்கிறது. அது 10.7 மீட்டர்கள் நீளம் இருக்கிறது; வேலையில் தூங்கின ஒரு மனிதனை அது சாப்பிட்டுருக்கிறது. ஆண்கள் வேலையில் விழிப்பாக இருப்பதற்கு இது ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது. இந்தப் பாம்பு 15 மீட்டர்கள் நீளமுள்ளதாக இருக்கிறது என்று இந்தோனிஷியாவில் அறிவிக்கப்பட்டது. அது உண்மையா அல்லது பொய்யா என்று எனக்குத் தெரியாது. மக்கள் அதை மிகைப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் அங்கே கீழே உள்ளது ஒரு பெரிய பாம்பின் அறிக்கையாக அது இருக்கிறது. மலைவாழ் மக்களை திகிழடையப்பண்ணிக்கொண்டிருந்த 19 மீட்டர் நீளமுடைய ஒரு அனகோண்டா பாம்பை தான் கொன்றதாக படைத் தளபதி பெர்ஸி ஃபாசெட் கூறினார். "படைத் தளபதி அவர்களே, ஒன்று அங்கே இருக்குமானால், இன்னொன்றும் இருக்கப்போகிறது!" என்று அவர்கள் கூறினார்கள். 1933 ஆம் ஆண்டில் பிரேசில் கொலம்பியா எல்லையில் அதிகாரிகள் 30 மீட்டர் நீளமுள்ளதும் 6 மீட்டர் அகலமுள்ளதுமான ஒரு பாம்பைக் கொன்றனர். அது 2 டன் எடை இருந்தது. ஒருமுறை 30 மீட்டர்கள் நீளமுள்ள ஒரு பாம்பை அவர்கள் பார்த்ததாக அமேஸானில் உள்ள ஒரு உணவகத்தில் உள்ள சமையல்காரர் கூறினார். அவர்களின் இரண்டு இராணுவ வீரர்களை அது கொன்று தின்றபிறகு அந்த இராணுவமானது அதை வேட்டையாடிக் கொன்றது. அதனுடைய தலையானது 1.5 மீட்டர்கள் நீளமாக இருந்தது. 1997 ஆம் ஆண்டின் பின்பகுதியில் 40 மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பை ரியூட்டர்ஸ் செய்தி சேவையானது அறிவித்தது. மேலும் இங்கே, இந்தப் பொருளானது அமேஸான் ஆற்றின் கீழே மிதந்தது. அது உயிருடன் இருக்கிறதா என்று பார்க்க ஒருவரும் அதைத் தொட்டுப்பார்க்கவில்லை. அது ஏறத்தாள 46 மீட்டர்கள் நீளமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் அறிவித்தார்கள். அமேஸான் ஆறு மிகவும் பெரியதாக இருக்கிறது. அமேஸான் ஆற்றின் மேலே பாதிக்குறுக்களவானது 14.5 கிலோமீட்டர்கள் அகலமுள்ளதாக இருக்கிறது என்று என்னுடைய முன்னால் மாணவரும், ஒரு மிஷனரியுமாக இருக்கிறவர் கூறினார். அமேஸான் ஆறானது நீண்டதும் மற்றும் அகலமுள்ளதுமாக இருக்கிறது! லக் நெஸ் என்று அழைக்கப்படுகிற ஒரு ஏரியானது ஸ்காட்லாந்து நாட்டில் இருக்கிறது. லக் நெஸ் பற்றி யாராவது எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? லக் நெஸ் என்ற அந்த ஏரியானது 39 கிலோமீட்டர்கள் நீளம், 2 கிலோமீட்டர்கள் அகலம் மற்றும் 275 மீட்டர்கள் ஆழமுள்ள ஒரு பெரிய ஏரியாக இருக்கிறது. பூமிக்கோளின்மேல் இருக்கிற ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் சென்று அதனுள் மூழ்கத்தக்க அளவிற்கு அது பெரியதாக இருக்கிறது. முழு உலகத்தின் முழு மக்கள் தொகையையும் அது பிடித்துக்கொள்ளும். 6 பில்லியன்கள் மக்களூம் அந்த ஏரிக்குள் அடங்கிவிடுவார்கள். அது மிகவும் பெரியதாக இருக்கிறது. 1933 ஆம் ஆண்டில், மலையின் அருகில் ஒரு புதிய சாலையானது வெட்டப்பட்டது. 1933 ஆம் ஆண்டிற்கு முன்பு நீங்கள் அந்த ஏரியைப் பார்க்க விரும்பினால், நீங்கள் அந்த மலையின்மேல் ஏறவேண்டும். இல்லையெனில், உங்களது படகில் 11 கிலோமீட்டர்கள் ஆற்றின்மேல் செல்லுங்கள். அங்கே மிகவும் சிலபேர்கள் சென்றார்கள்; இது மக்கள் தொகைக் குறைவாக இருக்கிற இடமாகும். 1933 ஆம் ஆண்டில், சாலை போடப்பட்டபோது, லக் நெஸ் மிகப்பயங்கரப் பிராணியைப் பார்த்த 52 தனித்தனி பார்த்த காட்சிகள் அறிவிக்கப்பட்டன. இந்தப் புத்தகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டபோது, அங்கே 9,000 அறிவிக்கப்பட்ட பார்த்த காட்சிகள் இருந்தன என்று இந்த ஆசிரியர் கூறினார். இன்று அங்கே 11,000 க்கும்மேல் லக் நெஸ் மிகப்பயங்கரப் பிராணியைப் பார்த்த காட்சிகள் இருக்கின்றன. 11,000!! உண்மையில் சில போலியானவைகளாகவும் மற்றும் சில கற்பனையானவைகளாகவும் அல்லது ஏமாற்றுபவைகளாகவும் இருக்கின்றன. கவர்வதற்காக அவர்கள் அடிக்கடி மாயாஜாலச் செய்திகளை அச்சிடும்போது, நான் சில செய்திப்பத்திரிக்கைகளை நம்புவதில்லை. சர் பீட்டர் ஸ்காட் என்பவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். அவர் ஒரு மிகப்பயங்கரமான பிராணியைப் பார்த்ததாகக் கூறினார். இது ஒரு பிலிஸியோஸர் (Plesiosaur) என்று அவர் நம்புகிறார். இதைப்பார்த்தோம் என்று அறிவிக்கிற பெரும்பாலான ஒவ்வொருவரும், இது இந்த பெலிஸியோஸரஸ் விலங்குபோன்று இருக்கிறது என்று கூறுகிறார்கள். நீண்ட கழுத்துடையது, நான்கு பெரிய தட்டையான கால்கள் இருக்கின்றன. ஒரு மனிதர் ஒரு புத்தகத்தை எழுதினார், அவர் சொல்லுகிறார்...... "நெஸ்ஸீயை (Nessie) பிலிஸியோஸர் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்தக் கோட்பாட்டில் அங்கே ஒரு தவறு இருக்கிறது...... 70 மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னரே பெலிஸியோஸர்கள் அழிந்துவிட்டன என்று நம்பப்படுகிறது." என்று கூறுகிறார். எனவே, அதுதான் அந்தக் கோட்பாட்டின் தவறாக இருக்கிறதா? அவர்கள் பரிணாமத்தில் "நம்பிக்கையாய் இருக்கிறார்கள்." இந்தப் பரிணாமக் கோட்பாடானது அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரியத் தடையாக எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்குப் பிடித்தமானக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் , அவர்கள் உண்மைகளைப் பார்க்கவேண்டும். முதலாவதாக உண்மைகளைப் பாருங்கள், அதன்பின்பு உங்களின் முடிவுகளை ஸ்தாபியுங்கள். ஆர்தர் கிராண்ட் என்னும் பெயருள்ள ஒரு மனிதர் நிஸ்ஸீயின் அருகே ஒரு இரவில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அவர் சொன்னார், "அந்தப் பொருளின் பிரகாசமான ஒரு காட்சியை நான் பார்த்தேன். உண்மையிலே நான் ஏறத்தாள அதை என்னுடைய மோட்டார் சைக்கிளால் இடித்தேன். அதற்கு ஒரு நீண்ட கழுத்து மற்றும் பெரிய முட்டை வடிவத்தில் கண்களும், ஒரு சிறிய தலையின் மேல் இருந்தன. அதின் வாலின் நீளம் 2 மீட்டர்கள் வரையில் இருக்கும். அவர் அதை விவரிக்கிறபடி, அது அனைத்தையும் சேர்த்தால் 4.6 முதல் 6 மீட்டர்கள் நீளம் இருக்கும்." இயற்கையின் வரலாறு அவருக்குத் தெரியும் என்று அவர் கூறினார். அவர் கால்நடை மருத்துவராவதற்குப் படித்துக்கொண்டிருந்தார். "என்னுடைய வாழ்க்கையில் அதுபோன்று நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை" என்று அவர் கூறினார். அவருடைய மோட்டார் சைக்கிளில் அவர் அதன் அருகில் ஓடி, அவர் வரைந்த வரைபடம் இங்கு இருக்கிறது. அது 20 அடி நீளமுள்ள ஒரு பிலிஸியோஸர் போன்று காணப்படுகிறது. லக் நெஸ் விளையாட்டை 47 ஆண்டுகள் பார்த்தப் பாதுகாவலராக அலெக்ஸாண்டர் கேம்ப் பெல் இருந்தார். அவர் அதை 18 முறைகள் பார்த்ததாகக் கூறுனார். அதைப் பற்றி அவர் வரைந்த வரைபடம் அங்கே இருக்கிறது. லக் நெஸ் மிகப்பயங்கரப் பிராணியைப் பிடிப்பதற்குப் பல மக்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அதைக் கண்ணிவைத்துப்பிடிப்பதற்கு நீங்கள் கற்பனைசெய்யக்கூடிய அனைத்தையும் மற்றும் நீங்கள் கற்பனைசெய்யாத சிலவற்றையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இதுவரையில் ஒருவர்கூட ஒன்றையும் பிடிக்கவில்லை. அந்த ஏரி மிகவும் பெரியதாக இருக்கிறது, ஆனால் அங்கே வரையப்பட்ட வரைபடங்கள் பல இருக்கின்றன. அதன் வாயில் ஒரு ஆடு இருந்ததைப் பார்த்ததாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். தண்ணீருக்கு வெளியே அதன் முதுகுப்பகுதி தெரிகிறமாதிரி உள்ளதும்; அதன் கழுத்து அதிக தூரத்தில் இருக்கிறதுபோன்று உள்ள ஒரு போட்டோவை ஒரு மனிதன் எடுத்தான். ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் பத்திரிக்கையாளர்கள், படங்களை மாற்றம்செய்கிறார்கள் அல்லது சிறிதாக்குகிறார்கள்; அதை வெளியிடும்பொழுது அதன் கழுத்தை நீக்கீவிட்டனர். திரு. மெக்கிலவ்டு (McCloud) என்பவர் அதை 9 நிமிடங்கள் தன்னுடைய பைனாகுலர் வழியாகப்பார்த்ததாகக் கூறினார். அதன்பிறகு அவர் பார்த்ததின் நான்கு வரைபடங்களை வரைந்தார். "அந்த மிகப்பயங்கரமான பிராணி இதுபோன்று உள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று மெக்கிலவ்டு கூறினார். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் என்னவெனில், அங்கே லக் நெஸ் மிகப்பயங்கரமான பிராணியைப் பற்றிப் பேசுகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கவனியுங்கள். "நான் அதைப் பார்த்திருக்கிறேன்" என்று சென்று பதிவுசெய்கிற ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருக்கிறார்கள். உலகப் புத்தகமாகிய அறிவுக்களஞ்சிய (Encyclopedia) புத்தகத்தார் அமெரிக்காவிலிருந்து ஸ்காட்லாந்திற்கு செல்வதற்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்கு பணம் கட்டினார்கள். தண்ணீரானது மிகவும் கருப்பாக இருந்ததாகவும் மற்றும் தன்னுடைய சொந்தப் படகின் முன்பகுதியைக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும் அந்த மனிதன் கூறினான். லக் நெஸ் ஒரு பெரிய களிமண் குளமாக இருக்கிறது. நீங்கள் ஒரு சில மீட்டர்கள் கீழே செல்லுங்கள், அப்பொழுது பார்க்கும் திறனானது பூஜ்ஜியமாக இருக்கிறது. உங்களால் ஒரு பொருளையும் பார்க்க முடியாது. ஜப்பானியர்கள் 24 படகுகளைப் போட்டு அந்த ஏரியின் கீழே சென்றனர். அவர்கள் தண்ணீரின் அடிப்பாகத்தில் இருக்கும் பொருட்களை எதிரொலி மூலம் கண்டுபிடிக்கும் கருவியை வைத்து ஆய்வுசெய்தனர் என்று அவர்கள் அறிவித்தார்கள். "இது ஒரு ஆழமான ஏரியாகவும் மற்றும் இது ஒரு சுருங்கிப்போன ஒரு திராட்சையைப் போன்றும் உள்ளது" என்று அவர்கள் கூறினார்கள். மேலும் ஓரமான பகுதிகளூக்குச் செல்லும் குகைகள் இருக்கின்றன, ஒருவேளை காற்று அறைகளுடன் இருக்கலாம். அந்தப் பிராணியானது மலையின் அடிப்பாகத்திற்குச் செல்ல முடியும், மற்றும் சுவாசித்து அங்கே வாழ முடியும். வைரம் போன்ற வடிவத்தில் உள்ள ஒரு காலை தண்ணீருக்கு அடியில் ஒரு மனிதன் போட்டோ எடுத்தான். மறுபடியும், அது ஒரு பெலிஸியோஸர் என்றே அவர்கள் நினைத்தனர். 1978 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்கிற பத்திரிக்கை இந்தப் படத்தை வெளியிட்டது. நெஸ்ஸீ தன்னுடைய வாயைத் திறந்தவாறு காண்பிக்கிற அந்தப் படமானது அங்கே தரைமீது இருக்கிறது. லக் நெஸ் மிகப்பயங்கரமான பிராணிகளைப் பற்றி நாம் நாள்முழுவதும் பேச முடியும். 1933 ஆம் ஆண்டு இருந்த இந்தப் படம் போலியானது என்று அவர்கள் கூறினார்கள், அது ஒருவேளை இருந்திருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியாது. அதிலே ஈடுபட்ட கடைசி நபர் இறந்துபோகும் வரைக்கும் அவர்கள் காத்திருந்து, அதன்பின்பு அது போலியான ஒன்று என்று அறிவிப்பது மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. எது உண்மையாக இருக்கிறது என்று நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்? அங்கே லக் நெஸ்வுடன் இணைக்கப்படாத மற்ற ஏரிகள் இருக்கின்றன. அங்கே லாக் லாக்கி இருக்கிறது. அங்கே லாக் மாரர் இருக்கிறது. பிராணிகளைப் பற்றி அறிவிக்கும் பல ஏரிகள் அங்கே இருக்கின்றன. இங்கிலாந்திற்கு அருகே, மக்காச்சோள தானிய வடிவ கடல் பாம்பு மர்கர் என்று அழைக்கப்படுகிற ஒன்று அங்கே இருக்கிறது. இதுபோன்ற பிராணிகளைப் பார்த்த காட்சிகளை அறிவிக்கும் அநேக அறிவிப்புகள் ஆங்கிலக் கால்வாய்க்கு இருக்கிறது. 1749 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஒரு பிராணியானது பிடிக்கப்பட்டது. ஏறத்தாள முதலையைப் போன்று அது ஒத்திருந்தது. ஆனால் அதற்கு இரண்டு பெரிய துடுப்புகள் இருந்தன, அதன் உடலானது மிகவும் கடினமான செதில்களால் மூடப்பட்டிருந்து, மேலும் அதற்கு 5 வரிசைப் பற்கள் இருந்தன. 1934 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் இந்தப் பொருளானது கரை ஒதுங்கியது. அது எவ்வளவு பெரியது என்பதை உங்களுக்கு காண்பிப்பதற்கு, அதைப்பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதன் அங்கே இருக்கிறான். 1905 ஆம் ஆண்டு பிரேஸில் நாட்டில் இந்தப் பிராணியானது அவர்களின் படகைக் கடந்து சென்றது என்று இரண்டு அறிவியலார்கள் அறிவித்தார்கள். அந்த முழு நிகழ்ச்சியை அந்த நேரத்தில் வெளிவந்த ஒரு அறிவியல் பத்திரிக்கையில் அவர்கள் அறிவித்தார்கள். அந்த பிராணியின் பின்புற துடுப்பானது சுமார் 2 மீட்டர்கள் உயரம் இருந்தது. மற்றும் அதன் பின்புறமானது சுமார் ஒரு மீட்டர் உயரமும், ஒரு சிறிய தலையானது சுமார் 2 ½ மீட்டர்கள் நீளமுள்ள ஒரு கழுத்தில் இருந்தது. அந்தப் பிராணியைப்பற்றி இரண்டு அனுபவமிக்க இங்கிலாந்து இயற்கையியலார் அறிவித்தனர். மறுபடியும், அறிவிக்கப்பட்ட பார்வைக்காட்சிகளைப் பற்றி நாம் நாள் முழுவதும் பேச முடியும். 1977 ஆம் ஆண்டில், ஒரு ஜப்பானிய மீன்பிடிக்கும் படகில் இதை அவர்களின் வலையில் மேலே இழுத்தனர். அது 10 மீட்டர்கள் நீளமும் 1800 கிலோ எடையும் உள்ளது. பூமியில் இருக்கிற அது என்ன? என்று அவர்கள் கேட்டனர். எனக்குத் தெரிவில்லை ஆனால் அது துர்நாற்றத்தை அது வெளியிடுகிறது என்று அந்தப் படகின் மாலுமி கூறினார். அவர்கள் படகின் அடுக்கில் அதை வைத்தபோது அது பாதியாக உடைந்தது. அவர்கள் அனேக வரைபடங்களை வரைந்தனர் மற்றும் 5 போட்டோக்களை எடுத்தனர், மற்றும் அதன்பின்பு அவர்கள் அதைப் பலகையில் தள்ளிவைத்தனர். 1977 ஆம் ஆண்டு ஜப்பானியர்களின் அஞ்சல் துறைக்காக அதன் ஒரு சிறப்புத் தபால் தலையானது உருவாக்கப்பட்டது. அது கடலின் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு சுறாமீனாக இருக்கலாம் என்று சில மக்கள் வாதிடுகின்றனர். நான் ஒத்துக்கொள்கிறேன், அது கடலின் அடிப்பகுதில் இருக்கும் ஒரு சுறாமீனாக இருக்கலாம். " கடலின் அடியில் இருக்கும் ஒரு சுறாமீன் எது என்று எங்களுக்குத் தெரியும், இது என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று படகில் இருந்த மீனவர்கள் கூறினார்கள். கடலின் அடியில் இருக்கும் சுறாமீன் தன்னுடைய தலைப்பகுதியை விட்டுவிட்டு அழுகிப்போகக்கூடியது. அங்கே இருக்கிறதுதான் கடலின் அடியில் இருக்கிற சுறா மீனாகும். அது கடலின் அடியில் இருக்கும் சுறா மீனாகக்கூட இருக்கட்டும்; அது எனக்கு முக்கியமில்லை. புரதம் 96% சுறா மீனுக்கு ஒத்திருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மையாக இருக்கிறது, ஆனால் அது பார்வைக்கு எதுபோன்று இருக்கும் என்று அறியவதற்கு, பெலிஸியோஸரின் புரதத்தை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை. மனிதர்களும் மற்றும் மனிதக் குரங்குகளும் ஒரேமாதிரி இருக்கின்றன, ஆனால் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும், அதைப்பற்றிய பல விவாதங்கள் அங்கே இருக்கின்றன. அது எனக்கு முக்கியமல்ல. ஆனால் 1977 ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் பிடித்தார்கள் என்று கூறுவதற்காக சிலமக்கள் என்மேல் கோபப்படுகின்றனர். ஏரியின் மர்மம் என்று அழைக்கப்படுகிற ஒரு பிராணியை ரஷ்யர்கள் அவர்களின் ஏரிகளில் ஒன்றில் அறிவிக்கின்றனர். 1994 ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடற்கரையில் ஒதுங்கின ஒரு டைனோஸர் போன்று அது இருக்கிறது. அது 12 மீட்டர்கள் நீளமுள்ளதாக இருந்தது. இது மாற்றம் செய்யப்பட்ட ஒரு சுறா மீனின் போட்டோ என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெலிஸியோஸர் போன்று இருப்பதற்காக யாரோஒருவர் ஒரு கணினியைப் பயன்படுத்தியிருக்கிறார், ஆனால் உண்மையில் இது மாற்றியமைக்கப்பட்ட ஒரு போட்டோவாக இருக்கிறது. எனவே கவனமாக இருங்கள், அங்கே வெளியே ஏராளமான ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள், அது நிச்சயம். ஆனால் ஏமாற்றுபவர்கள் அல்லது போலிகள் இருப்பதனால் அசல் இருப்பதை இல்லையென நிரூபிப்பதில்லை. 2004 ஆம் ஆண்டில், நியூ கின்னியாவில், பப்புஆ (Papua) என்ற இடத்தில் வசிக்கும் ஒரு குழுவினர், ஒரு டைனோஸர் போன்று உள்ள ஒரு பிராணி இருப்பதாக அறிவித்தனர். அது ஒரு முதலையின் வால்போலுள்ள 3 மீட்டர்கள் உயரமுள்ள மற்றும் ஒரு நாயின் தலைபோன்று இருந்தது. அந்தத் தீவில் உள்ள கொகொபோ என்கிற ஒரு நகரத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பெண் அதைப்பார்த்ததாகவும் மற்றும் அவளுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவள் ஓடினதாகவும் கூறினாள். ஒரு நாயின் தலைபோன்றும் மற்றும் ஒரு முதலையின் வால்போன்றும் உள்ள 3 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு பிராணியைப் பார்த்ததாக அவள் கூறினாள். சமீபத்தில் 2004 ஆம் ஆண்டு பார்க்கப்பட்ட இந்தப் பிராணியைப்பற்றி வலைதளத்தில் நீங்கள் பார்க்க முடியும். இந்தப் பிராணிகளில் சிலவைகள் இருப்பதாக ஜப்பானும் அறிவிக்கிறது. ஹொக்கைடோவின் வட தீவும் அவைகளைப் பற்றி அறிவிக்கிறது, மற்றும் ஜப்பானின் முக்கிய தென் தீவும் அவைகளைப்பற்றி அறிவிக்கிறது. ஐகிடா ஏரியில் (Lake Ikeda) அவர்கள் அதை இஸ்ஸீ (Issie) என்று அழைக்கிறார்கள். சீனாவில், USO (Unidentified Swimming Object) அடையாளம் தெரியாத பொருள் என்று அங்கே ஒன்று அறிவிக்கப்படுகிறது. அங்கே மேலே உள்ள ஏரிகளில் இரண்டு காட்சிகளை அறிவித்த ஸ்வீடனைப் போன்று, நார்வேயிடம் அறிவிக்கப்பட்ட ஏராளமான பார்த்த காட்சிகள் இருக்கின்றன. ஸ்டோர்ஜன் ஏரியில் அவர்கள் அதை "Storsjoodjuret" ஸ்டோர்ஸ்ஜூடுஜுரட் என்று அழைக்கிறார்கள். லக் நெஸ் மிகப்பயங்கரமான பிராணியைப் போன்று நார்வேயில் அவர்களூக்கு ஒரு பிராணி இருக்கிறது. அவர்கள் அதைப் பார்த்திருப்பதாக நூற்றுக்கணக்கான மக்கள் கூறுகிறார்கள். லக் நெஸ் போன்று அது சில நேரங்களில் செய்தியில் அறிவிக்கப்படுகிறது. கனடா ஏரியின் மிகப்பயங்கரமான பிராணிகளைப் பார்த்த காட்சிகளைப் பற்றி கனடா அறிவித்திருக்கிறது. நெஸ்ஸீயின் கனடா மைத்துனர். ஒகனாகன் (Lake Okanagan) என்கிற ஒரு ஏரியானது கெலோனா என்கிற நகரத்தில் அங்கே இருக்கிறது. அது 130 கிலோமீட்டர்கள் நீளமுள்ள ஒரு பெரிய ஏரியாக இருக்கிறது. கெலோனா (Kelowna) என்கிற மேலே உள்ள அந்த நகரத்திற்குப் பேசுவதற்காக நான் அங்கு இரண்டுமுறை சென்றிருக்கிறேன். அங்குள்ள பூர்வீகக்குடிகள் அந்தப் பிராணியை ஒகபோகோ (Ogopogo) என்று அழைக்கின்றனர். நீங்கள் அந்த ஒகபோகோவைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், பின்புறத்தில் அங்கே எங்களது மேஜையில் ஒரு புத்தகத்தை விற்பனைசெய்கிறோம். அது லக் நெஸ் மிகப்பயங்கரமான பிராணியைப் போன்றே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அதைப்பார்த்ததாக உரிமைகொண்டாடுகிறார்கள். இந்தக் கட்டுரை சொல்லுகிறது, " சில வினோதமானவைகளைப் பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் சமீபத்தியமானவர்கள்..... இந்த குறுகிய 30 கிலோமீட்டர்கள் நீளமுள்ள ஏரியில் பார்த்தவர்கள் இருந்தார்கள். ஒரு மனிதன் அந்த ஏரியின் முழு நீளத்தையும் நீந்தினார். அந்தப் பொருளானது அவருக்குக் கீழே மேலே வந்தது என்றும் மற்றும் அது ஒரு திகிலூட்டும் காட்சியாக இருந்தது என்றும் அவர் கூறினார். இது பற்றிய பல செய்திக்கட்டுரைகள் என்னிடம் உள்ளன. "நான் இரண்டுமுறை ஒகபோகோவைப் பார்த்தேன்" என்று அவள் கூறினாள். நான் ஜான் காருஸோவுடன் (John Caruso) பேட்டி கண்டேன். அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் அந்த ஏரிக்கு மேல் அவர்களின் படகில் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த ஏரியில் அவர்களின் பெரிய படகில் அவர்கள் முகாமிட்டுக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று அவர்களின் படகின் அடியில் இடித்தது. அது அவர்கள் அனைவரையும் அதிகாலையில் எழுப்பினது. அவர்கள் வெளியே சென்று இரண்டு ஒகபோக்களைப் பார்த்தனர்....... அந்த ஏரியின் குறுக்கே அவர் மறுபடியும் நீந்திச்சென்று அவருடைய கேமராவை திடீரென எடுத்தார். அந்த நேரத்தில் கேமராவைத் திருப்பினார், அது மிகவும் தூரத்தில் இருந்தது, ஆனால் அவர் எனக்கு ஒரு வீடியோ படச்சுருள் நகலைக் கொடுத்தார். அதன் விபரங்களை உருவாக்குவதற்கு அது மிகவும் தூரமாக இருந்தது என்றும், ஆனால் "பாருங்கள், சகோதரர் ஹோவிந் அவர்களே, நான் ஒகபோகோவைப் பார்த்தேன்!" என்று அவர் கூறினார். அதைப் பதிவுசெய்ய பல மக்கள் சென்று அதைப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவில், காடுபொரோ குடாவில் (Cadboro Bay) அங்கே ஒன்று உள்ளது. நீங்கள் அதைப் பற்றி அதிகம் வாசிக்க விரும்பினால் அங்கே ஒரு புத்தகம் இருக்கிறது. ஒரு பெரிய திமிங்கிலத்தின் வயிற்றின் உள்ளே சிறிய தேநீர் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குச் சிறிய, கூர்மையான முன் அங்கங்கள், மற்றும் அது நீண்ட கழுத்துடன் அதன் தலையானது ஒரு குதிரையின் தலைபோன்றும் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் ஒரு குழந்தை காடுபுரோஸரஸை (Baby cadbrosaurus) தன்னுடைய மூழ்கும் வலையினால் பிடித்தார். அவர் அதை வெளியே எடுப்பதற்கு முன்பு ஒரு வரைபடம் வரைந்தார். அது என்னவாக இருந்தது என்று அவருக்குத் தெரியாது, எனவே அவர் அதைப் போகவிட்டார். நான் ஒரு மணி நேரம் இவருடன் பேட்டி கண்டேன். இந்த நான்குபேரும் கனடாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நோவா ஸ்காட்டியாவில், கேப் ஸபில் தீவில் ஒரு பிராணியானது அவர்களின் படகை வெளியே விரட்டியது. அது 1992ல் நடைபெற்றது. நான் அங்கே மேலே பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தபோது, நான் அவரைச் சந்தித்தேன். இது நிகழ்ந்தபோது அவருக்கு 67 வயது என்று அவர் கூறினார். அங்கு அவர் 5 வயதிலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்த 12 முதல் 15 வரை நீளமுள்ள பிராணியானது அவர்களின் படகை 2 அல்லது 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் விரட்டியது. அதின் கழுத்து ½ மீட்டர் தடிமனாகவும் மற்றும் ஏறத்தாள 3 மீட்டர்கள் நீளமுள்ளதாகவும் இருந்தது. அதின் கண்கள் சுமார் 23 செண்டிமீட்டர் குறுக்களவு உள்ளதாகவும் இருந்தன என்று அவர் கூறினார். அவர்கள் கேப் ஸபில் தீவின் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தார்கள் என்று அவர் சொன்னார். அதை அவர் மறுபடியும் பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். அதைத்தான் அவர் என்னிடம் சொன்னார். கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டின் கடற்கரையில் இந்தப் பொருளானது கரை ஒதுங்கியது. சில நேரங்களில் பெரிய துணுக்குகள் கடற்கரையில் ஒதுங்குகிறது. சில நேரங்களில் அது திமிங்கிலத்தின் தோலாக இருக்கிறது. திமிங்கிலமானது இறந்துவிடுகிறது, அது பெரும்பாலும் உண்ணப்படுகிறது, ஆனால் அது சுவாசிக்கும் அடுக்கானது கரை ஒதுங்குகிறது. சில நேரங்களில் அது கடலின் அடியில் வசிக்கும் பெரிய சுறா மீனாக இருக்கிறது. கனடாவின் பார்க்கர் கோவ் என்னும் இடத்தில் இது கரை ஒதுங்கியது. அதைப் பார்த்தோம் என்று சொன்ன பல மக்களுடன் நான் பேசினேன். ஏராளமான மக்கள் சென்று அதை பகுத்து அறிந்தனர். நிச்சயத்துடன் அது எப்பொழுதும் நேர்மறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நான் நினைக்கவில்லை. அது கடலின் அடியில் வசிக்கும் பெரிய சுறா மீனாக இருந்திருக்கலாம், நேர்மறையாக ஒருவரும் அறியவில்லை, ஆனால் அது இப்பொழுது சென்றுவிட்டது. மக்கள் அதைத் துண்டுகளாக வெட்டுகின்றனர். அதன் முதுகு எழும்பானது எந்த மற்ற வகைகளைக் காட்டிலும் ஒரு சுறா மீனின் முதுகெழும்புக்கு ஏதுவாக இருக்கிறது. இதுபோன்ற பொருட்கள் கடற்கரையில் கரை ஒதுங்குவது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. "மிகப்பயங்கரமான பிராணி! மிகப்பயங்கரமான பிராணி!" என்று அழைக்கப்படுகிற ஒரு புத்தகத்தை நாங்கள் விற்பனைசெய்கிறோம். அவைகள் வட அமெரிக்க ஏரியின் மிகப்பயங்கரமான பிராணிகள் மற்றும் கடல் பாம்புகளைப் பற்றியது. மேலும், லாரன் கோல்மேன் என்கிறவர் எழுதின ஒரு நல்ல புத்தகம் இங்கு இருக்கிறது, அவர் ஒரு (Crypto - Zoologist) மறைக்கப்பட்ட உயிரியியல் வல்லுனர், ஆனால் ஒரு பரிணாமவாதியாகவும் இருக்கிறார். நான் ஜேக்குயீஸ் போய்ஸ்வெர்ட் (Jacques Boisvert) என்பவரை மூன்று மணி நேரம் பேட்டி கண்டேன். கனடாவின் குயிபெக் மற்றும் அமெரிக்காவின் வெர்மொண்ட்க்கு இடையே உள்ள மெம்பிரிமாகோக் (Memphremagog) ஏரியில் காணப்படும் பிராணியின் பார்வைக் காட்சிகளை அவர் சேகரிக்கிறார். அங்கே மேலே உள்ள மெம்பிரிமாகோக் ஏரியில் சிலவைகளைப் பார்த்ததாக நூற்றுக்கணக்கான மக்கள் உரிமைகொண்டாடுகிறார்கள். பொட்டோமாக் ஆற்றில் பிராணிகள் காணப்பட்டுள்ளன. மகா புதிய இங்கிலாந்தின் கடல் பாம்பைப்பற்றி ஒரு புத்தகம் அங்கே இருக்கிறது. பிளாக் ஐலண்ட் என்று அழைக்கப்படுகிற ஒரு தீவானது கனைக்ட்கட் மற்றும் ரோட் ஐலண்டுக்கு அருகில் உள்ளது. அங்கே வெளியே பல பிராணிகள் நீந்திக்கொண்டிருப்பதாக பல மக்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்கள் அதை "பிளாக் நெஸ் மிகப்பயங்கரமான பிராணி" என்று அழைக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டில் ஒன்று கரை ஒதுங்கியது. 2004 ஆம் ஆண்டில் இன்னொரு பொருள் கரை ஒதுங்கியது. நான் அறிந்தவரையில் அது ஒருபோதும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. இந்தப் பொருட்களைப் பற்றி எப்பொழுதும் நான் மக்களிடம் பேட்டி காண்கிறேன். எரி என்ற ஏரியில்(Lake Erie) தெளிவாக ஒன்று இருக்கிறது. எரியில் காணப்படும் பெஸீ என்ற பிராணியானது நெஸீயைப் போன்று உள்ளது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அது 11 மீட்டர்கள் நீளமுள்ளதாகவும் மற்றும் அதற்கு பாம்புபோன்றுள்ள ஒரு தலையும் இருக்கிறதாக அவர்கள் சொல்லுகிறார்கள். எரி என்ற ஏரியில் காணப்படும் மிகப்பயங்கரமான பிராணியைப் பற்றிய செய்தியானது சில நேரங்களில் செய்தித்தாள்களில் விவரிக்கப்படுகிறது. எரி என்கிற ஏரியின் கரையில் இறந்துபோன ஒரு குழந்தைப் பிராணியானது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடுபவர்களுக்கு நினைவுப்பரிசு கொடுக்கப் பாதுகாக்கும் ஒரு திறமையான மனிதன், அதை வீட்டிற்கு எடுத்துசென்று, பாதுகாத்து அதை காட்சிக்கு வைத்தான். "நீங்கள் அது என்னவென்று எனக்குச்சொல்லுங்கள், எனக்குத் தெரியவில்லை" என்று அவன் கூறினான். டாக்டர் பக் (Dr. Baugh) அதை வாங்கினார் மற்றும் அது டெக்ஸாஸில் உள்ள அவருடைய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அது ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் உறுதியில்லாமல் இருக்கிறார்கள், அது ஒரு போலியான பொருளாகக்கூட இருக்கலாம். ஒருவருக்கும் தெரியாது. மிகவும் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு சிறிய பிராணியாகும். முதலாவதாக (Scituate Harbor Monster) சிட்சுயேட் துறைமுக மிகப்பயங்கரமான பிராணியைப் பார்த்த காவலருடன் நான் பேட்டி கண்டேன். அது கரையில் ஒதுங்கும்போது அது 15 மீட்டர்கள் நீளமாக இருந்தது. உள்ளூர் மக்கள் அதை வெட்டுவதற்கு ஆரம்பித்தனர். அது மோசமாக பாதிக்கப்பட்ட அந்த நேரத்தில் அவர்கள் இந்த போட்டோவை எடுத்தார்கள். அது கடலுக்கு அடியில் வாழும் சுறா மீன் என்று சிலர் வாதிட்டனர், அது உண்மையிலே ஒரு கடல் பாம்பு என்று மற்றவர்கள் கூறினார்கள். " நாங்கள் கவலைப்படவில்லை, அது துர்நாற்றத்தை வெளியிடுகிறது, எனவே இதை வெளியேற்றுகிறோம்" என்று சுகாதாரத் துறை கூறியது. அவர்கள் அதை வெடி வைத்துத் தகர்த்தனர். கலிபோர்னியாவில், 1925 ஆம் ஆண்டில், இந்தப் பொருள் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அது தலையாக இருக்கிறது மற்றும் அங்கே கழுத்தானது வலதுபக்கம் கீழே செல்கிறது. அதனுடைய கழுத்தானது 6 மீட்டர்கள் நீளமுள்ளதாக இருந்தது. அது 6 மீட்டர்கள் நீளம் கழுத்துள்ள ஒரு பெலிஸியோஸரஸாக இருக்கிறது என்று அதைப் பரிசோத்தித்தவர்கள் ஒவ்வொருவரும் கூறினார்கள். "ஹோவிந், நீங்கள் மிகவும் முட்டாளாக இருக்கிறீர்கள், அது ஒரு திமிங்கிலம் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கடவுள் மேல் நம்பிக்கையில்லாத ஒருவர் எனக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினார். "தற்பொழுது திமிங்கிலத்தின் கழுத்து எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்டேன். அது தலைக்கும் அங்கங்களுக்கும் இடையில் இருக்கவேண்டுமே. "இது வளைந்த மூக்குடைய ஒரு அபூர்வ திமிங்கிலம்" என்று அவர் சொன்னார். 6 மீட்டர் நீளமுள்ள கழுத்துடைய அது அபூர்வமாக இருக்கிறது. அது ஒரு பெலிஸியோஸரஸ் என்று அதைப் பார்த்த மக்கள் கூறினார்கள். அதை நம்புவதற்கு ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? அதுபோன்ற விளக்கங்களை மக்கள் ஏன் எதிர்க்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அது அவர்களின் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிறது. அவர்கள் பரிணாமக் கோட்பாட்டை விரும்புகின்றனர், ஏனெனில் தேவன் முக்கியமானவரே அல்ல என்று அது உருவாக்குகிறது. எனவேதான் அவர்கள் அந்தக் கோட்பாட்டை விரும்புகின்றனர். மறைக்கப்பட்ட உயிரியியல் கருத்துக்களைப் பற்றி நாம் நாள் முழுவதும் படிக்கலாம். நான் பல ஆண்டுகளாக இதைப் படித்திருக்கிறேன். ஒரு உயிருள்ள டைனோஸரைப் பார்த்ததை உரிமைகொண்டாடுகிற நூற்றுக்கணக்கான மக்களை நான் பேட்டி கண்டுள்ளேன். நியூயார்க்கில், 1969 ஆம் ஆண்டில், ஆற்றிற்கு மேல் துறைமுக காவலர்கள் திமிங்கிலத்தைக் காட்டிலும் மிகவும் பெரியதான ஒன்றை விரட்டிச்சென்றார்கள். அவர்கள் அதை ஒருபோதும் பிடிக்கவில்லை. அது ஒரு ஸீகுலோட்டன் (Zeuglodon) அல்லது பேஸிலோஸரஸ் (Basilosaurus) ஆகவும் இருந்திருக்கலாம். எனக்குத் தெரியாது. அர்கென்ஸாஸில், நியூ போர்ட் என்கிற இடத்தில் இருந்த வெள்ளை ஆற்று மிகப்பயங்கரமான பிராணியை பற்றி 1973 ஆம் ஆண்டுவரையில் பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது காணாமல்போனது என்று தெளிவாகத் தெரிகிறது. அர்கென்ஸாஸில், அதன் செனட் சபையானது ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த வெள்ளை ஆற்று மிகப்பயங்கரமான பிராணியை இடையூறு செய்வதோ, கொல்லுவதோ அல்லது காலால் நசுக்குவதோ சட்டவிரோதமானது என்று அது கூறுகிறது. புளோரிடாவின், ஜூனிபர் கடற்கரைக்கு அப்பால், ஒரு டைனோஸரைப் போன்ற ஏதோஒன்று காணப்பட்டுள்ளது....... அங்கே வெளியே கடலில் நீந்திக்கொண்டிருந்தது. அந்தக் கட்டுரைகளை நீங்களாகவே வாசிக்க முடியும். இதைப் பற்றிய அதிகமானவைகள் என்னுடைய www.drdino.com, என்ற இணையதளத்தில் இருக்கிறது. அதைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் வாசிக்க முடியும். ஜேம்ப்லைன் ஏரி என்று அழைக்கப்படுகிற ஏரி ஒன்று நியூயார்க்கிற்கும் மற்றும் வெர்மண்ட் என்ற இடத்திற்கும் இடையில் உள்ளது. ஜேம்ப்லைன் மிகப்பயங்கரமானப் பிராணியை தாங்கள் பார்த்ததாகப் பல மக்கள் உரிமை பாராட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தை எடுத்த ஸேண்டியிடம் நான் பேட்டி கண்டேன். "ஸேண்டி அவர்களே, ஒரு டைனோஸரைப் பார்த்தீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று நான் அவளிடம் கேட்டேன். "இல்லை, நான் ஒரு டைனோஸரைப் பார்த்தேன் என்று நான் அறிவேன்" என்று அவள் கூறினாள். அவளூம், அவளுடைய கணவரும் மற்றும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் அதை பத்து நிமிடங்கள் கவனித்தனர். 58 மக்கள் ஈதன் ஏலன் (Ethan Allen) என்னுமிடத்தில் ஏரியின் வெளியே ஒரு பிராணியைப் பார்த்ததாக நினைத்தார்கள். ஒருவேளை அவர்கள் அனைவரும் சில கெட்ட உணவினால் மனதில் பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்கள். 1998 ஆம் ஆண்டில், அப்பொழுது அந்தக் கப்பலின் மாலுமி, "நான் பார்த்தது ஒரு மீன் என்று நீங்கள் நினைத்தால் அது 1300 முதல் 2300 கிலோ வரை எடையிருக்கும்" என்று கூறினார். தண்ணீரின் பாம்புகளைப் பற்றி வேதாகமம் பேசுகிறது. "அவர் சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்" என்று ஏசாயா 27:1 கூறுகிறது. நான் வசிக்கிற பென்ஸகோலாவில், 1962 ஆம் ஆண்டில் 5 இளம் இளைஞர்கள் நீச்சலடிக்கச் சென்றனர். அந்த சாகசப்பிரயாணத்தில் ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். அவன் சொன்னது இங்கே இருக்கிறது. மேஸ்ஸக்குசெட்ஸ் (Massachusetts) என்கிற மூழ்கின கப்பலை பென்ஸகோலா துறைமுகத்தில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். "கடற்கரையிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் பார்வைக்குத் தெரியும் தொலைவில், அந்த மூழ்கின கப்பலை நோக்கி காற்று நிரப்பப்பட்ட ஒரு படகில் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். வெளியே பாதிவழியில் ஒரு புயலினால் நாங்கள் பிடிக்கப்பட்டோம் மற்றும் மூழ்கின கப்பலுக்கு அருகில் தள்ளப்பட்டோம்...... அந்தப் புயல் நின்றபின்பு நாங்கள் ஒரு அடர்ந்த மூடுபனியின் உள்ளே இருந்தோம்....... ஒரு திமிங்கில மீன் தண்ணீர் தெளிப்பது போன்ற ஒரு வித்தியாசமான சத்தங்களைக் கேட்க ஆரம்பித்தோம். இறந்துபோன மீனிலிருந்து வருகிற ஒரு துர்நாற்றம் போன்று இருந்தது. அந்தச் சத்தம் படகின் அருகில் வந்தது மற்றும் நான் சீறும் பெரிய சத்தத்தைக் கேட்டேன். மூடுபனிக்கு வெளியே ஒரு நீண்ட ஏறத்தாள 3 மீட்டர்கள் நீளமுள்ள ஒரு கம்பம் போன்றதை நாங்கள் பார்த்தோம். அது தண்ணீரிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தது. அதன் மேல்பகுதியானது ஒரு மின்சார விளக்குபோன்ற வடிவமாக இருந்தது. அதன் நடுப்பகுதியில் வளைந்து தண்ணீருக்குக் கீழே சென்றது. அது அந்தப் படகின் அருகில் வருவதுபோன்று பலமுறை காணப்பட்டது. அந்த மூடுபனியிலிருந்து ஏதோஒன்று அந்த அமைதியை மறுபடியும் கலைத்தது. அது ஒரு அதிக வேதனையில் ஓலமிட்டது என்று மட்டும் என்னால் விவரிக்கமுடியும். நாங்கள் திகிலடைந்தோம். நாங்கள் ஐந்துபேரும் எங்களது நீந்தும் துடுப்புகளை எங்கள்மேல் போட்டுக்கொண்டு தண்ணீருக்குள் சென்றோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து அந்தக் கப்பலை நோக்கி நீந்தினோம்!" நான் கூக்குரலிட்டேன். நாங்கள் தண்ணீருக்குள் சென்றபின்பு மூடுபனியில் நாங்கள் தனித்தனியாக பிரிந்து விட்டோம். பின்பக்கத்திலிருந்து என்னுடைய நண்பர்களின் கதறுதல்களை ஒன்றன்பின் ஒன்றாக என்னால் கேட்க முடிந்தது. என்னுடைய கடைசி நண்பர் கீழே செல்லுவதற்கு முன்பு அந்தப் பிராணியைப் பக்கத்தில் மிகவும் அருகில் பார்த்தேன்...... அதன் கழுத்தானது சுமார் 4 மீட்டர்கள், பழுப்பு கலந்த பச்சையான நிறத்திலும் மற்றும் மென்மையான பார்வையுடையதாகவும் இருந்தது. அதிக நீளமில்லாததைத் தவிர அந்தத் தலையானது ஒரு கடல் ஆமை போன்று இருந்தது. அதன் கண்கள் முட்டைவடிவ கண்மணிகளுடன் பச்சையாக இருந்தன. நான் ஒரு கதறலைக் கேட்பதற்கு முன்பாக அது எவ்வளவு நேரம் இருந்தது என்று எனக்குத் தெரியாது. அது ஒருவேளை 30 நொடிகள் நீடித்திருக்கலாம். அப்பொழுது வாரன் என்பவர் அழைத்ததை நான் கேட்டேன், " ஏய், எனக்கு உதவிடு!! அது பிராடை பிடித்தது! நான் இங்கிருந்து வெளியே வரவேண்டும்!" அவருடைய சத்தமானது ஒரு சிறிய திடீர் அழுகையுடன் முடிந்தது. "பிராடு, வாரன்! ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறீர்கள்?" என்னால் அதிகச் சத்தமாகக் கூக்குரலிட இயன்ற மட்டும் நான் கூக்குரலிட்டேன். தற்பொழுது லேரி என்னுடனும் மற்றும் எரிக்குடனும் நீந்தினார். வாரனையும் மற்றும் பிராடுவையும் எங்களால் பார்க்க முடியவில்லை. எரிக்குக்கு அடுத்து அந்தக் கம்பம்போல் உள்ள உருவமானது தண்ணீரை உடைத்தது. அந்த நீண்ட கழுத்தையும் மற்றும் இரண்டு சிறிய கண்களையும் என்னால் பார்க்க முடிந்தது. வாயானது திறந்திருந்தது மற்றும் மேலே வளைந்திருந்தது. அது எரிக்கின் மேலே வந்தமர்ந்து, அவரைக் கீழே இழுத்துக்கொண்டிருந்தது. நான் கூக்குரலிட்டேன் மற்றும் நான் கப்பலை நோக்கி நீந்த ஆரம்பித்தேன், என்னுடைய உள்பாகங்களானது கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அசைந்துகொண்டிருந்தன." என்றார். அவருடைய நண்பர்களைக் கொன்ற அந்தப் பொருளை அவர் ஒரு வரைபடமாக வரைந்தார். "நான் இறுதியாக அதை கப்பலின் மேலே இருக்கும்படியாகச் செய்தேன் மற்றும் பெரும்பாலான இரவில் அங்கே தங்கினேன்" என்று கூறினார். அடுத்த நாள் காலையில், நான் கடற்கரைக்கு நீந்தினேன் மற்றும் அந்த மீட்புக் குழுவினரால் நான் கண்டுபிடிக்கப்பட்டேன். தன்னுடைய நான்கு நண்பர்களையும் கொன்ற அதைப் பற்றி பிரையன் மெக் தெளிவாக வரைந்த வரைபடம் அதுவாக இருக்கிறது. ஒரு நேரம், புளோரிடாவின் போர்ட் வால்ட்டன் கடற்கரையில் நான் பேசிக்கொண்டிருந்தேன். வேலிரீ பில் என்பவர் என்னிடம் வந்து, "திரு. ஹோவிந் அவர்களே, என்னுடைய வளர்ப்பு மகனாகிய லேரி பில் அந்த நான்கு சிறுவர்களில் ஒருவன்" என்று கூறினார். நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிற அந்த சம்பவம் சரிதான் என்றார். ஆனால் பென்ஸகோலா செய்திப்பத்திரிக்கையானது, அவருடன் பேட்டி கண்டபின்பு, அவர்கள் சொன்னார்கள், "இது ஒரு கடற்கரைப் பட்டிணம்; சுற்றுலாப் பிரயாணிகள் தண்ணீரில் மகிழ்ந்திருக்க இங்கு வருகிறார்கள். ....... உங்களது நண்பர்களை ஒரு டைனோஸர் சாப்பிட்டது என்று நாங்கள் அறிவிக்கப்போவதில்லை. அவர்கள் மூழ்கிவிட்டனர் என்று மட்டுமே நாங்கள் அறிவிப்போம்" என்று கூறினார்கள். அதைத்தான் "நான்கு இளம் வாலிபர்கள் மூழ்கிவிட்டனர்" என்று அந்தச் செய்திப்பத்திரிக்கை அச்சடித்தது. புளோரிடாவில், பனாமா பட்டிணத்தில், அங்கே பார்த்ததைப் போன்று அங்கு ஏதோ ஒன்று இருந்தது. அந்தச் சிறுவாகனத்தில் தன்னுடைய முழு இளைஞர் குழுவும் இருந்தது என்று லுத்தரன் சபையின் இளைஞர் குழு இயக்குனர் என்னிடம் கூறினார். அவர்கள் அதுபோன்ற ஒரு பிராணியை பனாமா பட்டிணத்தின் துறைமுகத்திற்கு வெளியே பார்த்தார்கள். டைனோஸர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்று அங்கே பல அறிக்கைகள் இருந்து வருகின்றன. பெரிய இறகுகள் உடைய சில பல்லிகள்(Pterodactyis) இன்னும் அங்கே உயிருடன் இருக்கலாம். நீங்கள் கோங்கோவில் இருந்தால், இந்த விலங்குகளை மலைவாழ் மக்கள் கொங்கமேட்டோ (Kongamato) என்று அழைக்கிறார்கள். கென்னியாவில் இருந்தால், அவர்கள் இதை பட்டம்ஸிங்கா (Batamzinga) என்று அழைக்கிறார்கள். ஸ்டீவ் ரோமண்டீ என்பவர் கென்னியாவின் முன்னால் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயக் குழுவில் இருந்தார். அமெரிக்காவில் உள்ள லூயிஸியானாவில் உள்ள பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் என்னை அழைத்தார். அவர், "திரு. ஹோவிந் அவர்களே, நான் அந்தப் பிராணிகளைப் பார்த்தேன். கென்னியாவில் உள்ள எனது கிராமத்தின் அருகில் அவைகள் இருக்கின்றன" என்று கூறினார். அழிந்துகொண்டிருக்கிற மனிதர்களின் சரீரம் அவைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அவைகள் கல்லரைகளைத் தோண்டி இறந்த சடலங்களைச் சாப்பிடுகின்றன. கொங்கமேட்டோ அல்லது பட்டம்ஸிங்கா பற்றி ஏராளமான மக்கள் பேசிக்கொண்டே வருகின்றனர். வாழ்ந்துகொண்டிருக்கின்ற டைனோஸர்கள் பற்றி பல மணி நேரங்கள் நாம் பேச முடியும். இறகுகள் உடைய பல்லிகள்(Pterodactyis) சுற்றிலும் இருக்கின்றன என்று அங்கே பல அறிக்கைகள் இருக்கின்றன. இறகுகள் உடைய பல்லிகள் (Pterodactyis) இன்னும் காணப்படுகின்றன என்று அறிவிக்கிற மக்களிடமிருந்து எனக்கு தொலைபேசிகள் வருகின்றன. அவைகள் நீயூ கின்னியாவின் பப்புஆ, அல்லது இந்தோனிஷியாவின் மேல், அல்லது தென் அமெரிக்காவின் வெனிஸூலாவில் காணப்படுகின்றன. இறகுகள் உள்ள இந்த அனைத்துப் பல்லிகளைப் பார்த்த காட்சிகளைப் பற்றி பேசுவதற்கு நமக்கு நேரம் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பறக்கும் ரோபின் (Ropin) பற்றி அந்த உள்ளூர் மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று கின்னியாவின் பப்புஆவிற்குச் சென்ற டேவ் வெயிட்ஸெல் கூறினார். அந்தப் பிராணிகள் இருட்டில் பிரகாசமாக இருக்கின்றன. அவர் அங்கே உள்ள ஒரு தீவில் வாழ்ந்து வருகிறார். "இது ஏன் முக்கியமானது? சகோதரர் ஹோவிந் அவர்களே, யார் கவலைப்படுகிறார்கள்?" என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் டைனோஸர்கள் அங்கே வாழ்கின்றன என்று நான் நினைக்கிறேன். மேலும் டைனோஸர்கள் பற்றி நமக்கு உண்மையிலே பொய்கள் கூறப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அங்கே பலவைகள் இருக்கின்றன என்று நான் நினைக்கவில்லை, மேலும் அது வெளியே செல்லுவது பாதுகாப்பாக இருக்கும். "ஒரு டைனோஸரால் நாங்கள் உண்ணப்படப்போகிறோம்" என்று நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்லாதீர்கள். இல்லை, அந்த வழியில் அல்ல, இன்று இரவு இந்த அரங்கத்தின் வழிகள் தெளிவாக இருக்கும் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். "இடிபறவை" என்று அழைக்கப்படுகிற ஒரு பழங்காலக் கதையை அமெரிக்க மலைவாழ் மக்கள் பாதுகாத்தனர். மின்னலினால் அடிபட்ட ஒரு பெரிய பறவையைப் பற்றி அந்தக் கதை கூறினது. அவர்கள் அதை மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்தபொழுது, கழுகுகள் அதன் எழும்புகளை தெளிவாகப் பிடுங்கியிருந்தன. அந்த இறகின் அகலம் 7 மீட்டர்கள் மற்றும் அதன் தலையின் பின்பகுதியானது எழும்பு முகடுள்ள ஒரு தலையாகவும் இருந்தது. இந்த நாளில் இந்திய ஜெபங்கள் ஒன்றிணைந்து இருக்கின்றன, அவைகளுக்கு மேல் ஒரு பறக்கும் பல்லியின் தலை இருக்கிறது. வாலின் விளக்கில் ஒரு கழுகை ஹென்றி ஃபோர்டு வைத்தார். அது ஒரு இடிபறவையாக இருந்தது. அது ஒரு பறக்கும் பல்லியாக இருந்திருக்கவேண்டும். நீங்கள் சரியில்லாமல் இருந்தீர்கள், ஹென்றி. தற்பொழுது அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் இருக்கிற அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜெக்குயிஸ் மர்க்குயிட் மற்றும் ஜோலியட் என்கிற கண்டுபிடிப்பாளர்கள் நிறுத்தினார்கள். இல்லினாஸ்ஸின் ஆல்ட்டனில் ஆற்றின்மேலுள்ள செங்குத்தான பாறையில் ஒரு அவலட்சணமான பறவையானது வர்ணம் தீட்டப்பட்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள் என்று அறிவித்தார்கள். அது ஒரு பியாஸ பறவை (Piasa bird) என்று இந்தியர்கள் சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய தலைவன் அதைக் கொன்றான். பல ஆண்டுகளாக அவர்கள் அந்தப் படத்திற்கு வர்ணம் தீட்டினார்கள். அவர்கள் இறுதியாக ஒரு பெரிய உலோக நினைவுப்பொருளை வைத்தனர். நான் அளவைக் காண்பிப்பதற்காக படத்தில் இருக்கிறேன்; அந்த உலோக நினைவுப்பொருள் விழுந்துவிடும் என்ற பயத்தினால் அவர்கள் பின்பு அதை கீழே கொண்டுவந்தனர். அவர்கள் சமீபத்தில் பியாஸ நினைவுப்பொருளை மறுபடியும் வைத்திருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். இல்லினாஸ்ஸின் ஆல்ட்டனுக்கு நீங்கள் செல்லுவீர்களானால், வியாபார அடையாளங்களுடன் "பியாஸா" என்ற வார்த்தை இருப்பதைப் பார்பீர்கள். அந்தப் பியாஸ பறவை எதுவாயிருந்தாலும், அது அங்கே மேலே மிகவும் பிரபலமாக இருக்கிறது. "சகோதரர் ஹோவிந் அவர்களே, டைனோஸர்கள் பற்றி நீங்கள் பேசுவது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள். ஒரு காரணம் என்னவெனில், அவைகளைப் பற்றி மக்களை ஏமாற்றுவதற்காக சாத்தான் பொய்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவர்கள் உண்மையைப் பாதுகாப்பதற்கான நேரமாக இது இருக்கிறது. டைனோஸர்கள் எங்கே பொருந்துகிறது என்று கிறிஸ்தவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நற்செய்தியை அறிவிக்கும் ஒரு பெரிய கருவியாக இருக்கிறார்கள். நீங்கள் டைனோஸர்களைப் பற்றிப் பேசும்பொழுது சிறுவர்கள் உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். "அவரே வழிகளின் தலைவராக இருக்கிறார்." அப்பொழுது தேவன் மகிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். லேவியாதான் பற்றி இந்த வேதாகமம் மேலும் பேசுகிறது. அது ஒரு முழுமையான வேறொரு விவரமாக இருக்கிறது. அந்த லேவியாதான் பற்றி இன்னொரு நேரத்தில் நாங்கள் விவரிப்போம். அடிப்படையில், தேவன் ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் சிருஷ்டித்தார். டைனோஸர்கள் மக்களைச் சுற்றிலும் வாழ்ந்திருக்கின்றன, மேலும் மக்கள் அவைகளைக் கொன்றார்கள். அங்கே இன்னும் சிலவைகள் உயிருடன் இருப்பதுபோல் காணப்படுகிறது, மற்றும் டைனோஸர்கள் பற்றிக் கவலைப்படுவதிலிருந்து கிறிஸ்தவர்கள் நிறுத்த வேண்டியிருக்கிறது. தேவனுடைய மகிமைக்காக அவைகளைப் பயன்படுத்த நாம் ஆரம்பிக்க வேண்டும். நாம் அதைப்பற்றி அதிகமாக அடுத்தக் கூட்டத்தில் பார்போம். (3ஆ கருத்தரங்கம் முற்றுப்பெருகிறது) 3இ கருத்தரங்கம் ஆரம்பம் - டாக்டர் கென்ட் ஹோவிந் - தமிழ் (Tamil) - மொழிபெயர்ப்பு: D. மந்திரி குமார், M.Sc. .... உயிருடன் இருக்கும் டைனோஸர்களைப் பார்த்தோம் என்று உரிமை கொண்டாடும் மக்களுடனான பேட்டிகள்.--- அன்பானவர்களே, நான் கென்ட் ஹோவிந். நான் ஸாண்டி மன்ஸி (Sandy Mansi) என்பவருடன், நியூ ஹேம்ஷியரின் வின்ஜெஸ்டரில் (The Antique Ouest) பழங்கால மரத்தாலான இருக்கையில் கேள்வி கேட்பதற்காக இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். உங்களை மறுபடியும் பார்ப்பது நல்லது ஸேண்டி அவர்களே. நான் உங்களை 1992 ஆம் ஆண்டின் பின்பகுதியில் பார்த்தேன்; ஸேண்டி என்பவர் ஜேம்ப் என்னும் பிராணியைப் பார்த்தவராக இருக்கிறார். அவர்களின் படமானது ஜோஸப் W. ஸர்ஸினிஸ்கி (Joseph W. Zarzynski) என்பவரின் புத்தகத்தின் அட்டையின்மேல் காணப்படுகிறது. நீங்கள் அதைப் பார்த்தபோது, நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்றும் அதைப் பற்றிய சில விபரங்களை எங்களூக்குத் தயவாகச் சொல்லுங்கள். நான் ஜேம்ப்லைன் ஏரியின் அருகில், வெர்மொண்ட்டின் மேல்பக்கத்தில் இருந்தேன்........ எனக்குத் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தவருடன் (தற்பொழுதுஎன்னுடைய கணவர்) மற்றும் எனது பிள்ளைகளுடன் இருந்தோம். நாங்கள் அந்த ஏரியைப் பரிசோதித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தப் பகுதியில் வளர்ந்தவர்கள். நாங்கள் ஏரிகளை பரிசோதித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு நிம்மதி மற்றும் அமைதியைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். ஒரு கேமராவை எடுப்பதற்காக என்னுடைய கணவர் காருக்குத் திரும்பிச் சென்றிருந்தார். அவர் அங்கே சென்றிருந்த நேரத்தில் அந்த ஏரியில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. நான் வெளியே பார்த்து, அது நீந்துவதற்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளியாக இருக்கும் என்று நான் நினைத்தேன்; அது ஒருவேளை நீந்தும் கருவி அல்லது ஏதோ ஒன்றாக இருக்கலாம். அதன்பின்பு அந்தத் தலை மற்றும் கழுத்தானது தண்ணீரின் மேற்பரப்பிற்குக் கீழிலிருந்து வெளிப்பட்டது. அந்தத் தலை மேலே வந்தது, அதன்பின்பு கழுத்து மற்றும் பின்பாகமானது மேலே வந்தன - மேலும் அது மீன் அல்ல என்று நான் அறிவேன். அது ஒரு வாத்து என்று அவர்கள் நினைத்ததாக யாரோ ஒருவர் உங்களுக்குச் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். ஒருவேளை, அது ஒரு டன் எடையுள்ள ஒரு வாத்தாக இருக்கலாம்! நீங்கள் ஆலயத்தின் அருகில் இருந்தபோது, நியூ ஹேம்ப்ஷியரின் டப்ளின் என்ற இடத்தில் நான் பேசுவதைக் கேட்க வந்தீர்கள். என்னுடைய மேஜையின்மேல் என்னுடைய அனைத்து டைனோஸர்களையும் வைத்திருந்தேன், நீங்கள் இந்த ஒன்றை ஜேம்ப் என்று உடனே எடுத்தீர்கள். ஆனால் நீங்கள் பார்த்ததற்கும் அதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னீர்கள். ஆம், நான் பார்த்த அந்தப் பிராணியின் தலையானது நீளத்தில் அந்தளவுக்கு இல்லை. ஒரு குதிரையின் தலைபோன்று அதன் தலையானது உருவத்தில் இருந்தது. அதன் கழுத்து இந்தளவுக்கு நீண்டதாக இல்லை. மூன்று அல்லது நான்கு வித்தியாசமான நீந்தும் டைனோஸர்களின் எழும்புகளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே இருப்பது குரோனோஸர் (Cronosaur), அதற்குப் பெரிய கழுத்து இருக்கிறது; நீங்கள் பிடித்துக்கொண்டிருக்கிற பெலிஸியோஸர்...... அதற்குப் பிறகு அங்கே இலாஸ்மோஸர் (Elasmosaur) இருக்கிறது, அதற்குக் குட்டையான கழுத்து இருந்தது, மற்றும் அதன் தலையானது உடலின் வலதுகோணத்தில் இருக்கிறது. உண்மையிலே உடலின் நேர்க்கோட்டில் அது இல்லை. அங்கே மேலும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மற்றவைகள் இருக்கலாம். இந்த உருவத்தைக் கேமராவில் அவர்கள் பார்க்கத்தக்க விதத்தில் நாம் இதை அனுசரித்து வைப்போம். இந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன், ஆனால் அதிகக் குட்டையான ஒரு கழுத்துடன், அல்லது அந்தக் கழுத்தானது தண்ணீரின் வெளியே அனைத்தும் காணப்படாததாகவும் இருக்கலாம். இந்த நிகழ்ச்சியானது 1977 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்தது. அதை மேலும் பார்த்தோம் என்று உரிமைகொண்டாடுகிற மக்களை நீங்கள் சந்தித்து அல்லது பேசின மற்ற மக்கள் எத்தனைபேர்களை உங்களுக்குத் தெரியும்? அதைப் பார்த்தவர்களில் 6 வித்தியாசமான மக்களிடம் நான் பேசியிருக்கிறேன். எங்களுடைய அனைத்துத் தனிக்கணக்குகளும், மிகவும் மிகவும் ஒன்றுபோலிருக்கிறது. எனவே நாம் அனைவரும் அதிக ஆர்வமுள்ளவராக இருக்க முடியாது. நாம் உண்மையிலே பார்க்காத, மிகவும், மிகவும் ஒன்றுபோல் இருக்கிற ஏதோ ஒன்றின் கணக்குகளைப் பற்றி நாம் அனைவரும் தனித்தனியே அறிவிக்க முடியாது. தலை மற்றும் கழுத்தின் வடிவம், அதனுடைய மாபெரும் அளவாக இருக்கிறது. நீங்கள் அதை எவ்வளவு நேரம் கவனித்தீர்கள்?....... எவ்வளவு நேரம் அதைச் சொல்லுவீர்கள்? ஒருவேளை கலக்கம் ஏற்பட்டதிலிருந்து அது கீழே சென்றதுவரையில், ஒருவேளை எட்டு நிமிடங்களாக இருக்கலாம். எட்டு முதல் 10 நிமிடங்கள், சரியா. நாம் ஒருவருடத்திற்கு முன்பு அதைப்பற்றிப் பேசினோம் என்று நீங்கள் சென்றமுறை எனக்குச் சொன்னீர்கள்,...... அது முதலாவதாக மேலே வந்தபொழுது, அது பல திசைகளில் பார்த்துக்கொண்டிருந்தது, அது சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தது. அது மேலே வந்தபோது, அது எனக்கு இந்தப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது, அதன்பின்பு அது தண்ணீரைவிட்டு வெளியே வந்தபோது, அது சுற்றிலும் பார்த்தது, நான் ஒரு போட்டோ எடுத்தபோது, அது பதட்டமடைவதுபோன்று காணப்பட்டது. அதன் இயக்கத்தை அதிகப்படுத்த அது ஆரம்பித்துக்கொண்டிருந்தது, மேலும் அது தனது தலையை அதன் பின்பக்கமாகத் திருப்பியிருந்தது. நான் போட்டோ எடுத்தபோது அது இருந்தது, அதன்பின்பு அது திரும்பி தண்ணீருக்குக் கீழே சென்றது. அது கீழே இதுபோன்று செல்வதற்கு ஆரம்பித்தது, மற்றும் அதன்பின்பு அது தனது தலையைத் தண்ணீருக்குக் கீழே வைத்துக்கொண்டது. அது முற்றிலும் தண்ணீருக்குக் கீழே சென்றபின்பு, ஒரு படகு வருவதைக் காதில் கேட்டேன். நான் ஒரு படகு வருவதைக் காதில் கேட்டேன். அந்தப் படகை நான் பார்க்கக்கூட இல்லை, ஆனால் அது வருவதை நான் காதில் கேட்டேன். அந்தப் படகு வருவதை நான் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு படகு வந்துகொண்டிருந்தது என்பதை அது அறிந்துகொண்டது. ஆப்பிரிக்காவில் இருப்பதைப் போன்றுள்ள ஒன்றை, நான் பேட்டி கண்ட பல மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்,...... பூர்வீகக்குடிகளுக்கு காதில் கேட்கும் நுட்பம் அதிகம் என்று அவர்கள் உரிமைகொண்டாடுகிறார்கள். நீங்கள் வருவதை அவைகள் காதில் கேட்க முடியும் மற்றும் அதன்பின்பு அவைகள் தண்ணீருக்குக் கீழே மறைத்துகொள்ளூம். அங்கே உள்ள சதுப்பு நிலத்தின் மேல் டைனோஸர்கள் இருக்கின்றன என்று சொல்லும் மிஷனிரி நண்பர்கள் எனக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள். நிச்சயமாக, அது இருப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவன் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்தார், அவர் பலவைகளையும் சிருஷ்டித்தார். ஒரு சிருஷ்டிப்பாக இருக்கவேண்டிய ஏதோ ஒன்றாக அது இருக்கிறது. ஒரு விலாங்கு மீனிலிருந்து வந்த ஏதோ ஒன்றாக அது இல்லை. அவர் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்தார், அவர் பலவைகளையும் சிருஷ்டித்தார். உங்களது படமானது மற்ற இடங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது, அதேபோன்று ஜோஸப் என்பவரின் புத்தகத்தின் அட்டைப்படத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தின் டைம் பத்திரிக்கையில் (Time Magazine) இருந்தது. "விடைகாணாத இரகசியங்கள்" (Unsolved Mysteries) என்கிற கடந்த வாரத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்தீர்களா? மூன்றுமுறை தொலைக்காட்சியில் அது காண்பிக்கப்பட்டது. முதல்முறையாக சென்ற 1992 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் காண்பித்தார்கள். அதன்பின்பு மறுபடியும் சமீபத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காண்பித்திருக்கிறார்கள். அதை அவர்கள் மறுபடியும் காண்பித்தார்கள். எனவே நீங்கள் இப்பொழுது ஒரு திரைப்பட நட்சத்திரமாக இருக்கிறீர்கள். இல்லை. பரிணாமம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்று போதிக்கிறவர்கள் அங்கே இருக்கிறார்கள். அந்த டைனோஸர்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன என்று கூறுகிறார்கள். உங்களுக்குத் தெரிகிறபடி நான் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கிறேன், மற்றும் நான் அறிவியல் ஆசிரியராக 15 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். சில டைனோஸர்கள் இன்னும்கூட வாழ்கின்றன என்ற ஒரு உறுதியான கருத்து என்னிடம் உள்ளது, இந்த உலகத்திற்கு பல மில்லியன்கள் ஆண்டுகள் ஆகவில்லை. டைனோஸரின் ஏதோ ஒரு வகையை நீங்கள் பார்த்ததைச் சிறப்பாக விவரிக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்லுவீர்களா? தண்ணீரில் வாழ்வது? நான் ஒரு டைனோஸரைப் பார்த்தேன். நீங்கள் ஒரு டைனோஸரைப் பார்த்துக்கொண்டிருந்ததுபோன்று நீங்கள் உணர்ந்தீர்களா? நான் பார்த்தேன் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு டைனோஸரைப் பார்த்தேன் என்று எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும், சரியா. நான் ஒரு டைனோஸரைப் பார்த்தேன். நீங்கள் ஒரு படம் மட்டும் ஏன் எடுத்தீர்கள்? என்கிற இந்தக் கேள்வியானது சில மக்களின் மனங்களில் வருகிறது. ஏனெனில் நான் எதையுமே இழக்க விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் அதைக் கவனித்துக்கொண்டிருந்தீர்கள். நான் அதைப் பார்ப்பதில் மிகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். நான் கேமராவைக் கொண்டுவந்தேன். நான் அந்த ஒரு போட்டோவை எடுத்துவிட்டு அதை கீழே வைத்தேன். நான் எதையுமே இழக்க விரும்பவில்லை. நான் மொத்தத்தில் பயத்தில் இருந்தேன். சரியா? என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதின்மேல் நான் பயந்திருந்தேன், மற்றும் நான் அந்த ஒரு போட்டோவை ஏன் எடுத்தேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அது ஒரு எதிர்ச்செயலாக இருந்தது; என்னுடைய கணவர் அந்தக் கேமராவை என்னிடம் ஏற்கனவே கொடுத்திருந்தார். பிள்ளைகளின் படங்களை எடுப்பதற்காக அவர் அந்தக் கேமராவை எடுக்கச்சென்றிருந்தார். அது அந்தப் பிராணியானது காணப்படுவதற்கு முன்பாக இருந்தது. அங்கே அவர் திரும்பவும் வரும்வரையில் எது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது. அதன்பின்பு அந்தக் கேமராவை அவர் என்னிடம் கொடுத்தார். அப்படி அவர் எனக்கு அந்தக் குன்றில் உதவிசெய்ய முடிந்தது. நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். மற்றும் நான் எனது முழங்கால்களினால் இறங்கினேன், மற்றும் அதன்பின்பு அந்தக் கேமராவை நான் மேலே எடுத்தேன். அந்த ஒரு போட்டோவை நான் எடுத்துவிட்டு நான் அதைக் கீழே வைத்தேன். நான் ஏறத்தாள கீழே விழுந்தேன். நீங்கள் இருபது படங்கள் எடுத்திருக்க முடியும். சரி. முற்றிலும் சரி. ஆனால் நான் அதைப் பார்க்க விரும்பினேன். என்னுடைய கண்கள் பார்த்ததை என்னுடைய மனது விவரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இது என்னவாக இருக்கிறது? என்று நான் சிந்திக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். உங்களை நீங்களே நிதானிக்க இயலாத நிலையில் நீங்கள் ஒரு நிலைக்குச் சென்றடைகிறீர்கள். நீங்கள் பயத்தில் மட்டுமே நிற்க முடியும். நல்லது, மிகவும் மேலானது. வேறு ஏதாவது இருக்கிறதா? வேறு ஏதாவது இதுபோன்ற கேள்விகள் உங்களிடம் கேட்கப்பட்டுள்ளதா? உங்களிடம் பேட்டி காண்கிறவர்களில் பெரும்பாலான மக்கள் பரிணாமத்தை நம்புகிறவர்களாக இருக்கிறார்களா? ஆம். அதைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள். நான் அதை 100% உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். உங்களின் படத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதித்ததிற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். என்னுடைய விளம்பரச் சுவரொட்டிகளில் ஒன்றாக அதை நான் வைக்கிறேன். அழகானது. வித்தியாசமான மக்களிடமிருந்து பெறப்பட்ட சில படங்கள் என்னிடம் இருக்கின்றன. வேதாகமத்தில் மக்களின் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதே என்னுடைய நோக்கமாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையாக வேதாகமம் இருக்கிறது. அங்கே ஸேண்டியினுடைய படம் இருக்கிறது. ஏராளமான காட்சிகள், பத்திரிக்கைகள் மற்றும் பல சமர்ப்பித்தவைகளினால் நீங்கள் விஷேசமாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே வின்ஜெஸ்டரில் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறீர்கள்? இருபது ஆண்டுகள். இருபது ஆண்டுகள்; எனவே, ஜேம்பை போட்டோ எடுத்ததிற்க்காக ஒரு பிரபலமானவராக இருக்க நீங்கள் நினைக்கவில்லையா? இல்லை; உண்மையைச்சொல்ல வேண்டுமானால், அதை விளம்பரப்படுத்தவே நான் விரும்பவில்லை; நான் அதை இரண்டு ஆண்டுகள் ஒரு இரகசியமாகவே வைத்திருந்தேன். அதன்பின்பு அதை அறிவியல் வெளியீடுகளுக்கு மட்டும் அறிவிக்க எனக்குத் தேவைப்பட்டது. அதை விளம்பரப்படுத்த செய்தியாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டேன், ஏனெனில் அவர்கள் என்னைத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் மிகவும் விடாப்பிடியாக இருந்தார்கள்....... அதை நான் எப்பொழுதாவது பார்த்திருந்தால், நான் அதைச்செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டேன். எனவேதான் அதன்மேல் ஒரு தனிப்பிரசுர உரிமையை நான் போடவேண்டியிருந்தது. எனவே சில கட்டுப்பாடும் மற்றும் பாதுகாப்பும் என்னால் வைத்திருக்க முடிகிறது. அதை அவர்கள் பயன்படுத்துவதற்கு என்னுடைய அனுமதியை அவர்கள் பெறவேண்டியிருக்கும். அது அழகாக இருக்கிறது; ஒரு நல்ல விற்பனையாக இருக்கிறது. இப்பொழுது மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், " இந்தப் பிராணிகள் அங்கே ஏராளம் இருக்குமானால், ஏன் அதிகமான படங்கள் நமக்குக் கிடைப்பதில்லை?" அவர்களிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன், " உடையும் ஒரு காரை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா?" "நிச்சயமாக" என்று அவர்கள் சொல்லுகிறார்கள். "அது நிகழ்கிற ஒரு படத்தை எனக்குக் கொடுங்கள்" என்று நான் சொல்லுகிறேன். ஒரு கார் உடைகிறதின் ஒரு படத்தை நீங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை, இருப்பினும் ஆயிரக்கணக்கான கார்கள் உடைவது நிகழ்கிறது. அது ஒரு சில நொடிகளில் நிகழும் ஒரு கடந்துசெல்லும் நிகழ்வாகும், மேலும் அது மிகவும் காலதாமதமாகும் வரைக்கும் படங்கள் எடுப்பதற்கு நீங்கள் நினைப்பதில்லை. நீங்கள் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது தகவல் இருந்தால் எனக்கு அனுப்புங்கள், ஏனெனில், ஒருவேளை மக்கள் எல்லா நேரமும் உங்களிடம் வந்து, "நான் அதைப் பார்த்தேன்" என்று சொல்லுவார்கள். ஆம். அதைப்பற்றிய கோப்பு ஒன்றை நான் வைத்திருக்க விரும்புகிறேன். ஒரு பட்டியலை எனக்கு அனுப்புங்கள். முற்றிலும் சரி. (ஸேண்டி மன்ஸியுடன் டாக்டர் ஹோவிந்தினுடைய பேட்டி தொடர்கிறது.) இங்கே சுவற்றின் மேலே ஜேம்ப் இருக்கிறது. அந்த வயதான பண்பு மிக்கவர் வந்து அதைப்பார்த்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள். இங்கே உள்ள இந்த இடத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். ஒரு வயதான மனிதர் உள்ளே வந்தார். அவர் அந்தப் படத்தை மிகவும் உற்றுப்பார்த்தார், மேலும் இது எங்கு இருந்தது? என்று என்னிடம் கேட்டார். ஜேம்ப்லைன் ஏரியில் இருந்த "ஜேம்ப்" என்று நான் அவரிடம் கூறினேன். இதைப் பற்றி அவர் ஒரு ஆத்துமாவுக்குக்கூட சொல்லவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டே போனார், மேலும் அவருக்கு 80 வயதிற்கு மேல் இருக்கும். அவருக்கு எண்பத்து ஒன்பது அல்லது எண்பத்து ஏழு வயதிருக்கும் என்று அவர் சொன்னார். அவர் ஒரு இளைஞராக இருந்தபொழுது, மற்றும் தன்னுடைய தாத்தாவுடன் மீன் பிடிப்பதற்காகச் ஜேம்ப்லைன் ஏரிக்குச் சென்ற ஒரு நேரத்தை என்னிடம் சொன்னார். அது அந்தப் பகுதியில் பல்வாகா குடாவின் (Bulwagga Bay) மேல் பகுதியாகும். அவர் அந்த ஏரியின் அருகில் வளர்ந்தவரா? ஆம், அவர் அந்த ஏரியின் அருகில் வளர்ந்தவர் ஆவார். அவரும் அவருடைய தாத்தாவும் மீன் பிடிப்பதற்காக வெளியே இருந்தார்கள், மற்றும் இந்த மிகப்பயங்கரமான பெரிய பொருள் தண்ணீருக்கு வெளியே வந்தது. அது ஜேம்ப் என்று அவருடைய தாத்தா அவருக்குச் சொன்னார், மற்றும் அதை அவர் ஒருவருக்கும் சொன்னதே இல்லை. ஏனெனில் மக்கள் சிரித்து மற்றும் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று மட்டுமே நினைப்பார்கள். அதைப் பற்றி ஒரு ஆத்துமாவுக்குக்கூட அத்தனை ஆண்டுகளில் அவர் ஒருவருக்கும் சொல்லவே இல்லை. அதைச் சொன்ன முதல் நபர் நான் என்று அவர் சொன்னார். அவர் , " நான் பைத்தியக்காரராக இருக்கவில்லை மற்றும் எனது தாத்தாவும் பைத்தியக்காரராக இருக்கவில்லை. உயிருள்ள, சுவாசிக்கிற ஒரு டைனோஸரை நாங்கள் பார்த்தோம்." என்று என்னிடம் சொன்னார். அல்லேலூயா! என்று என் இருதயம் சொன்னது. ஆம். அதிகமான சாட்சிகள்; முற்றிலும் சரி. தற்பொழுது மற்ற மக்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள், மற்றும் உங்களிடம் வந்து சொல்லுகிறார்கள்.......? ஆம், நான் அதைப் பாராட்டுகிறேன், ஏனெனில் நான் வெறிபிடித்தவர் அல்ல என்ற அடையாளத்தை அது கொடுக்கிறது. கதையை நான் கண்டுபிடிக்கவில்லை. இதைத்தான் நான் பார்த்தேன், மற்றும் இதைத்தான் அவர்கள் பார்த்தார்கள். மேலும் நாங்கள் அனைவரும் சிறிதளவு பார்த்தோம், மற்றும் சில நாளில் ஒருவேளை ஏரி தன்னுடைய இரகசியத்தை விட்டுவிடும்; நாம் அதைக் கொன்றுவிடக்கூடாது. அதைக் கொன்றுவிடாதீர்கள்; அது சரியாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் நன்றி. இங்கே உங்களின் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், நாங்கள் உங்களைப் போகவிடவேண்டும். (அடுத்துவருகிற வீடியோவானது லீ ஸ்மித் (Lee Smith) என்பவரால் நியூயார்க்கின் அருகில் இருந்து ஜேம்ப்லைன் ஏரியைப் பார்த்தவாறு எடுக்கப்பட்டதாகும்.) .....தாமதியுங்கள்.......(வீடியோ ஆரம்பமாகிறது - முதலில் ஒலி இல்லை) இது ஒரு சுறா மீன்! அதன்மீது சில வெள்ளைப்பொருட்கள் இருக்கின்றன! அது வெளியே வந்துகொண்டிருக்கிறது - தண்ணீரிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறது. ஏய், அது கீழே சென்றுகொண்டிருக்கிறது. அது தன்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லுகிறது. அப்பா, அது அங்கே கீழே சென்றது. பைனாக்குலர்களில் அவைகளை என்னைப் பார்க்கவிடுங்கள். ஹு? பைனாக்குலர்களில் அவைகளை என்னைப் பார்க்கவிடுங்கள். அது ஒரு சுறா மீனா? இல்லை, அது சுறா மீன் அல்ல. ஏதோ ஒன்று அங்கே மேலே வந்தது. அப்பா, நான் அதைப் பார்த்தேன். ஆம், அது கீழே சென்றது. சற்று நேரத்திற்கு முன்பு நாம் "ஜேம்பைப்" பார்த்தோம் என்று நான் நினைக்கிறேன். ஜேம்ப் என்றால் என்ன? ஜேம்ப்லைன் ஏரியின் மிகப்பயங்கரமான கடல் பிராணியாகும். கிலேடன், ஆனால் இப்பொழுது அது சென்றுவிட்டது. நீண்ட நேரம் நான் பைனாகுலர்களின் வழியாக நான் பார்த்திருக்கக்கூடாது; அந்தக் கேமராவை நான் வைத்திருந்திருக்க வேண்டும். அது ஒருவேளை அதே வழியில் கீழே சென்றது; வெளியே அங்கு நீண்ட வழியில் அது ஆரம்பித்தது. அந்தப் படகு சென்றபொழுது, அது அந்தக் கடல் அடையாளத்தைச் சற்றுத் தாண்டிச்சென்றது. எனக்குத் தெரியும். நான் அதைப் பைனாக்குலர்களில் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு பெரிய மரக்கட்டை என்று நான் நினைத்தேன். அந்த அடையாளத்திலிருந்து அது முழுவதும் உள்ளே சென்றது, அதன்பின்பு அங்கே அது கீழே அடியில் சென்றது. (லீ ஸ்மித்தின் வீடியோ முற்றுப்பெருகிறது; அறிவியல்பூர்வமான வீடியோ ஆரம்பமாகிறது.) இது மிகப்பெரிய பத்து கால்கள் உள்ள ஆர்கிடியூதிஸ் டக்ஸ் (Architeuthis Dux) வகையைச் சேர்ந்த ஒரு மென்னுயிரியாகும். நியூபவுண்ட் லேண்டின், போன் விஸ்டா குடாவில், பிரைனர்ஸ் கோனர்ஸ் தீவிற்கு அருகில், 1979 ஆம் ஆண்டு, நவம்பர் 22ஆம் தேதி இது கடற்கரைக்கு வந்தது. இது ஒரு வளர்ச்சியடையாத பெண் மென்னுயிரியாகும். இது ஒரு சிறிய பெண் மென்னுயிரியாகும், ஆனால் இது மிகப்பெரிய பத்து கால்கள் உள்ள மென்னுயிரி வகையாகும். இந்த மிகப்பெரிய பத்து கால்கள் உள்ள மென்னுயிரியானது அதிகபட்சமாக சுமார் 46 மீட்டர்கள் அளவுள்ள ஒன்றாக இருக்கும்வரைக்கும் வளர்கிறது என்று நான் நம்புகிறேன். இது 6 மீட்டர்கள் நீளம் எனில், இது ஏறத்தாள 8 முறைகள் இதைவிட மொத்த நீளத்தில் நீளமாக இருக்கிறது. அது ஒரு பெரிய பத்து கால்கள் உள்ள மென்னுயிரியாகும். (வெவ்வேறு பதிவுசெய்யப்பட்ட சாட்சி நாடாக்கள் மிகப்பயங்கரமான கடல் பிராணிகள் இருக்கின்றன என்று கணக்கிடுகின்றன.) 1976ஆம் ஆண்டில், கார்ன்வாலின் லிஸ்ஸர்டு பாய்ண்ட்டிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு மீனவர்கள்,....... ஜார்ஜ் வெனிக்கன் மற்றும் ஜான் காக்ஸ் ஆகிய இவர்களும் ஒரு மிகப்பயங்கரமான பிராணியைச் சந்தித்தனர். அது ஒருமுறை கடற்கரையிலிருந்து 45 முதல் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளே வந்தது. ஒரு படகு தலைகீழாக இருப்பது போன்று எனக்குக் காணப்பட்டதை நான் பார்த்தேன். நாங்கள் அதை ஆராய்ச்சிசெய்வதற்காக மேலே சென்றோம். நாங்கள் அதை நெருங்கிசென்றபொழுது, அது தலைகீழான ஒரு படகு அல்ல என்பதை எங்களால் பார்க்க முடிந்தது. இதற்கு முன்பு மற்றவர்கள் பார்த்திருந்த ஏதோ ஒன்றாக, மிகவும் இருட்டான கலரில் அதன் பின்பக்க முதுகானது மென்மையானதாக அது இருந்தது. அது 4 முதல் 5 மீட்டர்கள் நீளமுள்ளதாகவும்; கடலுக்கு மேலே சுமார் 1 மீட்டர் உயரே எழும்புவதாகவும் இருந்தது. அந்தக் கடலானது மட்டமாக இருந்தது; அமைதியான நாள். அந்தக் கடலில் எந்தவித கலக்கமுமே அங்கே இல்லை. நாங்கள் நெருங்கிச் சென்றோம், மற்றும் நான் நெருங்கி நின்றேன். அது மேலே எழும்பிக்கொண்டிருந்தது, தண்ணீருக்கு வெளியே மேலே எழும்பிக்கொண்டிருந்தது. படகு நின்றிருந்த இடத்தில், படகின் பின்புறத்திலிருந்து சுமார் 1 மீட்டர் மட்டுமே தொலைவில் அது இருந்தது அதன் தலையானது தண்ணீரிலிருந்து வெளியே கூர்ந்து பார்த்தது! நான் நினைத்தேன்: கடலில் என்னுடைய 40 ஆண்டுகளில் நான் இதுபோன்ற ஒரு பொருளை ஒருபோதும் பார்த்திராத ஒன்றாக இது இருக்கிறது. அது படிப்படியாக தண்ணீரின் உள்ளே மூழ்கினது; மற்றும் அதன்பின்பு அது மறைந்துவிட்டது. அதைப்பற்றி பேசினபின்பு, எங்களால் அதைப்பற்றி நினைக்க முடிந்த ஒரு காரியம் எதுமட்டும் என்றால், அது ஒரு வரலாற்றுக்கு முந்தின விலங்கு போன்று அதிகம் இருக்கிறது. திறந்த வரிசை நிகழ்ச்சி ஒன்றை நாங்கள் வைத்திக்கொண்டிருக்கிறோம்...... தெரேஸா, நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? நான் நன்றாக இருக்கிறேன், உங்களூக்கு நன்றி. இன்று நாங்கள் ஒகோபோகோவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அந்தப் பகுதியில் இருக்கிற பல மக்கள் அதைப் பார்த்து இருக்கிறார்கள். இந்தக் கதை பல ஆண்டுகளாகச் செல்லுகிறது, மேலும் நாம் சில வல்லுனர்களிடம் பேசிக்கொண்டிருப்போம். அர்லீனி கல் (Arlene Gull) நம்மிடம் வந்துகொண்டிருக்கிறார். அர்லீன் அதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார். அது சரியாக இருக்கிறது. தற்பொழுது நாம் தொலைபேசி வரிசைகளுக்குச் செல்லுவோம். வரிசை இரண்டு, காலை வணக்கம். ஹலோ, அங்கே, திரு. பால்ரிட்ச் (Mr.Palridge) அவர்களா? ஆம், சொல்லுங்கள். ஒகோபோகோவைப் பற்றி அறிய நீங்கள் விரும்பினீர்களா? நான் நிச்சயமாக விரும்பினேன். ஆம், சரி, எனக்கு ஒரு வாடகைக் கார் இருந்தது மற்றும் நான் ஒரு பிரயாணியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றேன். நான் அபோட் தெருவிற்குக் கீழே வந்துகொண்டிருந்தேன், மற்றும் சுமார் இங்கே இருப்பதுபோன்று நான் அங்கே சென்றேன். நான் ஏரியை நோக்கிப் பார்த்தேன். நான் ஆச்சர்யமடைந்தேன். இந்தப் பொருள் தண்ணீரின் வெளியே வருவதை நான் பார்த்தேன். அது ஒரு குதிரையின் தலைபோன்று அதின்மேல் ஒருவகைக் கொம்புகளூம் இருந்தன. நல்லது, அது மிகவும் பெரியதாக இருந்தது; அங்கே மேலே நின்றுகொண்டிருந்தது. ஆச்சர்யமாக; ஒரு பெரிய வலுசர்ப்பத்தைப் போன்று இருந்தது. அப்பொழுது இன்னொருவர் எனக்குப் பின்னால் மேலே வந்து, " நீங்கள் எதைப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " அங்கே மேலே ஒகோபோகோவைப் பார்க்கிறேன்." என்று நான் சொன்னேன். "எங்கே? எங்கே?" என்று அவர் கேட்டார். "அங்கே மேலே" என்று நான் சொன்னேன். காரின் கதவானது திறந்து இருந்திருக்கிறது. நான் கீழே இறங்கி சற்று தூரம் நடந்தேன் - மற்றும் அது மறுபடியும் தண்ணீரின் உள்ளே சறுக்கிவிட்டது. "அங்கே பெரிய அலைகளைப் பாருங்கள்" என்று அவர் சொன்னார். மேலும் படகின் சாய்விற்கு அருகில் அங்கே கீழே செல்கிற, பெரிய அலைகள் அனைத்தையுமே எங்களால் பார்க்க முடிந்தது. மேலும் அவைகள் மறைந்துவிட்டன. அப்பொழுது நான் ஆச்சர்யமனைத்தையும் பெற்றுக்கொண்டேன். நான் காருக்குள் வந்தேன். வில்லோ சத்திரத்திற்கு நான் இழுக்கப்பட்டேன் மற்றும் நான் மக்களிடம் சொன்னேன். அவர்கள் அனைவரும் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். "சற்று நேரத்திற்கு முன்பு ஒகோபோகோவைப் பார்த்தேன்!" என்று சொன்னேன். "நீங்கள் குடித்துவருகிற போதைப்பொருள் எது?" என்று அவர்கள் கேட்டார்கள். வரிசை நாங்கு, தயவு செய்து சொல்லுங்கள். ஹலோ ஜான், நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? நான் நன்றாக இருக்கிறேன். நல்லது. உங்களின் பெயரை என்னிடம் கொடுக்கப்போகிறீர்களா? இல்லை, நான் கொடுக்கவில்லை, சரியா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிலார்சென் அருகில் நான் ஒகோபோகோவைப் பார்த்தேன். காற்றின் மேலே உங்களது பெயரைக்கொடுக்க நீங்கள் விரும்பவில்லையா? இல்லை, நான் விரும்பவில்லை. சில மக்களைத் தெளிவாகக் கூறினீர்கள். ஆ, ஆம். நீங்கள் சற்று வெறிபிடித்தவர் என்று அவர்கள் நினைப்பார்கள் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? அதன்பின்பு சில தெரியாதவர்களிடம் இருந்து சில தொலைபேசிகள் எனக்கு வந்தன. தினமும் அவைகள் எனக்கு வருகின்றன; மற்றும் அதைத்தான் அவர்கள் எனக்குக் கட்டணமாகக் கொடுக்கின்றனர். நல்லது, அவர்களுக்காக கட்டுவதை நான் பெற்றுக்கொள்வதில்லை; உண்மையிலே, இனிமேல் எனக்கு எதுவும் வேண்டாம், உங்களுக்கு நன்றி. சற்று நேரம் நேரத்தைச் செலவழிப்பதற்காக நாங்கள் கடற்கரைக்கு மேலே இருந்தோம். நான் இந்தப் "பிராணியை" கப்பல் செப்பனிடும் துறைக்குக் கீழே பார்த்தபொழுது, என்னுடைய மகள் ஊஞ்சல்களின் மேல் இருந்தாள். நான் சுற்றித் திரும்பினபொழுது நான் அதைப் பார்த்தேன். பழங்காலக் கதையில் உள்ள ஒகோபோகோ அது என்று நான் உணர்ந்தேன்; நான் சற்று நேரம் திகிழடைந்தேன். நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடற்கரைக்குக் கீழே ஓடினேன். மேலும் நான் மேலும் மேலும் அலரினேன் என்று நான் உத்தேசிக்கிறேன், "அது அதுவாக இருக்கிறது!" அவள் சத்தமாக அலரிக்கொண்டிருந்தாள். அதை என்னால் நம்ப முடியவில்லை; அவளின் முகம் மிகவும் சிவப்பாக இருந்தது. அது மீன் பிடித்துக்கொண்டிருந்தது அல்லது அது ஏதாவது செய்துகொண்டிருந்தது. அது அங்கே நீண்ட நேரமாக இருந்தது, அதற்குப்பிறகு அது வெளியே நீட்டியது. மேலும் அது அந்தக் கம்பங்களின் வழியாகச் சென்றது. அது அதன் வழியே பிரயாணம் செய்தபடி அந்த மூன்று திமில்களையும் காண்பித்துக்கொண்டிருந்தது. மேலும் அவர்கள் அந்தக் கம்பங்களின் ஒரு முனையிலிருந்து மற்றவை வரையில் இருந்தார்கள்; அந்த மூன்று திமில்கள் ஒரே இடைவெளியில் இருந்தன. அங்கே சுமார் மேலே உள்ள மூலை வரையில் அது கடற்கரையின் வழியாக பிரயாணம் செய்தது. அதன்பின்பு அது திரும்பி அந்த ஏரியின் குறுக்காக அது நேராகச் சென்றது. தற்பொழுது தொலைபேசிகளின் அழைப்புகளை நாம் நிறுத்தப் போகிறோம். சரியா? அதன்பின்பு ஒகனாக்கன் பள்ளத்தாக்கில் மிகவும் அறியப்பட்டவரான ஒருவரை உங்களுக்கு நாங்கள் அறிமுகம் செய்யப்போகிறோம். அர்லினி கல் (Arlene Gull); ஒகோபோகோவைப் பற்றி அர்லினி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். காலை வணக்கம், அர்லினி. காலை வணக்கம் ஜான். காலை வணக்கம் தெரேஸா. காலை வணக்கம். நீங்கள் எத்தனை பார்வைக்காட்சிகளை எழுதி வைத்திருக்கிறீர்கள்? வார்த்தைகளின்படி நூற்றுக்கணக்கில். முதலாவது பார்த்த காட்சி எப்பொழுது இருந்தது? 1852 ஆம் ஆண்டில் முதல் முதலான பார்வைக் காட்சியாக இருந்தது. முதலாவது எழுதி வைத்த பார்வைக் காட்சியானது 1852ல் இருந்தது, மற்றும் தற்பொழுது 1980 ஆக இருக்கிறது. அங்கே ஒன்றுக்கும் மேலே ஒகோபோகோ இருக்க வேண்டும் என்று நாங்கள் அதை அர்த்தத்திற்கு எடுத்துக்கொள்ளுகிறோமா? அங்கே ஒன்றுக்கும் அதிகமாக காணப்படுவது நிச்சயம். ஒரு உருவாக்கப்பட்ட திரைப்படம் அங்கே இருந்து வருகிறது, அது 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதி என்று நான் நினைக்கிறேன். உங்களின் கண்களுக்கு முன்பாக இருக்கும்பொழுது, நீங்கள் பார்ப்பதை நம்பாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தக் காலைவேளையில் அந்தத் திரைப்படத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். 1968 ஆம் ஆண்டில் இந்தச் சுருட்டப்பட்டத் திரைப்படமானது, ஆர்ட் ஃபோல்டன் என்னும் பெயரையுடைய ஒரு நற்குண மனிதரால் எடுக்கப்பட்டது. ஜேஸில் அவர் தன்னுடைய பயணம் முடித்துத் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் கரையின் அருகில் வந்தபோது அந்த ஏரியின் வெளியே ஒரு பொருளைப் பார்த்தார். "பார், அங்கே ஒகோபோகோ இருக்கிறது" என்று அவர் தன்னுடைய மனைவியிடம் சொன்னார். அவரைப்பார்த்து அவள் சிரித்தாள். அவர் தன்னுடைய கேமராவை எடுத்து மற்றும் அந்தப் பிராணியைத் திரைப்படம் பிடிக்க ஆரம்பித்தார். நாம் இந்தத் திரைப்படத்தில் பார்பது தண்ணீரின் வழியாக நகரும் ஒரு பெரிய வாழும் பொருளைத்தான் பார்க்கிறோம். அது தண்ணீரின் மேலும் மற்றும் தண்ணீருக்கு உள்ளேயும் வெவ்வேறு வேகங்களிலும் மற்றும் வெவ்வேறு நேரங்களிலும் செல்லுகிறது. அந்தப் பிராணி மிகவும் வேகமாகப் புறப்படுகிறது மற்றும் தண்ணீரில் பின்னால் தெரியும் வழியை அதிகமாகவும் உண்டாக்குகிறது என்றும் அது காண்பிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நான் அதிகம் விரும்புகிற பகுதியாக இருப்பது இதுவாக இருக்கிறது, ஏனெனில் நீங்கள் ஒரு பிராணியைப் பார்க்கிறீர்கள்.......... தண்ணீரை அதிக வேகமாகத் தள்ளி, தண்ணீரின் பின்னால் தெரியும் வழியை அதிகமாக்கியதுடன் - அலையின் பெரிய செயலை உண்டாக்குகிறது. அதை நம்பக்கூடியதாக இது உருவாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். அங்கே ஏதாவது சமீபத்திய பார்வைக் காட்சிகள் இருந்திருக்கின்றனவா? இந்த ஆண்டில் சுமார் ஏழு அல்லது எட்டு பார்வைக்காட்சிகள் நமக்கு இருந்திருக்கிறது. மிகவும் சிறந்த பார்வைக்காட்சியாக ஒன்றை நாம் வைத்திருக்கிறோம். ஏன்? அது ஒரு ரீகர் குடும்பமாக இருந்தது. படகில் செல்லுவதற்கு அந்த நாள் தெளிவாக இருந்தது. அந்தத் தண்ணீரானது அமைதியாக, கண்ணாடிபோன்று வழுவழுப்பாக இருந்தது. நான் குறுக்காக பார்த்தேன் மற்றும் ஒரு பெரிய அலை என்னிடம் வருவதை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் அதை நான் அதிகம் கவனிக்கவில்லை, ஆனால் அது அருகில் வந்துகொண்டே இருந்தது. அங்கே காற்றோ அல்லது எதுவுமே இல்லாதபொழுது, அங்கே ஒரு அலை வருவது ஏன்? என்று அப்பொழுது எனக்குள்ளே நான் சிந்தித்தேன். எனவே என்னுடைய மகனை நான் அழைத்து, " இங்கே பின்னே வந்து ஒரு பார்வை பார். இங்கே ஏரியின் கீழே வருகிற, இது என்னவாக இருக்க முடியும் என்று உன்னால் சிந்திக்க முடியுமானால் பார்." என்று கூறினேன். அவன் அதை ஒரு பார்வை பார்த்து, "எனக்குத் தெரியவில்லை." என்று பதில் கூறினான். மேலும் எங்களுடன் எனது பேரனும் இருந்தான். அவன், " தாத்தா, அதுதான் ஒகோபோகோ!" என்று சொன்னான். அது எங்களுக்குள் நேராக வந்து பலத்த ஓசையுடன் மோதியிருக்கும், ஆனால் அந்தப் பக்கத்தின் மேல் நாங்கள் இயந்திரப் படகைத் திருப்பினோம். அதன்பின்பு ஒருவேளை 15 முதல் 20 நிமிடங்கள் இருக்கும், அதன் அருகில் செல்ல பின்தொடர்ந்தோம். அந்த மிகபயங்கரமான பிராணியானது சுமார் 4 முதல் 5 மீட்டர்கள் நீளம் மற்றும் அது தண்ணீருக்கு மேல் சுமார் 3 அடி இருந்தது என்று நான் சொல்லுவேன். அதற்கு முற்றிலும் ஒரு திமிலானது முன்பக்க தோள்பட்டைகளில் இருந்தது, மற்றும் வால் இருந்த பின்பக்கத்தில் ஒரு திமில் உடையதாக அது இருந்தது. அது வாலுடன் சுமார் 9 அல்லது அதற்கும் மேல் மீட்டர்கள் நீளம் உள்ளதாக இருந்தது; அதனுடைய முடிவை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் அதற்கு ஒரு நீண்ட வால் இருந்தது. அதற்கு நான்கு கால்கள் இருந்தன. அந்த மிகப்பயங்கரமான பிராணியின் எடை ஒருவேளை சுமார் 30 டன்கள் இருந்தது என்று நான் சொல்லுவேன். மேலும் அதனுடைய முன் தலையானது அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் அசைந்துகொண்டிருந்தது. அது மீனுக்காகப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அல்லது ஊட்டிக்கொண்டிருப்பதுபோல் அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றாக அது காணப்பட்டது. அது அதிகமான தண்ணீரின் அளவைக் கலக்கிக்கொண்டிருந்தது. அதை நானாகப் பார்த்திருக்கவில்லை எனில், அதை ஒருபோதும் நான் நம்பமாட்டேன். உண்மையிலே, யாராவது என்னை நம்பினாலோ அல்லது நம்பவில்லை என்றாலோ நான் உண்மையிலே கவலைப்பட மாட்டேன். நான் அந்த விலங்கைப் பார்த்தேன் மற்றும் அது இங்கு இருக்கிறது என்று நான் அறிவேன். அது ஒரு மிகப்பெரிய விலங்கு என்று நான் அறிவேன். பரவாயில்லாத வார்த்த இல்லாததினால், அது ஒரு வகையான "மிகப்பயங்கரமான மீனாக" இருந்தது, ஆனால் அது சுமார் 9 முதல் 11 மீட்டர்கள் நீளத்தில் இருந்தது. அதனுடைய தலையானது தண்ணீருக்கு வெளியே முன்னால் நீட்டிக்கொண்டிருந்தது, மேலும் வாலின் நீச்சல் செயலை நீங்கள் பார்க்க முடியும். மேலும் அலைகள் அதைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. நான் அதனுடைய இரண்டு படங்களை எடுத்தேன். அது ஏறத்தாள இதுபோன்று இருந்ததா? என்று நீங்கள் கேட்டீர்கள். எது வித்தியாசமாக இருந்தது? இதுபோன்று, ஆனால் இந்த துடுப்புகளை நான் பக்கவாட்டில் பார்க்க முடியவில்லை. சரியா. ஏனெனில், நான் பார்த்த மீனாக அது இருந்தது. அது எதுவாக இருந்தாலும், ஆனால் அவர்கள் பார்வைக்குள் இல்லை. அந்தத் தலை, அந்தக் கழுத்து மற்றும் உடலின் மேல் பகுதியை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். புளோரிடாவின்,பென்ஸகோலாவிலிருந்து கென்ட் ஹோவிந் பேசுகிறேன். நான் 100 ஹண்ட்லி தெரு நிகழ்ச்சியில் இங்கே கனடாவில் இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னால், அது 1994 ஆம் ஆண்டு என்று நான் நினைக்கிறேன், இங்கே உள்ள நிகழ்ச்சியில் நான் இருந்தபொழுது, "ஒரு வாழும் டைனோஸர்" என்னும் என்னுடைய புத்தகத்தை டாக்டர் ரோய் மேக்கல் அவர்களிடமிருந்து கொண்டுவந்தேன். மேலும் நான் கால் என்பவருடன் இருக்கிறேன், அவர் இங்கு எனக்கு அருகில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். "நான் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது அந்த ஒரு டைனோஸர் போன்று உள்ள ஒன்றை நான் பார்த்தேன்" என்று அவர் கூறினார். நான் இந்தப் பக்கத்திற்குத் திரும்பினேன், ராய் மேக்கலினுடைய புத்தகத்தின் 256 ஆம் பக்கம், மேலும் கால் நீங்கள், "ஏய், அவைகளில் ஒன்றை நான் பார்த்தேன்!" என்று கூறினீர்கள். நீங்கள் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு மற்றும் நீங்கள் எதைப் பார்த்தீர்கள், மற்றும் தற்பொழுது நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்றும் சொல்லுவீர்களா? ஐயோ, ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்து அவர்கள் உங்களுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமானால் - நீங்கள் எதைப் பார்த்தீர்கள் என்பதைப் பற்றி சற்று விவரியுங்கள். நான் எப்பொழுதும் பெற்றிருந்த திடுக்கிடும் அனுபவங்களில் அதிகமான ஒன்றாக அது இருந்தது. அது சுமார் 1963 ஆம் ஆண்டாக இருந்தது. திரும்பவும் நெய்ரோபியில் எனது காரை எடுப்பதற்க்காக, கென்யாவின் பழைய சாலைகளின் வழியாக என்னுடைய பாதையில் நான் இருந்தேன். நான் இந்த பழைய சேவ்ரோலெட் சாலையில் சென்றுகொண்டிருந்தேன், அது ஒருவேளை பெரும்பாலும் சாலைகளுக்கு மிகவும் பெரியதாக இருந்திருக்கலாம், ஏனெனில் பாதிக்கப்பட்ட சாலையாக இருப்பதினால். மெதுவாகச் செல்லுவதைக் காட்டிலும் சீக்கிரமாக நான் சென்றுகொண்டிருந்தேன். முஹோரோனி என்று அழைக்கப்படுகிற இடத்திற்கு அருகில் அது ஒரு மலை நாடாக இருந்தது. அது வெடிப்புப் பள்ளத்தாக்கின் கீழே இருக்கிறது, ஆனால் அந்த வெடிப்புப் பள்ளத்தாக்கின் ஒரு மலைப்பகுதியாகும். அந்த மலையின் கண் புருவத்திற்கு நாங்கள் மேலே வந்துகொண்டிருந்தபொழுது.......ஓ, என்னுடைய மனைவி என்னுடன் இருந்தாள்; திடீரென எங்களுக்கு முன்பாக அது அங்கே படுத்துக்கொண்டிருந்தது - சாலையின் குறுக்காக 2 முதல் 3 மீட்டர்கள் நீளமாக இருந்தது. அது ஒரு முதலை என்று முதலில் நான் நினைத்தேன். மேலும் அதற்குப்பிறகு, இல்லை, அது ஒரு முதலையாக இருக்காது என்று நான் நினைத்தேன். இந்த நாட்டின் வறட்சியான ஒரு பகுதியாக இது இருக்கிறது. அதன்பின்பு, நான் அதைப் பார்த்தபொழுது, நாங்கள் கீழே வேகத்தைக் குறைத்தோம். அந்தக் காரை நான் நிறுத்தினேன், மற்றும் சுமார் 10 நிமிடங்கள் அங்கே அதைப்பார்த்துக்கொண்டு அமர்ந்தேன். நான் அதைப் பார்த்தபொழுது, "வரலாற்றுக்கு முந்தின" என்ற வார்த்தையை நான் நினைத்தேன்; அதுதான் என்னுடைய மனதின் வழியாகச் சென்றதாக இருக்கிறது. "இது உண்மையாக இருக்க முடியாது" என்று நான் சொன்னேன். நான் இதுபோன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த ஒன்றைப் போல முழுவதுமாக இல்லை. வால் முதல் மேலே தலையின் பின்பக்கத்தில் முகடுகளின் வரிசைகள் இருந்தன. முகடுகள், முக்கோணங்களைப் போன்றுள்ள, முழுமையான முக்கோணங்கள், தலைமுதல் வால் வரையில் உள்ள அனைத்து வழியிலும் இருந்தன. மேலும் அது படுத்துக்கொண்டிருந்தது, சாலையின் மேல் கீழே காலை மடக்கி உட்கார்ந்தது. சூரியனின் வெளிச்சத்தில் தனது உடலை அது சூடாக்கிக்கொண்டு இருந்ததுபோல் காணப்பட்டது. எனவே, நான் அந்தப் பொருளை பத்து நிமிடங்கள் பார்த்தேன். அந்த நாளில் என்னுடைய கேமராவை நான் வைத்திருக்காமல் இருந்ததற்காக என்னையே நான் சுட முடியும். நான் வைத்திருக்க விரும்பினேன், ஆனால் அது அங்கே இருந்தது, இதற்கு முன்பாகவோ அல்லது எப்பொழுதுமோ அதுபோன்று எதையுமே நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அதைப் பற்றி நான் மக்களிடம் கேட்டிருக்கிறேன், மேலும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும் அதைப்பற்றி நான் கேட்டிருக்கிறேன். "கென்யாவில் இதுபோன்று உள்ள ஏதாவது பிராணியை நீங்கள் பார்த்து அல்லது கேட்டு இருக்கிறீர்களா?" என்று நான் கேட்டேன். "இல்லை, இன்று அங்கே அதுபோல ஒன்றுமே வாழவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். "இதுபோன்ற ஒன்றை நான் பார்த்தேன்" என்று நான் சொன்னேன். சற்று நேரம் வேண்டுமென்றே விரைவாக நான் அவர்களுடன் வாக்குவாதம் செய்தேன். "அது உங்களுடைய கற்பனைகளிலிருந்து வந்த ஏதோ ஒன்றாக அது இருக்கவேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், நானும் எனது மனைவியும் இருவரும் அதைப் பார்த்தோம். எவராவது அதுபோன்றதை பார்த்திருக்கிறார்களா?என்று பல ஆண்டுகளாக வல்லுனர்களிடம் நாங்கள் கேட்டோம். எவரும் எப்போதும் பார்க்கவில்லை, அல்லது நான் இருந்ததிலிருந்து இல்லை. ஆனால், அங்கே அது சாலையின்மேல் ஓரமாக படுத்துக்கொண்டிருந்தது. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முற்றிலும் இந்த வரைபடத்தில் இருப்பது போன்று உயரமாக அது எழுந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு ஒரு புதர் பகுதியில், அந்த நாட்டின் மிகவும் வறட்சியான பகுதியின் உள்ளே அது அலைந்தது. அது சற்றுமுன் புறப்பட்டுச்சென்றது, மேலும் இந்த உலகத்தில் இது எதுவாக இருக்கிறது என்று மரியனும் நானும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தோம். அது என்ன நிறத்தில் இருந்தது? அது தூசிபோன்ற சாம்பல் நிறமான வகையாக இருந்தது. அந்தக் கண்களை நீங்கள் பார்க்க முடிகிறதா? ஆம், அவைகள் கண்களைச் சிமிட்டின. உண்மையில் அது தனது தலையைத் திருப்பி எங்களைப் பார்த்தது; அது எங்களைப் பார்த்து பயந்ததாகத் தெரியவில்லை. அதன் கண்ணின் கருமணியின் வடிவத்தை உங்களால் கவனிக்க முடிகிறதா; அது குறுகிய நீண்டதாக அல்லது வட்டமாக இருந்ததா? அதைப் பார்ப்பதற்கு நான் மிகவும் அருகில் இருந்தேன் என்று நான் நினைக்கவில்லை. அதனுடைய மூக்கின் வடிவம் ஒரு முதலைபோன்று இருந்ததா? நீர் யானையைக் காட்டிலும் ஒரு முதலை போன்று அதிகம் இருந்தது என்று நான் சொல்லுவேன்; அதற்கு ஒரு நீண்ட முகம் இருந்தது. நான் சில ஆப்பிரிக்க மக்களிடம் கேட்டேன், மற்றும் அது ஒரு தலைமைப் பல்லியாக இருந்தது என்று அவர்கள் கூறினார்கள். அது முடியாதது என்று நான் சொன்னேன். நான் பல தலைமையான பல்லிகளைப் பார்த்திருக்கிறேன். 3 மீட்டர்கள் நீளமுள்ள ஒன்றை நான் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை; அதுபோன்ற நீளமான ஒன்று அங்கே ஒருபோதும் இருந்ததில்லை. நான் தற்செயலாக இரண்டு தலைமையான பல்லிகளை, அவைகளின் மேல், என்னுடைய காரினால் இடித்துக் கொன்று இருக்கிறேன். அவைகள் பின்புறத்தில் முகடுகள் இல்லாத, வழவழப்பான தோலுடன் இருக்கின்றன. நான் ஒன்றைப் பார்த்தபொழுது அது ஒரு தலைமைப் பல்லி என்று அறிகிறேன். இது ஒரு தலைமைப் பல்லியாக இல்லை; இந்தப் பொருளானது அந்த முகடுகளை கீழே அதன் பின்பக்கத்தில் உடையதாக இருந்தது. அதற்கு வழவழப்பான தோல் அல்லது செதில்கள் இருந்ததா என நீங்கள் கூற முடியுமா? முதலையின் ஒரு இனத்தைப் போல அதிக சுரசுரப்பான வகையாகக் காணப்பட்டது. சரி, சரியாக இருக்கிறது. ஓரத்தின் மேலே, அதற்குச் செதில்கள் இருந்ததாக நான் நினைக்கவில்லை. நிச்சயத்துடன் நான் கூற முடியாது. நல்லது எல்லாம் சரியாக இருக்கிறது. அது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது 1997 ஆம் ஆண்டு. எனக்கு விளங்குகிறது. அங்கே சில டைனோஸர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டே வருகிறேன். மேலும் அது வரலாற்றுக்கு முன்பு இருந்த ஏதோ ஒன்று என்று உங்களின் மனதில் முதல் சிந்தனையாக இருந்தது; சரியா? அந்த நேரம் வரைக்கும் நான் ஏற்கனவே பெற்றிருந்த அனைத்துக் கல்வியினாலும் நான் முன்னரே கட்டுப்படுத்தப்பட்டிருந்திருக்கிறேன். சரியா? இந்தப் பொருட்கள் இருக்கவில்லை. இது எதுவாக இருந்தாலும், இது ஒரு டைனோஸராக இருக்க முடியாது. பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கிற முதல் சிந்தனை அதுவாக இருக்கிறது. அது ஏதோ ஒரு வகையான ஒரு பல்லியாக இருந்திருக்கும் என்று நான் கருதினேன். ஏனெனில் ஒரு வீட்டுப்பல்லி முதல் தலைமைப் பல்லிகள் வரையிலான அனைத்து வழிகளிலும், ஒவ்வொரு அளவிலும் பல்லிகள் உங்களிடம் இருக்கின்றன. இங்கே 100 ஹண்ட்லீத் தெருவில் நீங்கள் வேலை செய்கிறீர்கள். அவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், அவர்கள் திரு. கால் பாம்பே அவர்களிடம் அழைத்து மற்றும் கேட்பதற்கு இங்கே உள்ள தொலைபேசி எண் எதுவாக இருக்கிறது? என்னுடைய தொலைபேசி எண் பகுதி எண் 1-905-335-7100, நீட்டிப்பு 3206. இதை நீங்கள் நம்பவில்லையெனில், அவரைத் தொலைபேசியில் அழையுங்கள். அதை நான் பார்த்தேன். "அதுதான் நான் பார்த்ததாக இருக்கிறது!" என்று நான் இந்தப் படத்தைப் பார்த்தபொழுது நான் நினைத்தேன். உங்களால் முடிந்தால் இந்தப் படத்தின் மேல் பெரியதாக்கி அவைகளைத் தயவாகப் பெற்றுக்கொள்ளவும், மேலும் அத்துடன் அந்த நிகழ்ச்சியை நாங்கள் நிறுத்துவோம். உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், உதவிசெய்ய நாங்கள் மகிழ்ச்சியடைவோம். டைனோஸரின் மேல் அதிகமானத் தகவலை நீங்கள் விரும்பினால் எங்களூக்கு ஒரு தொலைபேசி அழைப்புக் கொடுங்கள். நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சிருஷ்டிப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸர் பற்றிய எங்களின் வீடியோ நாடாக்களை அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எனவே 1962 ஆம் ஆண்டில் நீங்கள் பார்த்த அந்த நாளாக அது இருக்கிறதா? நான் இதுவரைப் பார்த்ததில் இது மிகவும் அருகாமையில் உள்ள பொருளாக இருக்கிறது. சரி, உங்களுக்கு மிக்க நன்றி, சகோதரரே. இந்த நேரத்தை நான் பாராட்டுகிறேன், மற்றும் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள், உங்களுக்கு நன்றி. சிருஷ்டிப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸரின் இந்த வீடியோ தொடர்களை நீங்கள் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து உண்மை மற்றும் அறிவியலின் உண்மைகள் பற்றி அறிவதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவெனில், நீங்கள் பரலோகம் செல்லுவீர்களா அல்லது இல்லையா என்பதின் உண்மையை அறிவதே முக்கியமாகும். நிங்கள் இதுவரை கிறிஸ்துவை உங்கள் மீட்பராக நம்பவில்லையெனில், நீங்கள் பரலோகம் செல்ல உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதை விவரிக்க என்னை அனுமதியுங்கள். நாம் அனைவரும் பாவிகள் என்று வேதாகமம் கூறுகிறது. நாம் அனைவரும் தேவனுடையச் சட்டங்களை உடைத்துவிட்டோம். சிருஷ்டிகருக்கு நாம் கீழ்ப்படியவில்லை. நாம் தீய காரியங்களைச் செய்திருக்கிறோம்.. நாம் பாவிகளாக இருக்கிறோம். சில மக்கள் மற்றவர்களைவிட மோசமானவர்கள், மனிதனின் பார்வையிலாவது, ஆனால் நாம் தேவனின் அனைத்துச் ச ட்டங்களையும் உடைத்திருக்கிறோம். நீங்கள் மனம் திரும்ப வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. மனம் திரும்பு என்ற வார்த்தையின் அர்த்தம் "திரும்ப" ; இதனுடைய உண்மையான அர்த்தம் இரண்டு காரியங்கள்: உங்கள் பாவத்திலிருந்து திரும்புங்கள், மற்றும் தேவனிடம் திரும்புங்கள்" உங்களுடைய மனோபாவத்தில் ஒரு மாற்றத்தைத் தேவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார், அங்கே நீங்கள் சொல்லுங்கள், "ஆண்டவரே, இனிமேல் நான் தவறுசெய்ய விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள். நான் உங்களுக்கு விரோதமாக குற்றம் செய்திருக்கிறேன். சரியானதைச் செய்ய நான் விரும்புகிறேன். நீங்கள் பாவத்திலிருந்து திரும்பித் தேவனிடத்திற்குத் திரும்பி, சொல்லுங்கள், "தேவனே, நீர் தயவாய் என்னை மன்னிப்பீரா? என்னை மீட்பீரா?" வேதாகமத்தில் உள்ள ரோமர் 3:23 சொல்லுகிறது, "எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்களாகினோம்." நீங்கள் ஒரு பாவியென்று ஒப்புக்கொள்ளவேண்டும். இரண்டாவது, வேதாகமத்தில், ரோமர் 6:23-ல் "பாவத்தின் சம்பளம் மரணம்." என்று சொல்லுகிறது. நம்முடைய பாவத்தினால் நாம் மரித்து, நரகம் போவதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம். ஆனால் இயேசு உங்களுக்காக மரித்தார். அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் பரலோகம் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இலவசமான மீட்பை அவரிடத்தில் கேட்கிற எவருக்கும் நித்திய வாழ்வு என்னும் பரிசை தேவன் தருவார் என்று ரோமர் 6: 23 கூறுகிறது. இது ஒரு இலவசப் பரிசாகும். மேலும் ரோமர் 10:13 கூறுகிறது, "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." "கர்த்தாவே நான் ஒரு பாவி, தயவாய் என்னை மன்னியும் என்று அவரிடம் கேட்டால், நித்திய வாழ்வு என்னும் இலவசப் பரிசை அவர் உங்களுக்குத் தருவார். உங்களில் ஒவ்வொருவரும் இப்பொழுதே என்னுடன் சேர்ந்து ஜெபிப்பீர்களா? மேலும் கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட மீட்பராக ஏற்றுக்கொள்வீர்களா? அங்கே மாயாஜால வார்த்தைகள் இல்லை. தேவன் உங்கள் இருதயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் நீங்கள் இதைச் சொல்ல முடியுமானால், தேவன் உங்களை மன்னிப்பார். இதைச் சொல்லுங்கள், "அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நான் ஒரு பாவி என்று எனக்குத் தெரியும். நான் உம்முடைய கட்டளைகளை மீறி இருக்கிறேன். அதற்காக நான் வருத்தமடைகிறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். என்னுடைய கணக்கின்மேல் உம்முடைய இரத்தத்தை வைப்பீராக. என்னுடைய பாவங்களை மன்னித்து, என்னைப் பரலோகத்திற்குச் கொண்டுசெல்வீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்." வேதாகமம் சொல்லுகிறது, நீங்கள் கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டால், நீங்கள் மீட்கப்படுவீர்கள். எனவே, உங்களை மீட்கும்படி நீங்கள் கர்த்தரிடத்தில் கேட்டிருந்தால், அவர் உங்களை மீட்டுக்கொள்வார் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இப்போது வளர்வது உங்களின் பணியாகும். உங்கள் வேதாகமத்தை வாசியுங்கள், ஜெபம் செய்யுங்கள். வேதாகமத்தை விசுவாசிக்கிற ஒரு நல்ல சபையுடன் நீங்கள் பங்குகொள்ளுங்கள், ஒரு நல்ல கிறிஸ்தவராக வளர ஆரம்பியுங்கள். உங்களுக்கு மிக்க நன்றி. நாங்கள் ஏதாவது விதத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கமுடியுமானால், தொலைபேசியில் அழையுங்கள். உதவிசெய்வதில் நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம். நீங்கள் கேட்கப்போகிறது என்னவெனில் ஒரு ஒலி நாடாவாகும். கோங்கோ சதுப்பு நிலத்தில் அந்தப் பிராணியின் கர்ஜனைச் சத்தம் தெளிவாகத் தெரிகிறது. மொக்லி மெம்பீ என்று அங்கே உள்ள பூர்வீகக் குடிகள் அதை அழைக்கிறார்கள். அது உயிருடன் வாழும் டைனோஸர்களில் ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு கர்ஜிக்கும் சத்தத்தின் இறுதிக்கு அருகில் சிறகடிக்கும் சத்தம் போன்றோ அல்லது அறையும் சத்தம் போன்றோ காணப்படுகிறது. இது வீட்டில் காணப்படும் பல்லிபோல் இருக்கலாம் என்று சிலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். அது அதன் தொண்டைக்கு அடியில் தோலின் சிறகடியினால் ஒரு சிறிய கர்ஜனைச் சத்தமிடுகிறது. அதன் தொண்டையின் பின்பாக அது அறைந்து அறையும் சத்தத்தை உண்டாக்குகிறது. இதுவரையில் நாங்கள் இதைப் பற்றி மிகச்சிறந்ததாக வைத்திருப்பது அதுவாக இருக்கிறது. எனவே, நீங்கள் ஏதாவது அதிகம் கேட்டால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். இதை நீங்கள் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று நான் நம்புகிறேன். கர்ஜனைச் சத்தமிடுங்கள்!! மேலும் தகவல்களுக்கு அல்லது சிருஷ்டிப்பு அறிவியல் நற்செய்தி ஊழியம் வழங்கும் மற்ற பொருட்களுக்கு, எங்களின் முகவரிக்குக் கடிதம் எழுதுங்கள்: சிருஷ்டிப்பு அறிவியல் நற்செய்தி, தபால் அலுவலகப் பெட்டி எண்: 37338, பென்ஸகோலா, ஃப்ளோரிடா-32526, அமெரிக்கா என்ற முகவரியில் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளவும். தொலைபேசியில் தொடர்புகொள்ள : 1-850-479-3466. அல்லது நீங்கள் எங்களுடைய CSE இணையதளமான www.drdino.com என்கிறதில் தொடர்புகொள்ளலாம். அதாவது www.drdino.com என்கிற இணையதளம். [முற்றுப் பெற்றது. 13.5]